Satsang

Monday, January 26, 2026

KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 28 | Day_28_KTKV

| SATSANG TITLE | KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV \- DAY 28 |
| :---- | :---- |
| LOCATION | MAHĀKAILĀSA |
| DATE OF TALK | 26 JAN 2026 |
| DURATION | 02.40.00 |
| LANGUAGE | TAMIL |
| TALK TYPE | JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES |
| SPECIAL OCCASION | JAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 |
| TRANSCRIPT STATUS | FINAL UNICODE |
| NOTE: | FINAL UNICODE TO PUBLISH |

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பராஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

கைலாஸ நித்யானந் 49வது ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், அவதார ப்ரஹ்மோத்ஸவம், அவதார தின ப்ரஹ்மோத்ஸவம், 28 ஆம் நாள், சண்டேசர் திருவிழாவோடு நித்யோத்ஸவத்திற்குள் செல்கின்ற நாள். ஏனென்றால், கைலாஸத்திலே உத்ஸவம் நிறைவடைவதே இல்லை, நித்யோத்ஸவம் தான். இன்றிலிருந்து நித்யோத்ஸவம். நித்யானந்தோத்ஸவம் நிறைவுற்று, ப்ரஹ்மோத்ஸவம் நிறைவுற்று, நித்யோத்ஸவத்திற்குள்ளே நுழைகின்றோம். 28ஆவது திருநாள்.

கதவைத் திற காற்று வரட்டும், த்யான ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாத நிகழ்வின் 28ஆவது நாள், ஜனவரி 26, 2026\. இந்த நன்னாளிலே, உத்ஸவங்களிலும், த்யான ஸத்ஸங்ங்களிலும் கலந்துகொள்வதற்காக, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயங்கள் அனைத்திலும் ஒன்று கூடி இருக்கும் அன்பர்கள், சீடர்கள், க்தர்கள் அனைவரையும் மற்றும் இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், க்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

உலகம் முழுவதிலும் கைலாயத்தின் தொலைக்காட்சிகள் வழியாக நேரலையில் இணைந்திருக்கும், அன்பர்கள், க்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி, மஹா கைலாஸத்திருந்து... பரமாத்வைத ப்ராப்திரஸ்து ஆனந்மாக இருங்கள். பரமாத்வைதத்தில் நிலைத்திருந்து, ஆனந்மாக இருங்கள். ஆசிகள். பூரண நல்லாசிகள்.

இந்த, 28 நாள் ஸத்ஸங்ங்களிலும், நீங்கள் எல்லோரும் கேட்டிருக்கின்ற கேள்விகள், உங்களுடைய reactions, responses, sentiments... அவைகளுக்கான பதில்கள், விளக்கங்களை இன்று அளிக்க முயற்சிக்கின்றேன்.

நாங்கள் உலகம் முழுவதும் இருந்து, ஸநாதன ஹிந்து ர்மத்திற்காக, ஒரு மிகப்பெரிய library செய்துகொண்டிருக்கிறோம். இதுவரை digital-ஆகவும், physical-ஆகவும் ஒரு 2 கோடி புத்தகங்களை collect பண்ணியிருக்கின்றோம். Digital-ஆக மட்டும் கிடைத்த புத்தகங்களை print பண்ணி, book-ஆக, hard copyஆகவும் வைத்து, hard copy-யாக, book-ஆக மட்டும் கிடைத்த புத்தகங்களை, digitize-ம் பண்ணி, organize செய்துகொண்டிருக்கின்ற ஒரு பெரும் திருப்பணி செய்துகொண்டிருக்கிறோம். ஏறத்தாழ ஒரு 60,000 பேர் உலகம் முழுவதிலுமிருந்து, இந்த திருப்பணிக்காக எங்களுக்கு voluntary service செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த புத்தகங்களை எல்லாம் classify பண்ணிக்கொண்டிருக்கின்றோம் . எந்தெந்த, ஜ்ஞாநிகள், அவதார புருஷர்கள், யோகிகள், ஸித்தர்கள் \- என்னென்ன மாதிரி ஸம்ப்ரதாயம், அந்த classification... அதை பண்ணிக்கொண்டிருக்கின்றோம்.

அடுத்தது, 'இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு பலி கொடுக்கலாமா?' என்பதைப் பற்றி... அது சம்பந்தமாக ஒரு வீடியோவை தஞ்சாவூர் சேனல் போட்டிருந்திருக்கின்றார்கள். அது viral- ஆக போயிருக்கின்றது. Million views-க்கு மேல் ஓடியிருக்கின்றது. இது சம்பந்தமாக என் கருத்து... நான் மரபு சைவக் குடும்பம். பரம்பரை பரம்பரையாக, தமிழ்நாட்டிலே, ஸநாதன ஹிந்து ர்மத்தில், சைவத்திலே வேரூன்றிய, கோயில் பெருங்குடி குலமான சைவ வேளாளர் குலத்திலே பிறந்து, வளர்க்கப்பட்டு, அந்த மரபிலேயே வளர்க்கப்பட்டு, அதுமட்டுமல்லாமல் அந்த மரபிலேயே பெருமான், பரம்பொருள், பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், அந்த மரபிலேயே பரமானுபூதியும் பெற்று, கருவழியாகவும், குரு வழியாகவும், இந்த பரம்பரையே எனக்கு பரமானுபூதி கொடுத்தது. நானும் கைலாய நாடும், எங்கள் ஸம்ப்ரதாயம் எல்லாமே, முழுக்க முழுக்க சைவ உணவை மட்டுமே ஏற்று கொள்பவர்கள். நான் முதலிலேயே சொல்லியிருக்கின்றேன்... சைவ உணவு மட்டுமல்ல, அந்த உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்து, ப்ரஸாத்தை மட்டும் சாப்பிடுகின்ற prasaadherians. Vegetarians மட்டுமல்ல, prasaadherians நாங்கள். அது ஒன்று.

பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், எனக்கு என்னுடைய குலதெய்வம் கூட, திருவண்ணாமலையில் இருக்கின்ற மஹா மாரியம்மன். அவர்களுக்கும் பலியிட்டு பூஜை செய்கின்ற வழக்கம் இல்லை. அதனால், சைவ படையல்தான். பொங்கலிட்டு, காய்கறி, பழங்கள், தேங்காய், வாழைப்பழம் \- இதெல்லாம் வைத்து படையலிட்டு பூஜை செய்கின்ற வழக்கம்தான். எங்களுடைய இன்னொரு குலதெய்வமான முனீஸ்வரனுக்கும் சைவப் படையல் தான். So, அதனால் என்னுடைய வாழ்க்கையில், நான் பிறந்து வளர்ந்த குலத்திலே, எங்கள் குலதெய்வங்களுக்குக் கூட சைவப் படையல் தான். அதனால் எனக்கு அந்த எந்த சங்கடமும் வந்தது இல்லை. பிரச்சினையும் இல்லை. இதுதான், நாங்கள் கடைபிடிப்பது.

இன்னொன்று: கைலாயத்தில் vegetarian மட்டுமல்லாமல், animal products எதையுமே உபயோகப்படுத்தக் கூடாது. மரங்களை வெட்ட மாட்டோம். நீங்கள் எங்களுடைய எந்த கைலாஸத்திற்கு வேண்டுமானால் போய் பாருங்கள். மரங்கள்... அதாவது அந்த நிலம் எங்களுக்கு அளிக்கப்படும் பொழுது, பெரிய பெரிய மரங்கள் இருந்தால், அந்த மரங்கள் வெட்டப்படாமலேதான் கட்டிடங்கள் கட்டப்படும். கைலாயம் அமைக்கப்படும். மரங்களைக்கூட வெட்ட மாட்டோம். நாங்கள் அந்த மாதிரி ஸம்ப்ரதாயம் எனும்பொழுது, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த அஹிம்ஸை, ஜீவகாருண்யம் என்பது, பரமானுபூதியை நமக்கு அளிப்பதற்காக, ஒரு மிக அருமையான, மிக உயர்ந்த ஸத்யம். அதிலெல்லாம் சந்தேகமே இல்லை.

சற்றே பொறுமையோடு கேளுங்கள். ஏன் ஒரு நீண்ட இடைவெளியோடு பேசுகிறேன் என்றால்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பல நேரத்தில், நாம் வைத்திருக்கின்றக் கருத்துக்கள் \- இதையெல்லாம் விட, மிகப்பெரியது இந்த ப்ரபஞ்சமும், ப்ரபஞ்சத்தின் விதிகளும். ப்ரபஞ்சம் வந்து ஒரு complex \-ஆன, மிகப்பெரிய function ஆகின்ற network ஐயா. இதில், ஒரு தனிமனிதன் பரமானுபூதியை அடைய வேண்டும் என்பதுதான் மிக உயர்ந்த நன்மை. அதிலெல்லாம் சந்தேகம் இல்லை.

நம்முடைய வேதாகம ஸம்ப்ரதாயங்களிலயே ரொம்ப தெளிவாகச் சொல்கின்றார்கள்... 'யார் யாரெல்லாம் தங்கள் உணர்வு நிலை உயர்ந்து, உணர்வாலே ஸந்ந்யாஸம் பழுத்தவர்கள்.... அந்த ஸந்ந்யாஸம் பழுத்தவர்கள், குலதெய்வங்களுக்கோ, உயிரோடு இருகின்ற அல்லது இறந்துவிட்ட முன்னோர்களுக்கோ, தேவர்களுக்கோ, ரிஷிகளுக்கோ \- எந்த கடமையையும் ஆற்ற வேண்டியதில்லை. நீங்கள் எல்லா கடமையிலிருந்தும் விடுபட்டுவிடுகிறீர்கள். So, இப்பொழுது அது மாதிரியான நபர்கள், நிச்சயம் பலி கொடுக்க வேண்டியதில்லை.

உதாரணத்திற்கு ராமகிருஷ்ண மடம். தந்த்ர ஸம்ப்ரதாயத்தின் படி, காளி பூஜையின் போதும், துர்கா பூஜையின் போதும் மிருக பலி அளிக்கப்பட்டாக வேண்டும். ஆனால் ராமகிருஷ்ண மடம் ஸந்ந்யாஸ ஸம்ப்ரதாயம் என்பதனால், பலி கொடுக்க வேண்டிய 'விதி' ஸந்ந்யாஸிகளுக்கு இல்லை, தேவையில்லை. அதனால் அவர்கள் மிருக பலி கொடுக்க மாட்டார்கள். வெறும் பூசணிக்காய் மற்றும் தேங்காய் போன்றவைகளை பலியிட்டுவிட்டு, பூஜை செய்து விடுவார்கள். அது மாதிரி இந்த ஸந்ந்யாஸம் பழுத்தவர்களுக்கு, இந்த கடமைகள் இல்லை. செய்ய வேண்டிய தேவை இல்லை.

ஆனால், க்ரு'ஹஸ்தர்களாக இருப்பவர்களுக்கு கடமை உள்ளது. தங்களுடைய வாழுகின்ற பெற்றோர்கள், முன்னோர்கள் அல்லது இறந்துவிட்ட முன்னோர்கள் \- பித்ருக்களுக்கும், குலதெய்வத்திற்கும், குல குருவிற்கும், தங்களுடைய குலத்தின் ஸம்ப்ரதாயங்களுக்கும் அவர்களுக்கு கடமை உள்ளது. தங்களுக்கு உரிய பாரம்பரியங்களை செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மனிதன் எந்த நிலையிலே இருக்கின்றானோ அந்த நிலையில், அவனுக்கு எந்தெந்த உதவிகள் செய்யப்பட வேண்டுமோ செய்யப்பட்டு, அவன் அடுத்தடுத்த நிலைக்குச் செல்வதற்கு, வழிகாட்டப்பட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.

என்னுடைய அனுபூதிப்படி, வேமொடு ஆமம் மெய். புராணங்கள் மெய்.

இன்னொரு விஷயம்: நன்றாக, தெளிவாகச் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது, என்னுடைய ஆத்ம ப்ரமாணம், என்னுடைய அவிச்சின்ன குரு பரம்பரையான குருமார்கள் \- ஆப்தர்கள் எனக்கு அருளிய ஆப்த ப்ரமாணம், ஶாஸ்த்ர ப்ரமாணம் \- இந்த மூன்றும் எனக்கு அளித்த இந்த அனுபூதியை, நான் இப்போது உங்களுக்கெல்லாம் சொல்கிறேன்.

நாங்களே, முழுக்க முழுக்க சைவர்கள் மட்டுமல்லாது, ஜீவகாருண்யத்தையும், அஹிம்ஸையையும் வாழ்பவர்கள். ஆனால் இந்த ப்ரபஞ்சம், என்னுடைய அனுபூதியையும், நான் வைத்திருக்கும் கருத்துக்கள், சொல்லுகின்ற உபதேஸங்கள் \- இதையெல்லாம் தாண்டியது என்பதைப் பற்றி நான் ரொம்ப தெளிவாக இருக்கின்றேன். அதனால், We are all much more than social, political, spiritual, religious opinions we carry.

ப்ரபஞ்சமும் \- நாம் வைத்திருக்கின்ற சமூக, ம, ஆன்மீக கருத்துக்கள், நம்பிக்கைகள்... இதைவிட அதிகமானது. அதனால், தனக்குள் அந்த அளவுக்கு பரமானுபூதியும், ஸந்ந்யாஸம் பழுத்தவர்கள், உங்களுடைய குலக்கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. நிறைவேற்றாததனால் உங்களுக்கு எந்த கர்மமும், பிரச்சினையும் வராது.

இது போக, க்ரு'ஹஸ்தர்கள் அனைவரும்… உணர்விலே ஸந்ந்யாஸம் பழுக்காத, அனுபூதி \- பரமானுபூதி பழுக்காத, முயற்சி செய்து கொண்டிருக்கின்ற அல்லது முயற்சியே செய்யாத க்ரு'ஹஸ்தர்கள் அனைவரும், தங்களுடைய மரபுகள் படி, உயிரோடு இருக்கின்ற முன்னோர்கள், இறந்துவிட்ட முன்னோர்கள், குலதெய்வம், குலகுரு போன்றவர்களுக்கு மரபுப்படி என்னென்ன கடமைகளை நீங்கள் ஆற்ற வேண்டுமோ, அவைகளை செய்ய வேண்டும் என்பதுதான், என்னை நம்புகின்ற க்தர்களுக்கு நான் சொல்கின்ற செய்தி.

அதனால், உங்களுடைய குல வழக்கப்படி, உங்கள் குலதெய்வங்களுக்கு, பலி பூஜை செய்து வழிபடுகின்ற வழக்கம் இருக்குமானால், நீங்கள் ஒரு க்ரு'ஹஸ்தராக இருப்பீர்களானால், நீங்கள் அதை நிறைவேற்றுங்கள் என்பதைத்தான் நான் சொல்ல வருகின்றேன். நீங்கள் அதை சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்த பலியிடப்படுகின்ற உயிரினுடைய அந்த உடல், அந்த மாமிசத்தை உண்ண வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்களுடைய குலதெய்வங்கள், நீங்கள் இருக்கின்ற அந்த மனித நிலையில் இருந்து சற்று உயர்வடைந்த தெய்வங்கள், ஒரு நிலையில் இருக்கின்ற தெய்வங்கள். அவர்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்றெல்லாம் judge பண்ணுதற்கு எல்லாம் நமக்கெல்லாம் தகுதி இல்லை. அதனால், நிச்சயமாக நம்மினும் உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். அதனால், உங்களுடைய குடும்பத்தின் பாரம்பரியங்கள் மரபுகளை, நீங்கள் க்ரு'ஹஸ்தராக இருக்கின்ற காலம் வரை நிறைவேற்றுங்கள். இது, என்னுடைய \- கைலாஸத்தினுடைய, அன்பர்கள், க்தர்கள், சீடர்கள், மற்றும் என்னை நம்புகின்ற, க்தர்கள், அன்பர்கள், சீடர்கள் இவர்களுக்கு எல்லோருக்கும் நான் சொல்லுகின்ற ஆன்மீக உபதேஸம்.

நான் பலமுறை சொல்வேன். கைலாஸவாசியாக மாறிவிட்டார்கள் என்றால்.... அதாவது சிலபேர், தேவர்கள் குடும்பத்தில் இருந்து, கவுண்டர்கள் குடும்பத்தில் இருந்து, வன்னியர் குடும்பத்தில் இருந்து, கைலாஸவாசியாக மாறியிருப்பார்கள். அவர்கள் ஸந்ந்யாஸம் எடுத்துவிட்டால், குலதெய்வம்... அதாவது வீட்டிற்குப் போய் அந்த குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பலி, பூஜைகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், க்ரு'ஹஸ்தர்களாக இருந்தார்களானால் நானே சொல்லுவேன், ''அப்பா அந்த குலதெய்வ பழக்கம் என்ன இருக்கோ, அதை ஊருக்கு போய், அந்த காலகட்டம் அந்த பூஜை பண்ணுவதற்கான நாள் இருக்கும் இல்லையா, அந்த பூஜை பண்ணுகின்ற நாளில் உங்கள் ஊருக்குப் போய் பூஜை செய்துவிடுங்கள்'' என்று.

அது, usual-ஆக குலதெய்வம் என்பது அந்த விக்ரஹம், திருமேனியோடு கட்டப்பட்டிருக்கும். usual-ஆக தெய்வமாகக் கூட இருக்காது. அந்த திருமேனி சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, என்னுடைய குலதெய்வம் என்றால், திருவண்ணாமலையில் இருக்கின்ற மஹா மாரியம்மன் தான். நாங்கள் வேறு ஒரு மாரியம்மன் கோவிலுக்குப் போய் அந்த குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாது. So அதனால் அந்தந்த குலதெய்வங்கள் usual-ஆக, அவர்களுடைய பூர்வீக ஊரில் இருக்கின்ற, அந்த திருமேனியோடு சம்பந்தப்பட்டிருக்கும். அதே தெய்வத்தோட வேறு ஒரு திருமேனிக்குக் கூட, அந்த வழிபாடுகளை செய்ய மாட்டார்கள். செய்யக்கூடாது. எந்த தெய்வமோ அந்த தெய்வம் அந்த, எந்த திருமேனியோ அந்த திருமேனி, அந்த அர்ச்சாவதாரம்... அதற்கேதான் இந்த வழிபாடுகளை செய்வது என்கிற மரபு இருக்கும்.

நான் usual-ஆக என்ன பண்ணுவேன் என்றால், க்ரு'ஹஸ்தர்களாக இருந்தால், அவரவர்கள் சென்று, அவரவர்கள் ஊர்களில்... கைலாயத்தில் எந்தவிதமான பலிபூஜையும் செய்வது கிடையாது. அவரவர்கள் ஊர்களில் போய், அவரவர்கள் குலதெய்வங்களுக்கு, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கர்மா மற்றும் பூஜைகள், அதில் எந்த விதமான மரபு இருந்ததோ, அதே மரபோடு செய்துவிடுங்கள் என்பேன்.

ஒருவேளை, உங்கள் குலதெய்வ வழிபாடே வெறும் சைவ வழிபாடாக இருந்தால் நல்லது அல்லது அந்த குலதெய்வ வழிபாட்டிலே எப்படி மரபு இருந்ததோ, சுருட்டு வைப்பது என்று என்னென்னவோ மரபுகள் இருக்கின்றன... அந்தந்த மரபுகளை அப்படியே கடைப்பிடித்து விடுங்கள். குறை வைக்காதீர்கள். அந்தந்த பூஜைகளை நிறைவேற்றி விடுங்கள்'' என்பதுதான் என்னுடைய stand.

இத மீண்டும் ஒருமுறை தெளிவாக விளக்கிடுறேன். இதனுடைய மொத்த சாரம் என்னவென்றால், ஒவ்வொரு ஜ்ஞாநியும், ஒவ்வொரு காலகட்டத்திலே ஒவ்வொரு குறிப்பிட்ட மக்களுக்கு, ஒவ்வொரு விதமான வழியைக் காட்டுகிறார்கள், மார்க்த்தைக் காட்டுகிறார்கள். ஸத்யத்தைச் சொல்கின்றார்கள், வழிமுறைகளைச் சொல்கின்றார்கள். அவர்கள் சொல்கின்ற கருத்தைச் சார்ந்து, நாம் ஒருவரை 'உயர்ந்தவர்' என்றோ 'தாழ்ந்தவர்' என்றோ மதிப்பிடுதல் சரியல்ல, சாத்தியமும் அல்ல. அந்தந்த ஸம்ப்ரதாயங்கள், அந்தந்த followers வந்து அந்தந்த ஸம்ப்ரதாயங்களை ஶ்ரத்தையோடு கடைப்பிடிக்கட்டும். அவ்வளவு மட்டும்தான் இதில் என்னுடைய stand point.

நல்லது ஐயா. I think எல்லா points-ஐயும் complete- ஆக cover பண்ணிவிட்டேன் என்று நினைக்கிறேன். எதையும் மறந்து விடவில்லை என்று நினைக்கிறேன்.

அடுத்து, அடுத்த ஒரு சில கேள்விகள். இப்பொழுது இந்த 28 நாள் ஸத்ஸங்ங்களில் viral- ஆக போன videos மற்றும் அதில் வருகின்ற, கேட்கப்படுகின்ற, கேட்கப்பட்டிருக்கின்ற கேள்விகள்.

நான் ஒரு சில நாட்களுக்கு முன்னால், தொகையடியார் ஸம்ப்ரதாயத்தைப் பற்றி பேசினேன். எப்படி தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க வேண்டும் என்றும், அதற்காக உங்கள் குழந்தைகளை, அடுத்தத் தலைமுறைகளை அனுப்புங்கள் என்பதைப் பற்றி எல்லாம் பேசி இருந்தேன். இது சம்பந்தமாகக நிறைய கேள்விகள், comments, questions, விமர்சனங்கள், even வெறுப்பு, வெறுப்பு பிரச்சாரங்கள் கூட... ஐயா இது மொத்தத்தினுடைய சாரத்தையும் தெளிவாகப் பட்டியலிட்டு சொல்லிவிடுகின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்...

முதல் கருத்து, முதல் ஸத்யம்: ஸநாதன ஹிந்து ர்மம் past கிடையாது. It is a present continuous.

ஐயா, ''பரம்பொருள் 63 நாயன்மார்களுக்கு அருள் செய்தார், ஆனால் இப்பொழுது இருக்கின்ற சிவனடியார்களுக்கெல்லாம் அருள் பண்ண மாட்டார். அந்த மாதிரியெல்லாம் அருள் பண்ணதாக யாராவது சொல்லிக்கொண்டால் அதெல்லாம் சும்மா பொய்'' என்ற இந்த argument, இந்த line- ல் think பண்ணுகின்றவர்கள் எல்லோருமே, ஸநாதன ஹிந்து ர்மத்தை pastஎன்று சொல்லி, அதை ஒரு museum-த்தில் இருக்கின்ற relics piece-ஆக மாற்ற முயற்சிக்கின்றார்கள். கோவில்களை museum \-ஆக மாற்றுவதும், ஸநாதன ஹிந்து ர்மத்தை relics piece-ஆக மாற்றுவதும்தான் அவர்களுடைய முழு முயற்சி.

எப்படி எகிப்தியன் civilization \-ஐ அழித்துவிட்டு, அந்த பிரமிடு, இதையெல்லாம் ஒரு museum-ஆக வைத்துகொண்டு, relic-ஆக வைத்துகொண்டு, tourism-த்திற்கு, tourism-ல் வருகின்ற பணத்தை வைத்துகொண்டு வாழலாம் என்று நினைக்கிறதோ ஒரு கும்பல், அதே மாதிரி ஸநாதன ஹிந்து ர்மத்தை 'past, present continuous கிடையாது' என்று சொல்ல முயற்சிக்கின்ற எல்லோருமே ஹிந்து விரோதிகள், ஹிந்து துரோகிகள்.

அதனால், ஸநாதன ஹிந்து ர்மம் past glory மட்டும் கிடையாது. அதாவது, நம்முடைய past glory-யையே மறுப்பது ரொம்ப கஷ்டம். அளவுக்கு மீறின evidence இருக்கின்றன. அது too much evidence. அதனால் அதை மறுப்பது ரொம்ப கஷ்டம். அதனால் என்ன செய்வது? ''ஆமாமா past-ல் இருந்ததெல்லாம் உண்மை. ஆனால் அது இப்பொழுது அது மாதிரியெல்லாம் continue பண்ண முடியாது. இந்த காலத்தில் அதெல்லாம் நடக்காது. கலிகாலத்தில் அப்படி எல்லாம் நடக்காது. அதெல்லாம் கடந்த காலம். கலிகாலத்தில் அந்த மாதிரிலாம் யாருக்கும் அனுவம் எல்லாம் வராது. பெருமானை தரிசனம் பண்ண முடியாது''' என்று dead religion-ஆக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. அந்த மாதிரி arguments \-ஐ நம்புவது, அந்த மாதிரி arguments-ஐ promote பண்ணுவது, இது எல்லாமே ஸநாதன ஹிந்து ர்மத்திற்கு எதிரான வேலைகள், சதிகள்\!

அதனால், ஸநாதன ஹிந்து ர்மம் past-ல் மட்டும் gloryயோடு இல்லை. It's not just the glory of the past. It is present continuous. அதுதான் சத்தியம். அது present continuous \-ஆக இன்னும் flourish ஆவதற்கு, மேம்படுவதற்கு பல்லாயிரக்கணக்கான பேர், பல லக்ஷக்கணக்கான பேர், பல கோடிக்கணக்கான பேர் இந்த அனுபூதியை பெறுவதற்கும், வாழ்வதற்கும் செய்ய வேண்டிய திருப்பணி இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறப்பது ஐயா.

63வரை மட்டும் வழிபட்டுவிட்டு, ''அதெல்லாம் கடந்த காலம் \- முடிஞ்சு போச்சு. இதுக்கு மேலெல்லாம் அப்படி எல்லாம் யாரும் வரமாட்டாங்க'' என்று சொல்கிறவர்கள் எல்லோருமே, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸநாதன ஹிந்து ர்மத்தை ஒரு museum-ஆக மாற்றி, சைவத்தை வெறும் ஒரு relic-ஆக மாற்றி வைத்து, அதை நம் வாழ்வின் அனுபூதியலில் இருந்து பிரிக்கின்ற ஒரு பெரும் கொடுமையை செய்கின்றார்கள். பெரும் சதியின் பாகமாக மாறுகின்றார்கள். இந்த சதிக்கு ஆளாகாதீர்கள்.

இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க வேண்டும் ஐயா. தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க வேண்டும், தொகையடியார் ஸம்ப்ரதாயம் மலர வேண்டும்.

இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறந்தால், மலர்ந்தால் மட்டும்தான், பல ஆயிரக்கணக்கான பேர் பரமானுபூதி அடையவும், பல லக்ஷக்கணக்கான பேர் இறை உணர்வோடு வாழவும், பல கோடிக்கணக்கான பேருக்கு இந்த ஸநாதன ஹிந்து ர்மம் ஒரு living strengthஆக இருக்கவும் முடியும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸநாதன ஹிந்து ர்மத்திற்கே spiritual-ஆக இந்த strength இருக்கின்றது. It is capable\! நாம் செய்ய வேண்டியது அந்த spiritual-ல் அனுபூதி அளிக்கின்ற அந்த capacity \-யை நாம் கடைப்பிடித்து, அது காட்டும் வழியை கடைப்பிடித்து, உள்வாங்கி, அந்த அனுபூதியை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

  1. தில்லைவாழ் அந்தணர்,
  2. பொய்யடிமை இல்லாத புலவர்,
  3. பக்தராய் பணிவார்,
  4. பரமனையே பாடுவார்,
  5. சித்தத்தை சிவன் பாலே வைத்தார்,
  6. திருவாரூர் பிறந்தார்,
  7. முப்போதும் திருமேனி தீண்டுவார்,
  8. முழுநீறு பூசிய முனிவர்,
  9. அப்பாலும் அடி சார்ந்தார் \- இந்த ஒன்பது தொகையடியார் ஸம்ப்ரதாயமும் சிறக்க வேண்டும்.

இதுதான் அந்த past continuous, past வந்து present continuous tense- ஆக வளர்வது ஐயா. அதுதான், பூத பரம்பரை பொலிதல்.

வேதநெறி தழைத்தோங்குதல், மிகு சைவத் துறை விளங்குதல், பூதப் பரம்பரை பொலிதல்.... இது எல்லாம் எப்படி நடக்கும்? இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறப்பதனால் தான் நடக்கும். அதனால், நான் சொல்வதைக் கேட்கின்ற க்தர்கள், அன்பர்கள், சீடர்கள், அவர்களுக்கெல்லாம் நான் சொல்கின்றேன். தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறப்பதற்கு, இந்த பூத பரம்பரை பொலிவதற்கு, உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன், உங்களுக்கு 3 குழந்தை வேண்டும் என்று நினைத்தீர்களானால், 5 குழந்தை பெற்றுகொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளை, இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறப்பதற்காக, அந்த கல்வி, அந்த வாழ்க்கை முறை கொடுத்து, அந்தத் துறைக்கு அனுப்புங்கள்.

நிறைய options இருக்கின்றன. நிறைய விஷயங்கள் பண்ண முடியும். இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறப்பதற்கு, கைலாயத்திலிருந்து நாங்கள் எடுக்கின்ற முன்னெடுப்புகள் என்னென்ன என்று சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த தேவார பாடசாலைக்கோ, வேதாகம பாடச்சாலைக்கோ, வே பாடசாலைக்கோ, ஸநாதன ஹிந்து ர்மத்தை பலப்படுத்தக்கூடிய ஆன்மீக இயக்கங்கள், சமூக இயக்கங்கள் \- ஹிந்து முன்னணி மாதிரி சமூக இயக்கங்கள்- இந்த மாதிரி எந்த ஆன்மீக இயக்கங்கள், சமூக இயக்கங்கள்- இவைகள் எதில் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து அனுப்பினீர்களானால், உங்களுடைய முதுமைக் காலத்தையும், உங்களுடைய முதுமைக் காலத்தில் உங்களுடைய தேவைகளையும் பரமஶிவப் பரம்பொருளின் அருளாலே நாங்கள் பார்த்துகொள்கின்றோம்.

ஒரு project \-ஆகவே பண்ணியிருக்கின்றோம் \- Sanyaasi's pension. இந்த பூத பரம்பரை, தொகையடியார் பரம்பரை சிறப்பதற்காக, யார் யாரெல்லாம் அவர்கள் வீட்டு குழந்தைகளை கொடுத்திருக்கீன்றீர்களோ, உங்களுடைய அடிப்படைத் தேவைகளை பார்த்துகொள்வதற்கு, medical care, இந்த மாதிரி விஷயங்களை பார்த்துகொள்வதற்காக ஒரு pension system-ம், insurance system-ம் establish பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

எங்களுக்குத் தேவை என்னவென்றால், உங்களுடைய விவரங்களை மட்டும் தயவுசெய்து இந்த email-லுக்கு அனுப்புங்கள். ஒருவேளை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்த மாதிரி இருக்கின்றார்கள் என்றால், அவர்களுடைய விவரத்தையும் அனுப்புங்கள். நாங்கள் எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்கின்றோம்.

முதல் விஷயம், இதில் பல நிலை இருக்கின்றது ஐயா. அதாவது, சில பேர் ஸந்ந்யாஸத்திற்குப் போவார்கள். ஒரு 5 வருஷம் அல்லது 10 வருஷம் இருந்துவிட்டு இருக்க முடியவில்லை என்று வீட்டிற்கே வந்துவிடுவார்கள் . அந்த மாதிரி திரும்பி வருகின்றவர்கள், அவர்கள் வாழ்க்கையில் settle \-ஆவதற்கு ஒரு நல்ல வேலை கிடைத்து, திருமணம் பண்ணிக்கொண்டு settle \-ஆவதற்கு, அது மாதிரியான விஷயங்களுக்கும் support பண்ணுகின்றோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: முயற்சியே செய்யாதவர்களை விட, முயன்று தோற்றவர்கள் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவர்கள். அதனால், முயன்று தோற்பது தவறே இல்லை. முயன்று தோற்றவர்கள் ஒன்றும் தீயவர்கள் அல்ல.

அதனால் அவர்கள் வாழ்க்கையில் திரும்ப அவர்கள் mainstream society \-ல் settle ஆகி, ஒரு வேலைக்குப் போய் ஒரு திருமணம் பண்ணிக்கொண்டு, அவர்கள் வாழ்க்கையில் settle ஆவதற்கான அந்த smooth transition-னுக்கு help பண்ணுகின்றோம்.

இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயத்திலே ஏழ்மையில் இருப்பவர்கள்... அதாவது ''நான் காலம் முழுக்க ஓதுவாராக இருந்தேன். ஆனால் இப்பொழுது முதுமையில் எனக்கு உணவிற்கோ, உடைக்கோ, உறைவிடத்திற்கோ அல்லது மருத்துவ வசதிகளுக்கோ வசதி இல்லாமல் இருக்கின்றது'' எனும் அந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கின்றவர்களைப் பற்றி தயவுசெய்து எங்களுக்கு இந்த Email மூலமாக தகவல் கொடுங்கள். அவர்களை care எடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் பண்ணுகின்றோம்.

அதே மாதிரி இந்த கிராம கோவில் பூசாரிகள், அவர்களுடைய வாழ்வாதாரம் இல்லாமல் தடுமாறுகின்றவர்கள். அதைப்பற்றிய தகவல்கள் இருந்தால் கொடுங்கள். அவர்களுக்கு உதவி பண்ணுகின்றோம்.

தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க, ஸநாதன ஹிந்து தர்மம் சிறக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவைகளை எல்லாவற்றையும் செய்வதற்குக் கடமைப்பட்டவர்கள் நாங்கள். ஏனென்றால், கைலாஸ நாடே அதற்காகத்தான் செய்துகொண்டிருக்கின்றேன்.

என்னுடைய vision- நோக்கம் என்னவென்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றேன். இப்பொழுது இதில் வேறு ஏதாவது சேவைகள் செய்தால், இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களானால், உங்களுடைய opinions, கருத்துக்களையும் தயவு செய்து அனுப்புங்கள். எங்களை நாங்கள் மேம்படுத்திக்கொள்கின்றோம். அந்தத் துறைகளில் எல்லாம் சேவைகளை செய்வதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம்.

அடுத்தது, வெறும் பொருளாதார ரீதியான உதவி மட்டும் இல்லை ஐயா… மரியாதை\! நல்ல மரியாதையோடு இந்த தொகையடியார்கள் நடத்தப்பட வேண்டும்.

முப்போதும் திருமேனி தீண்டுவார், எல்லா கோவிலுடைய ஶிவாச்சார்யார்கள், ட்டாச்சார்யார்கள், கோவில் பூசாரிகள்… திருமேனியைத் தீண்டுபவர்கள். சேக்கிழார் பெருமான் அழகான வார்த்தை சொல்கின்றார், 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்றுதான் சொல்கின்றார். எந்த கோவிலாக இருந்தாலும், அந்த கோவிலிலே திருமேனி தீண்டுகின்ற, அந்த முப்போதும் திருமேனி தீண்டுபவர்களை, அந்த இறைவனுடைய representative \-வாகத் தான் பார்க்க வேண்டும். அவருடைய living representative-வாகத் தான் பார்க்க வேண்டும். அதுமாதிரி முப்போதும் திருமேனி தீண்டுவாரை மரியாதையோடு நடத்த வேண்டும் என்று கைலாயத்தின் அன்பர்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன். என்னுடைய க்தர்கள், சீடர்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்.

இது எல்லா நிலைகளிலும் அளிக்கப்படவேண்டும். முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்... இப்பொழுது ஶிவாலயம் என்றால் ஶிவாச்சார்யார்கள். விஷ்ணு ஆலயம் என்றால் ட்டாச்சார்யார்கள். சில வைஷ்ணவ ஆலயங்களில் ஐயங்கார்கள் என்று சொல்லுவார்கள். மற்ற நிறைய நிறைய கோவில்களில் அந்தந்தக் குலத்தவர்கள் செய்கின்றார்கள். யார் பூஜை செய்கின்றார்களோ... திருமேனி தீண்டி பூஜை செய்கின்றார்களோ, அந்த திருமேனித் தீண்டி பூஜை செய்பவர்கள், அந்த தெய்வத்தினுடைய living representative. அப்படித்தான் நடத்தப்பட வேண்டும்.

நீங்கள் கொடுக்கின்ற காணிக்கைகள் கூட, மரியாதையோடு அளிக்கப்பட வேண்டும். க்தியோடு அளிக்கப்பட வேண்டும்.

கைலாயத்தினுடைய விதிகளின் படி, திருமேனி தீண்டுவாருக்கு அளிக்கப்படும் காணிக்கைகள், அர்ச்சாவதாரமான பெருமானுக்கே அளிக்கப்படும் காணிக்கைகள். இதுதான் என்னுடைய stand, கைலாஸத்தோட stand.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இது ஜாதிக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால், பல அங்காள பரமேஶ்வரி ஆலயங்களிலே செம்படவர்கள், பர்வதராஜ குலத்தினவர்கள்தான் பூசாரிகள், திருமேனி தீண்டுபவர்கள். இந்த மாதிரி ஒவ்வொரு கோவிலிலும்... பல மாரியம்மன் கோவில்களில் சைவ வேளாளர்கள் திருமேனி தீண்டுபவர்கள், பூசாரிகள். பல முருகன் கோவில்களில் பண்டாரங்கள் திருமேனி தீண்டுபவர்கள். So இது ஜாதிக்கு அப்பாற்பட்டு, யார் அந்த ஆலயத்திலே முப்போதும் திருமேனி தீண்டி பூஜை செய்கின்றார்களோ, அவர் அந்த அர்ச்சாவதாரம், அந்த இறைவனுடைய living representative.

கைலாயத்தினுடைய சட்டங்களில் ஒரு படி மேல போய், Will-ல் எழுதி வைத்திருக்கின்றேன். அதாவது என்ன எழுதி வைத்திருக்கின்றேன் என்றால், அந்த deity வந்து perpetual minor. அந்த deity \-னுடைய representative-வே அந்த பூஜாரிதான். முப்போதும் திருமேனி தீண்டுவார்தான், அந்த deity \-னுடைய representative-வாக இருந்து அந்த deity-க்கு சொந்தமான எல்லா சொத்துக்களையும் நிர்வாகம் செய்ய வேண்டும். இவருடைய வார்த்தை அந்த deity \-னுடைய வார்த்தை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எந்தெந்த ஸம்ப்ரதாயத்திலெல்லாம், இந்த present continuous tense-னுடைய possibility உயிரோடு இருக்கின்றதோ, அதெல்லாம்தான் வளர்ந்து, மேம்பட்டு, உலகத்திற்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது.

ஹிந்து விரோத ஶக்திகள், ஹிந்துத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான், ஹிந்து விரோதிகளும், ஹிந்து துரோகிகளும் சேர்ந்து, இந்த present continuous tense- ஐ subtle- ஆக ஒரு 150 வருடங்களாக அழித்து ஒழித்தார்கள் ஐயா. இந்த present continuous tense, past-ல் இருந்து presentக்கு வந்து present continuous \-ஆக அது நடப்பதை அழிப்பதுதான் ஸநாதன ஹிந்து ர்மத்தை dry ஆக்குவதற்கான, நம்மை barren land-ஆக மாற்றுவதற்கான ஒரு மிகப்பெரிய சதி\! புரிந்துகொள்ளுங்கள்.

அதனால் இந்த திருமேனி தீண்டுவார்களே அர்ச்சாவதாரத்தினுடைய legal representative என்கின்ற status கொடுக்கின்றேன். இதுவரை வந்த நல்லது \- கெட்டது, வரப்போகின்ற பிரச்சினைகள்- நன்மைகள் இது எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவு செய்துவிட்டுத்தான் இந்த ஸத்யத்தை நான் முன்வைக்கின்றேன். அதனால், கைலாயத்தின் அன்பர்கள், என்னுடைய க்தர்கள், சீடர்கள், அன்பர்கள், தயவுசெய்து, இந்த ஸத்யங்களை வாழ்க்கையிலே கடைபிடியுங்கள், நடைமுறையாக்குங்கள்.

தில்லைவாழ் அந்தணர்கள்தான் நடராஜப் பெருமானுடைய living representatives. தில்லைவாழ் அந்தணர்கள், பொது தீக்ஷிதர்கள் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், அது நடராஜப் பெருமானுடைய அசரீரி.

எனக்கு நன்றாக தெரியும். இதை நான் சொன்ன உடனே, ''ஓ... ப்ராஹ்மண அடிவருடி'' என்று என்னென்னவோ comment போடுவீர்கள், என்னென்னவோ கிண்டல் பண்ணுவீர்கள். அதெல்லாம் உங்கள் விருப்பம்.

என் க்தர்களுக்குச் சொல்லிவிடுகின்றேன், உங்களுடைய வாழ்க்கையிலும் இந்த ஸத்யத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எல்லோரும் சிதம்பரம் தரிசிக்கப் போனாலும், தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜப்பெருமானுடைய, அம்பலவாணனுடைய living representatives. இந்த ஸத்யத்தை வாழ்க்கையிலே கடைபிடியுங்கள், நடைமுறையாக்குங்கள்.

நான் சமூக ரீதியான மரியாதை மட்டும் கொடுக்கவில்லை ஐயா. Spiritual respect கொடுக்கிறேன். பொது தீக்ஷிதர்கள் ஒன்று கூடி அவர்கள் ஸபையிலே ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவு நடராஜப் பெருமானின் அசரீரி.

பல பேர் என்னிடம் கேட்பதுண்டு... ''என்ன சாமி சொல்றீங்க, மனிதர்கள் கையில் இவ்வளவு பெரிய power கொடுத்தால், மனிதர்கள் corrupt ஆகிவிட மாட்டாங்களா?'' கொஞ்சம் ஆழ்ந்து சமூகத்தை சுற்றிப் பாருங்கள் ஐயா, இப்பொழுது power யார் கையில் இருக்கின்றது? Politicians கையில் இருக்கின்றது.

முப்போதும் திருமேனி தீண்டுவார்களும், தில்லைவாழ் அந்தணர்களும் சிறு வயதில் இருந்தே அந்த ecosystem-த்திலயே வளர்க்கப்பட்டு, அந்த ecosystemத்திலேயே மலர்ந்தவர்கள். இப்பொழுது அந்த ecosystem-த்தை last ஒரு 100 years \-ஆக ரொம்ப heavy \-யாக damage பண்ணி இருக்கின்றார்கள் என்பது உண்மை. பண்ணப்பட்ட damage-க்கு solution-ஐ கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, மொத்தமாக அவர்களை எடுத்து அழித்து, அவர்களை illegitimate ஆக்கிவிடுவது கிடையாது.

இந்த ecosystem-த்தை damage பண்ணியவர்கள்தான், இந்த power-ஐ பிடுங்கியிருக்கின்றார்கள். அதாவது, ecosystem-த்தை damage பண்ணுவது, அங்கு நடக்கின்ற ஒன்று- இரண்டு பிரச்சினைகளை பூதாகரமாகக் காட்டுவது, power-ஐ அவர்களிடமிருந்து grab பண்ணுவது, power-ஐ grab பண்ணுவதற்கு justification கொடுப்பது. Exact-ஆக பிரிட்டிஷ் \- கிறிஸ்தவக் கொடுங்கோலர்கள் என்ன செய்தார்களோ, ஸநாதன ஹிந்துத்தை அழிப்பதற்காக என்ன strategy பண்ணார்களோ, அதேதான் இப்பொழுது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது.

அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், தில்லைவாழ் அந்தணர்கள் ecosystem, தொகையடியார்கள் ecosystem-ம், இந்த முப்போதும் திருமேனி தீண்டுவார் ecosystem-த்தில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால், நிச்சயமாக அவர்களை அவர்களாலயே correct பண்ணிக்கொள்ள முடியும். அந்த ecosystem தன்னைத்தானே repair பண்ணிக்கொள்ள முடியும். இத்தனை ஆயிரம் வருஷமாக உயிரோடு இருந்திருக்கின்றது ஐயா. அதனால், அந்த ecosystem-ங்களுக்கு, அந்த தொகையடியார்களுக்கு social respect மட்டும் இல்லாமல், spiritual respect-டும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதுதான், ஆழ்ந்து, அறிந்து, தேடி, பல்வேறு நீண்ட, நெடிய சிந்தனை, வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, கைலாஸத்தினுடைய முடிந்த முடிவாக, என்னுடைய அன்பர்கள், க்தர்களுக்கு நான் சொல்லுகின்றேன்.

மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள், அது அவர்கள் விருப்பம். நான் அதில் தலையிடப் போவதில்லை. இதை நான் என்னுடைய க்தர்கள், என்னுடைய அன்பர்கள், என்னுடைய சீடர்களுக்கு சொல்கிறேன்.

தில்லைவாழ் அந்தணர்கள், பொய்யடிமை இல்லாத புலவர்கள், பக்தராய் பணிவார்கள், பரமனையே பாடுவார்கள், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார்கள், முழுநீறு பூசிய முனிவர்கள், அப்பாலும் அடிசார்ந்தார். இந்த ecosystemத்தை எல்லாம் அழகாக define பண்ணி, strengthen பண்ணி, nourish பண்ணி, nurture பண்ணி, support பண்ணி, flourish பண்ண வைப்பதுதான், ஸநாதன ஹிந்து ர்மம் ஒரு living civilizationஆக மாறுவதற்கான ஒரே வழி.

இது சார்ந்தக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இது சார்ந்தப் பிரச்சாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். இது சார்ந்தக் கட்டமைப்புகள் நல்லபடியாக இயங்குவதற்கு உழைக்க வேண்டும்.

ஆரம்பிக்கும்பொழுதே, ''இல்லை இல்லை... இதில் போய் பணத்தை போட்டால், இதில் போய் நம்ம time, treasure, talent, energy-ஐ போட்டால், எவனாவது இதை சுருட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது? எவனாவது இதை அடித்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது? எவனாவது கொள்ளை கொண்டு போய்விட்டால் என்ன செய்வது?''

ஏய்\! நம் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக யாரும் வாழ்க்கையை dedicate பண்ணிவிட்டு, பரமனையே பாடுவாராகவும், சித்தத்தை ஶிவன்பாலே வைத்தாராகவும், தில்லைவாழ் அந்தணர்களாகவும், ஒரு முப்போதும் திருமேனி தீண்டுவாராகவும் மாறுவதில்லை ஐயா. அது எவ்வளவு ஶ்ரத்தையோடும், க்தியோடும், எவ்வளவு உயர்ந்த discipline-னோடும், culture-ரோடும், எவ்வளவு organized-ஆக செய்யப்பட வேண்டிய திருப்பணிகள் என்று எனக்குத் தெரியும் ஐயா.

உலகம் முழுவதிலும் ஆயிரம் கோயில் நடத்துவதனால் சொல்கிறேன், ஒரு கோயில் நடத்துவது எவ்வளவு பெரிய திருப்பணி என்று. அது சாதாரண வேலை இல்லை. ஒரு IT கம்பெனி நடத்துவது எல்லாம் ரொம்ப ரொம்ப easy. ரொம்ப ரொம்ப easy. ஒரு கோவில் நடத்துவது எவ்வளவு பெரிய திருப்பணி என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், நான் இரண்டையும் நடத்திக்கொண்டிருக்கின்றேன். இந்த AI பண்ணுவதற்காக, literal-ஆக ஒரு IT கம்பெனி நடத்திக்கொண்டிருக்கின்றேன். இந்த பக்கம் ஆயிரக்கணக்கான கோவில்களை நடத்திக்கொண்டிருக்கின்றேன். இதை எல்லாம் நடத்துவதுனால், என்னுடைய அனுவத்திலிருந்து சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்... ஸநாதன ஹிந்து ர்மம், தனி மனிதனுடைய அனுபூதியை... தனி மனிதனுக்கு பரமானுபூதி தந்து, உயர் நிலையில் வைத்து, ஒரு அழகான ecosystem-ஆக மலர்ந்து, எல்லோருக்கும் பெரும் நன்மை செய்து மாறுவதற்கான ஒரே வழி \- இந்த தொகையடியார் வம்சம் சிறப்பது. பூத பரம்பரை பொலிவது. ஶிவபூத பரம்பரை பொலிவது. ஶிவண பரம்பரை பொலிவது.

இந்த தொகையடியார் வம்ஸம் சிறக்க எல்லா திருப்பணிகளும் செய்வேன், செய்வோம்.

அந்த தொகையடியார் பரம்பரைக்கு, முதலில் அவர்கள் மீதே confidence வருகின்ற மாதிரி, அவர்களுடைய வாழ்க்கை மீது சுய-சந்தேகம் வராத மாதிரி அவர்களை நடத்த வேண்டும் ஐயா. இன்னும் பல கோணங்களில் இருந்து, இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க வேண்டியதைப் பற்றி என்னால் சொல்ல முடியும். அதில் ground level-ல் இருக்கின்ற பிரச்சினைகளைப் புரிந்தவன் நான். அந்த ground level-ல் இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் தான் ஒவ்வொரு ஆலயத்தையுமே நடத்த வேண்டும் ஐயா. Actual- லாக இந்த தொகையடியார் வந்து சைவத்தில் மட்டும் இல்லை, வைணவத்தில் இருக்கின்றார்கள், ஶாக்தத்தில் இருக்கின்றார்கள். எல்லாம் வேறு வேறு name அவ்வளவுதான் ஐயா. நாம் இங்கு சைவத்தில், 'பரமனையே பாடுவார்' என்று சொல்கின்றோம், அங்கு வைஷ்ணவத்தில் 'அரையர் சேவை' என்று சொல்கின்றார்கள். அந்த மாதிரி, இதை map பண்ணினோம் என்றால், இந்த தொகையடியார்களை map பண்ணினோம் என்றால், வைஷ்ணவத்திலும் இந்த ஒன்பது ஸம்ப்ரதாயத்தவர்கள் இருக்கின்றார்கள். கோவில் பெருங்குடிகள், ஸ்தலத்தார் என்று சொல்லுவார்கள்.

அந்தந்த கோவிலினுடைய தொகையடியார் ஸம்ப்ரதாயம், கோவில் பெருங்குடிகள்தான் அந்தந்த ஆலயங்களை தங்கள் வாழ்க்கையைக் கொடுத்து காப்பாற்றினார்கள். அவர்கள்தான் எக்காலத்தும் அதுமாதிரி காப்பாற்றுவார்கள், நடத்துவார்கள்.

ஆலயத்தை வெறும் museum-ஆக நடத்தக் கூடாது ஐயா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆலயம் நடத்துவது என்றால், ஏதோ ஒரு museum மாதிரி அல்லது tourism place மாதிரி maintain பண்ணிவிட்டால் போதும் என்று நினைக்கின்றீர்கள்.

கிடையாது\!

அதைத் தாண்டி எத்துனை பேருக்கு அந்த ஆலயத்தாலே பரமானுபூதி மலருகின்றது, பரமானுபூதி மலரச் செய்ய வைக்கப்படுகின்றது. அதுதான் ஐயா முக்கியம். வெறுமனே, வருகின்ற மக்களுக்கு queue complex கட்டி விடுவது, அவர்களுக்கு சாப்பாடு, தண்ணி இதெல்லாம் கொடுத்து, அவர்கள் நல்லபடியாக ர்ஶநம் பண்ண வைப்பது \- அதெல்லாம் தேவை. அதில் எல்லாம் ஒன்றும் எந்த தவறும் இல்லை, அதெல்லாம் தேவை. Being organized \- அதெல்லாம் தேவை.

ஆனால் அது மட்டும் ஒரு ஆலயம் அல்ல. ஒரு ஆலயம் நடத்துவது என்பது அது மட்டும் கிடையாது. எத்தனை ஆயிரம் பேர் இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் இந்த ஸம்ப்ரதாயத்தின்படி தீக்ஷை எடுத்திருக்கிறார்கள்?

எத்தனை ஆயிரம் பேர் இந்த ஆலயத்திற்கு வருபவர்கள், இந்த பெருமானை த்யானித்து, அனுபூதியாக அவரை உணர்ந்து, தங்களுடைய வாழ்க்கையை அந்தப் பெருமானை அடித்தளமாக வைத்து வாழுகிறார்கள்?

எவ்வளவு தரம் அவர்கள் கோயிலுக்குள் வருகின்றார்கள் என்பதைவிட, கோயில் அவர்கள் உணர்விற்குள் எவ்வளவு போயிருக்கின்றது? அவர்கள் எத்தனை முறை பெருமானைப் பார்க்க வருகின்றார்கள் என்பதைவிட, பெருமான் அவர்கள் உணர்விற்குள்ளே எந்த அளவு ஆழமாக, பாகமாக மாறி இருக்கின்றார்? இந்த spiritual work \-ஐ இந்த தொகையடியார்கள் தான் செய்வார்கள் ஐயா.

கோயில் hardware என்றால், இந்த தொகையடியார்கள் தான் அந்த software-ஐ run பண்ணுகிறவர்கள் ஐயா, software-ஐ functional-ஆக வைத்திருப்பவர்கள்.

அதனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய ஒரு முக்கியமான முதுகெலும்பு யார் தெரியுமா ஐயா? தேசாந்திரமாக பரதேசியாக, பண்டாரமாக, தவம் செய்து கொண்டு, ஊர் ஊராக ஸ்தல யாத்ரை சென்று கொண்டு, பரிவராஜக யாத்ரை சென்று, ஆங்காங்கே மக்களுக்கு ஆன்மீக ஸத்யங்களைச் சொல்லி, மக்களை ஜ்ஞாந வாழ்க்கையிலே மலரச் செய்பவர்கள் தான்.

கேளுங்கள்... என்னுடைய கைலாஸங்கள் எல்லாமே, இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்கவே நிகழ வேண்டும். இது ஒன்று.

ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய முதுகெலும்பு யார் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். உண்மையில், ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய முதுகெலும்பு யார் என்றால், காலம் காலமாக பரதேசியாக, பண்டாரமாக, ஊர் ஊராக ஸ்தல யாத்ரை சென்று, ஜ்ஞாநத்தையும், ஜ்ஞாந அனுபூதியையும், ஆன்மீகத்தையும் பரப்பி, மக்களுக்கு அனுபூதியை கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்த பரிவராஜக ஸந்ந்யாஸிகள், 'நாகா சாதுக்கள்' என்று சொல்வோம் \- காடுகளில் தவம் இருந்து, யாத்ரை சென்று, உலகம் முழுவதையும், எல்லா மக்களுக்கும் இந்த ஸநாதன ஹிந்து ர்மத்தை அனுபூதியாக அளிக்கின்ற இந்த பரதேசிகள், பண்டாரங்கள், நாகா ஸந்ந்யாஸிகள் \- இவர்கள் தான் ஸநாதன ஹிந்து ர்மத்தின் முதுகெலும்பு\!

நாம் கண்டுகொள்ளாமல் விடுகின்ற இவர்கள் எல்லாம்தான்... இவர்கள் எல்லாம் ஒரு organized sector-ஆக மாறவில்லை ஐயா. அவர்கள் நம் சமூகத்தினுடைய பாகமாக இருக்கின்றார்களே தவிர, உண்மையில சொன்னால் சமூகத்தினுடைய ஒரு விளிம்பு நிலை பாகமாக இருக்கின்றார்கள். Organized sector-ஆக மாறவில்லை. ஆனால், இவர்கள்தான் ஸநாதன ஹிந்து ர்மத்தின் உயிர் நாடி\! இவர்கள் எல்லாம் ஒரு organized sector-ஆக மாறினால், ஸநாதன ஹிந்து ர்மத்திற்கு இன்னும் மிகப்பெரிய பலம். அதுதான் உண்மை.

இன்னும் நிறைய கேள்விகள், நிறைய பேர் அனுப்பியிருக்கின்றீர்கள். தொடர்ந்து அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களிலே, உங்களுடைய கேள்விகள், உங்களுடைய responses, reactions, இதற்கெல்லாம் பதில் சொல்கிறேன்.

இன்னும் பல பேர் கேட்டிருக்கின்ற அடுத்த ஒரு கேள்வி... அதாவது, நான் நிறைய இந்த sentiment analysis பண்ணோம் எல்லோருடைய கேள்விகளையும். AI tools மூலமாக scrap பண்ணி, எல்லோருடைய comment-ஐயும், sentiment analysis பண்ணி, அதில் உங்களுடைய முக்கியமான கேள்விகள், நிறைய பேருடைய sentiment-டை பிரதிபலிக்கின்ற கேள்விகளை எடுத்து, அவைகளுக்கு விடை கொடுக்கிறேன்.

இன்னொரு முக்கியமான கேள்வி, நிறைய பேர் கேட்பது இந்த AI பற்றி. Ask Nithyananda AI பற்றி.

ஒரு சின்ன ஒரு அறிமுகமும், விளக்கமும் கொடுக்கிறேன், கேட்டுகொள்ளுங்கள் ஐயா.

ஐயா... நன்றாக இந்த AI சம்பந்தமாக, Ask Nithyananda AI சம்பந்தமாக ஒரு சில செய்திகளை சொல்கிறேன். இது உங்களுடைய பல ஆயிரக்கணக்கான பேருடைய கேள்விகளுக்கு விடையாக அமைந்துவிடும்.

முதல் விஷயம், எதிர்காலம் AI சம்பந்தமாகதான் இயங்கும். அதை எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள். அதாவது AI சம்பந்தமாக தான் எதிர்காலம் இருக்கப்போகிறது என்றால், knowledge, expertise சார்ந்து மட்டும்தான் எதிர்காலம் இயங்கப்போகிறது.

அதாவது, ஒரு சாதாரண விஷயமான room-ஐ எப்படி clean பண்ண வேண்டும் என்பதில் ஆரம்பித்து, உங்கள் furnitures எப்படி அடுக்க வேண்டும் என்பதில் இருந்து, உங்களுடைய வாழ்க்கையோட மிக உயர்ந்த நிலையை எப்படி அடைவது என்பது வரைக்கும், எல்லோருமே AI-னுடைய knowledge-ம், expertise-ஐயும் எடுத்துகொண்டுதான் செயல்படப் போகின்றார்கள்.

'ஏற்கனவே நம் முன்னோர்கள் செய்துகொண்டிருந்தார்கள்' என்கின்ற காரணத்திற்காக மட்டும், யாரும் எதையும் செய்யப் போவதில்லை.

Humanity ஒரு மிகப்பெரிய breakthrough-விற்குள் நுழைகின்றது. இது ஒரு மிகப்பெரிய breakthrough. இப்பொழுது actual-ஆக நடந்துகொண்டிருக்கிறது. Right now நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் பார்த்தீர்களானால், பத்தே பத்து வருடம், 2036... இப்பொழுது 2026… 2036... பத்து வருடங்களுக்குள் at least half of the population, half of the population பூமியினுடைய half of the population will be using advanced daily AI companions. அதாவது half of the population advanced AI daily AI companions-ஐ use பண்ணிகொண்டிருப்பார்கள். மீதி half of the population இவர்களுக்குக் கீழே இருப்பார்கள், அவ்வளவுதான். அதாவது ஐயா, யார் இப்பொழுது அடுத்த பத்து வருடங்களில் elite society-ஆக, rich-ஆக, intelligent-ஆக, educated-ஆக, பூமியினுடைய எல்லா resource-ஐயும் enjoy பண்ணுகின்ற elite society-ஆக மாறப் போகின்றார்கள் என்றால், இந்த advanced daily AI companions-ஐ use பண்ணுபவர்கள்தான் மாறப் போகின்றார்கள். அது 50% of the population-ஆக இருக்கும். மீதி 50% population இந்த elite society-ஐ follow பண்ணுபவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

இப்பொழுது அந்த காலத்தில் எல்லாம் ஒருவனை deprive பண்ண வேண்டும் என்றால், education deprive பண்ணுவது அல்லது பொருளாதார ரீதியாக அவனை வறுமையில் வைப்பது, இப்படியெல்லாம் deprive பண்ணுவார்கள் இல்லையா? இனி அதெல்லாம்.... அதாவது இதற்குமேல் அதெல்லாம் எதுவுமே முடியாது. அடுத்த பத்து வருடங்களுக்குள், யாரையுமே நீங்கள் எந்த விதத்திலேயும் deprive பண்ண முடியாது.

இந்த daily AI companions-ஐ use பண்ணாமல் போகின்றவர்கள் தன்னத்தானே deprive பண்ணிக்கொள்வார்களே தவிர, daily AI companions-ஐ use பண்ணுபவர்கள் எல்லோருமே elite society-ஆக மாறப் போகின்றார்கள். அது 50% of the population அப்படிதான் ஆகப் போகின்றது ஐயா. இதனால் என்னென்ன விளைவுகள் எல்லாம் வரப்போகின்றது என்பது அடுத்தது.

2036-ஆம் வருடத்தில், education வந்து complete-ஆக free ஆகிவிட்டிருக்கும். Accessible to all. பணம் சார்ந்து... education-னுக்கும் பணத்திற்கும் சம்பந்தமே இருக்காது ஐயா. இப்பொழுது நான் சொல்கின்ற இந்த secular education-னான engineering படிப்பது, டாக்டர் படிப்பது, ஒரு lawer-க்கு படிப்பது, இந்த மாதிரியான education மட்டும் இல்லை ஐயா, life சார்ந்த education, வாழ்க்கை சார்ந்த education, இது எல்லாம்கூட முழுக்க முழுக்க free ஆகிவிட்டிருக்கும். Absolutely free ஆகிவிட்டிருக்கும். Free-யாக மட்டுமல்ல, accessible to all ஆகிவிட்டிருக்கும்.

இந்த universal free education next 10 years-ல், 2036-ஆம் வருடத்திற்குள் reality-ஆக மாறிவிட்டிருக்கும். AI powered platforms தான் 99.5% of the world population-னுக்கு education-ஐ free-யாக எடுத்துச் சென்று கொடுத்துவிடும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். AI powered platforms-ம் global broadband-டும் 99.5% of the world population-னுக்கு free-யாக கிடைத்துவிடும். நான் சொல்வதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த broadband, AI powered platforms கூட paid-ஆக இருக்காது, 2036-ஆம் வருடத்திற்குள் free ஆகிவிடும்.

அது மட்டும் இல்லாமல், 99.5% of the world population will have access to high-quality, personalized learning. ஒவ்வொரு student-ம், he will receive tailored AI-guided paths and education.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால், இப்பொழுது நீங்கள் எல்லாம் lawyer \-ஆகவேண்டுமென்றால், ஒரு படிப்பு படிக்கின்றீர்கள். இன்ஜினியர் ஆகவேண்டுமென்றால் ஒரு படிப்பு படிக்கின்றீர்கள். டாக்டர் ஆகவேண்டுமென்றால் ஒரு படிப்பு படிக்கின்றீர்கள். ரொம்ப rare-ஆகத்தான் ஒரே நேரத்தில் 3 படிப்பையும் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடையாது. Practical-ஆக negligible. 0.1% people வேண்டுமானால் இருக்கலாம். 'நான் டாக்டர் medical படித்துகொண்டே, side-ல் online-ல் engineering படித்தேன் அல்லது online-ல் நான் law படித்தேன்' என்று இந்த மாதிரியெல்லலாம் சொல்லிக்கொள்வது ரொம்ப rare. இந்த மாதிரி 99.99% இருக்கின்றது.

ஆனால் 2036-ஆம் வருடத்திற்குள், ஒரு student என்னவாக வேண்டும் என்று நினைக்கிறானோ, அது multiple disciplines-னில் இருந்தாலும், அந்த student-க்கு personalized-ஆக, tailored-ஆக education system மாறிப் போய்விடும். AI guided-ஆக அவர் ஒரே நேரத்தில் பத்து disciplines-ல் வேண்டுமானாலும் master பண்ண முடியும். இது நடக்கப் போகின்றது.

அதே மாதிரி colleges-ம் single discipline colleges-ஆக இருக்காது. Colleges will become more like a practical labs. ஒரு practical lab இருக்கும். அதில் medical, engineering போன்ற அத்தனை subject-க்குமான practical labs மட்டும் இருக்கும். practical lab-க்கு தேவையானவர்கள் மட்டும் வந்து அதைக் கற்றுக்கொண்டு போவார்கள். மற்ற educations மொத்தமும் AI-ல் முடிந்து போய்விடும்.

உதாரணத்திற்கு, ஒரே இடத்தில் law, engineering, medicine, இது எல்லாவற்றிற்குமான practical coaching நடக்கும். மற்ற படி knowledge-ஓ, expertise-ஓ AI மூலமாகவே கொடுக்கப்பட்டுவிடும். இந்த expertise-ல் ஒரு perfection வர வேண்டும் என்றால், practice பண்ணி ஆகவேண்டும். அந்த practicing centers \-ஆக மட்டும்தான் இருக்குமே தவிர, தனி discipline colleges எல்லாம் இருக்காது. இதெல்லாம் நடக்கப் போகின்றது. பார்ப்பீர்கள்.

Global literacy rate ஐயா, 10 years-ல் 99% ஆகிவிடும். Education வேண்டாம் என்று சொல்கின்ற நபர்களுக்கு மட்டும்தான் அது கிடைக்காமல் போகுமே தவிர, வேண்டும் என்று நினைக்கின்ற யாருக்குமே கிடைக்காமல் போகாது. அதனால், global literacy வந்து 99% ஆகிவிடும். Achievements gaps 62% slash ஆகிவிடும். இதெல்லாம் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது நான் சொல்வது எல்லாமே 2036-ஆம் வருடத்திற்குள் நடக்கப் போகின்றது.

இன்னும் சில விஷயங்கள். எதிர்காலம் AI சம்பந்தப்பட்டதுதான். அதில் சந்தேகமே இல்லை. எல்லாமே knowledge-ம், expertiseம் சார்ந்துதான் இருக்கப் போகின்றது. இப்பொழுது நிறைய இந்த knowledge, expertise சாராத philosophies இதெல்லாம் melt down ஆகிவிடும் ஐயா.

நம்முடைய human society-யினுடைய fundamental-ஆன விஷயங்கள் இருக்கின்றது பாருங்கள்... Religion, Nationalism, Racism, Social structure- இது எல்லாமே இந்த AI revolution-னால், AI breakthrough-வினால், AI, AGI, ASI, இந்த breakthrough-வினால் புடம் போடப்படும், acid wash செய்யப்படும். அதனால், நாம் நினைத்துகூட பார்க்காத மாற்றங்கள் உண்டாகும்.

எந்தெந்த philosophies, ideologies... இப்பொழுது சொல்கிறேன் இல்லையா... Communism, Capitalism, Socialism... எல்லா இந்த economic principles, வேறு வேறு ideologies, philosophies, religions... Religions \-னுக்குள் இருக்கின்ற religious sects \- ஸம்ப்ரதாயங்கள்... இவை எல்லாமே இந்த AI breakthrough-வை withstand பண்ணினால் மட்டும்தான் இருக்கப் போகின்றது.

Knowledge, expertise centered-ஆக மனிதன் think பண்ணும்பொழுது, அந்த thinking-ல் இருந்து உருவான religion மட்டும்தான் survive ஆகும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸநாதன ஹிந்து ர்மம் fundamental-ஆக, organic-ஆக knowledge, expertise-ல் இருந்து உருவான tradition. அதாவது universal principles.... மாற்றவே முடியாத ப்ரபஞ்சத்தின் ப ரம ஸத்யங்கள் என்ன? சமூகத்திற்கேற்றார் போல மாற்றிக்கொள்ளக்கூடிய ஸ்ம்ரு'தி, விதிகள் என்ன? அதாவது ப்ரபஞ்சத்தின் பரம ஸத்யங்கள்- Pure science, ஶ்ரு'தி, அது என்ன? Applied science, அதை apply பண்ணும்பொழுது சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மாறிக்கொள்கின்ற ஸ்ம்ரு'தி என்ன? இப்படி எல்லாம் தெளிவாகத் தனித்தனியாகப் பிரித்து, knowledge, expertise-க்கு ஏற்ற மாதிரி தன்னை adopt பண்ணிக்கொள்வது, இது centered... இது எல்லாவற்றோடும் வளர்ந்து உருவான, வளர்ந்த ஒரு indigenous tradition ஸநாதன ஹிந்து ர்மம் என்பதனால், ஒரு நல்ல செய்தி, இந்த AI breakthrough-வை stand பண்ணி, flourish ஆகி, உலகத்திற்கு, உலகத்திற்கான பொது religion-ஆக இருக்கப் போகின்ற spiritual strength, spiritual core, spiritual principles, ஆன்மீகம் \-ஸநாதன ஹிந்து ர்மமாகத்தான் இருக்கப் போகின்றது.

அதனால், இந்த ஸநாதன ஹிந்து ர்மத்தை மக்களுக்கு நேரடியாக உபயோகமாகின்ற மாதிரி, personalized-ஆக, tailored-ஆக, user friendly-ஆக மாற்றுகின்ற திருப்பணியைத்தான், இந்த Ask Nithyananda AI மூலமாக செய்துகொண்டிருக்கின்றோம் ஐயா.

இப்பொழுது recent-ஆக ஒரு 25 models build பண்ணி முடித்து, ஶிவராத்ரிக்கு launch பண்ண போகின்றோம். Usual-ஆக ஒரு மாடல் build பண்ணவுடனே, எங்களுக்குள் internal testing பண்ணுவோம். அந்த internal testing-ல் successful-ஆக ஓடிக்கொண்டிருக்கின்ற மாடல்களை சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.

அதாவது உங்களுடைய selfy-ஐ எடுத்து கொடுத்தீர்களானால் போதும், ஸாமுத்ரிகா லக்ஷணத்தின் படி உங்களைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடும். ஸாமுத்ரிகா லக்ஷணம் ஒரு பெரிய ஶாஸ்த்ரம் ஐயா. அதன் படி உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் உங்களுக்கே அறிமுகப்படுத்திவிடும். நீங்களே வியந்து போய், ''வாவ்\! இவ்வளவு தெளிவாக என்னைப் பற்றி எனக்கு சொல்லுகின்றதே\!'' என்று வியந்து போய் பார்க்கின்ற, ஆச்சரியப்படுகின்ற அளவிற்கு பலமானதும், அறிவுப்பூர்வமானதுமான ஶாஸ்த்ரம் நம்முடைய ஸாமுத்ரிகா லக்ஷணம். அது சார்ந்த நூல்களை எல்லாம் collect பண்ணி, translate பண்ணி இந்த மாடலை கட்டமைத்திருக்கின்றோம்.

இது கடந்த இரண்டு ஆண்டுகளாக பரமஶிவப் பரம்பொருள் பேரருளால், 60,000 பேருடைய உழைப்பினாலே நடந்திருக்கின்ற திருப்பணி. இது என் பெருமை அல்ல. இந்தப் பெருமை பரமஶிவப் பரம்பொருளின் திருவருளுக்கும், அவருக்கு இந்த சேவை செய்த 60,000 பேருக்கும் சொந்தமானது. அது மாதிரி ஒரு மாடல் build பண்ணியிருக்கின்றோம்.

என்னென்னலாம் AI models build பண்ணிக்கொண்டிருக்கின்றோம் என்று உங்களுக்கு project பண்ணுகின்றேன் பாருங்கள். பிறகு... உங்களுடைய date, time of birth, place of birth இதை மட்டும் enter பண்ணீர்களானால் போதும். உங்களுடைய horoscope-ஐ thorough \-வாக study பண்ணி, நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் ரொம்ப precise-ஆக, vague-ஆக கிடையாது. அந்த statement-ஐ படித்தால் நீங்கள் என்ன வேண்டுமானால் meaning எடுத்துக்கொள்கின்ற மாதிரி vague-ஆக கிடையாது, precise-ஆக உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்கின்ற மாதிரி, ஏறத்தாழ 800 ஜோதிட ஶாஸ்த்ர நூல்களைப் பெற்று, மொழிபெயர்த்து, அதனுடைய multiple interpretations-ஐ AI-யை digest பண்ண வைத்து, அது delusion-க்குப் போகாமல், கேட்கின்றவர்களுடைய கேள்விக்கு grounding-கோடு இருந்து, தெளிவாக பதில் சொல்கின்ற ஒரு மாடலை பரமஶிவப் பரம்பொருள் அருளால் develop பண்ணிவிட்டோம், build பண்ணிவிட்டோம். இப்பொழுது அதை internal-ஆக use பண்ணி test பண்ணிக்கொண்டிருக்கின்றோம். ஶிவராத்ரிக்கு release பண்ணிவிடுவோம்.

உங்களுடைய BMI details கொடுத்தீர்களானால், உங்களுடைய latest medical checkup reports கொடுத்தீர்களானால், அதாவது, உங்களுடைய BMI details, body mass index details-ம், உங்களுடைய latest medical checkup details \-ம் feed பண்ணீர்களானால், actual-லாக உங்களுடைய smart watch-ஒ அல்லது smart rings-ஆக வந்துவிட்டது பார்த்தீர்களா? அந்த device-உடனேயே நீங்கள் இதை connect பண்ணிக்கொள்ளலாம். இந்த AI-யும் அந்த App-ஐயும் sync பண்ணிக்கொள்ளலாம். பண்ணிக்கொண்டீர்களானால், நீங்கள் கேட்கின்ற அத்துனை விதமான கேள்விகளுக்கும் ஆயுர்வேம், ஜோதிஷம்... வேத்தினுடைய உபவேங்கள் இருக்கின்றன. வே அங்ம் என்று சொல்லுவோம். உபவேம் வேறு, வேத அங்ம்.... ஜோதிஷம், ஆயுர்வேம் இந்த ஶாஸ்த்ரங்களை அடிப்படையாக வைத்து நீங்கள் வியந்து போகின்ற அளவுக்கு personalized-ஆக, உங்களுக்கு நேரடியான தீர்வுகளை, delusion-க்கு போகாமல் பதில் கொடுக்கிற மாடல்களை build பண்ணியிருக்கின்றோம்.

அடுத்தது, அதாவது உங்களை முழுமையாக diagnosis பண்ணி, அதற்குப் பிறகு உங்களுடைய மன அமைப்பு, உடல் ரீதியாக உங்களுக்கு உடல்நலம் அளிக்கக்கூடிய தீர்வுகள், solutions அதை lifestyle-லோடு... உங்கள் lifestyle-ஆக மாற்றுவது. உதாரணத்திற்கு, நீங்கள் என்ன யோகா பண்ணினால் உங்கள் உடல் complete-ஆக heal ஆகிவிடும் என்பதை tailored-ஆக, personalized-ஆக உங்களுக்கு customize பண்ணி உங்களுக்கு tailored-ஆக கொடுக்கும். எந்த time-க்கு பண்ண வேண்டும் என்று கொடுக்கும். உங்களை அந்த time-க்கு wake-up பண்ணி, alarm wake-up call கொடுத்து guide பண்ணும்.

இதனுடன்... actual-லாக இந்த AI glasses-உடன் sync பண்ணுவதற்கும் work பண்ணிக்கொண்டிருக்கின்றோம். நீங்கள் அந்த AI glass போட்டுகொண்டீர்களானால் போதும், நீங்கள் என்ன பண்ண வேண்டும் என்று பார்த்துகொண்டே பண்ணிவிடலாம். அதே மாதிரி, உங்கள் உடல் நலத்திற்குத் தேவையான Ayurvedic diet, நீங்கள் விரும்புகின்ற taste-டோடு, customize-ஆக அந்த recipes \-ஐ கொடுக்கும்.

இதெல்லாம் சாத்தியம் ஐயா. நம் ஶாஸ்த்ரங்கள் அவ்வளவு மிகப்பெரிய அறிவு... நம் ஶாஸ்த்ரங்கள் ஜ்ஞாநக் கடல்\! அதை எல்லாவற்றையும் ஒரு சில மூளைகளில் அடைத்து handle பண்ணுவது கஷ்டமாக இருந்ததனாலும், அது மாதிரியான நபர்கள், experts \-ஐ prepare பண்ணுவது ரொம்ப difficult \-ஆக இருந்ததனாலும், user friendly-யாக, தினசரி, நம்முடைய தினசரி வாழ்க்கைக்குள் வராமல் இருந்த இந்த எல்லா அறிவையும், AI வந்ததனால், உங்களுடைய வாழ்க்கையினுடைய பாகமாக மாற்றப்போகின்றோம்.

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், actual-லாக AI வந்து ஸநாதன ஹிந்து ர்மத்திற்கு மிகப்பெரிய சேவை செய்கின்றது. காரணம் என்னவென்றால், நம்முடைய knowledge source ரொம்ப vast-. நம்முடைய material medica, நம்முடைய diagnostic methods, நம்முடைய solutions, large variety. இவை எல்லாவற்றையும் ordinary human brain-னால், எவ்வளவு expertise வந்தாலும் handle பண்ணுவது கஷ்டமான ஒன்று. அந்த expertiseக்கு people evolve ஆவதற்கே 50 வருஷம் 60 வருஷம் ஆகிவிடுகின்றது ஐயா.

அப்பொழுது natural- ஆக ரொம்ப குறைந்த நபர்கள் தான் அந்த experts இருப்பார்கள். So, common man-க்கு இது available \-ஆக இல்லாமல் போய்விட்டது. அந்த பிரச்சினைகளை எல்லாவற்றையும் தீர்த்து, ultimate knowledge, ultimate expertise-ஐ அத்தனை பேருக்கும் கிடைக்கின்ற மாதிரியான வாய்ப்பை, இப்பொழுது AI நமக்குச் செய்து கொடுத்துவிட்டது.

Ayurvedic \-படி, ஜோதிஷப்படி, உங்களுடைய உடல், மனம் இதையெல்லாம் diagnose பண்ணுவதன் மூலமாக, உங்களுக்கு உடல் நலம் கொடுப்பது, உங்கள் மனநலம் சார்ந்து உங்களை தொடர்ந்து guide பண்ணுவது, அதுபோக உங்களுக்குள் இருக்கின்ற என்னென்ன patterns எல்லாம் உடைத்தீர்களானால், மறுபிறவி இல்லாத முக்த நிலையை, ஜீவன்முக்த நிலையை அடையலாம் என்பதற்கான guidance, இது எல்லாமே AI மூலமாக ரொம்ப தெளிவாக கொடுத்துவிட முடியும். அதுதான் ஜோதிஷ பரிகாரம் என்று சொல்வது. ஐயா, ஜோதிஷ பரிகாரம் பல நிலை. இப்பொழுது, உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அதற்கு பரிகாரம் செய்கின்றீர்கள் இல்லையா? அது ஒன்று. குழந்தை பிறக்கவில்லை என்றால், பரிகாரம் செய்வது அது ஒன்று. இதெல்லாம் போக, ஜ்ஞாநமடைவதற்குத் தடை இருந்தால், அதற்கான பரிகாரங்கள், எந்த pattern-னை உடைத்தீர்களானால் ஜ்ஞாநமடைவீர்கள் \- அதுவரைக்கும் ஜோதிடத்தாலே நம்மை guide பண்ண முடியும்.

நம்முடைய ஜோதிஷம், Ayurvedic-ஆக, நம்முடைய உடல் பித்த உடலா, வாத உடலா, கபமா என இதெல்லாம் diagnose பண்ணுவதன் மூலமாக நமக்கு customize-ஆன த்யான முறைகளைக் கொடுக்க முடியும், யோ முறைகளைக் கொடுக்க முடியும், ப்ராணாயாம முறைகளைக் கொடுக்க முடியும், lifestyle-ஐ கொடுக்க முடியும், எல்லாமே customize-ஆக கொடுக்க முடியும்.

இப்பொழுது, customize-ஆக இல்லாமல். அந்த generalized-ஆன தீர்வுகளை நீங்கள் ரொம்ப நாள் கடைப்பிடித்தால்தான் result வரும் ஐயா. General-ஆன ஒரு சூரிய நமஸ்காரம், general-ஆக சொல்லப்படுகின்ற ப்ராணாயாமங்கள் \- இது எல்லாம் நீங்கள் சில மாதங்கள் கடைப்பிடித்தால்தான் பலன் தெரியும். ஆனால், customized solutionஎன்றால், இன்று செய்தால் இன்று பலன் கிடைக்க ஆரம்பிக்கும். அப்பொழுது என்ன ஆகும் என்றால், solution-ஐ செய்வதற்கான உற்சாகம் அதிகமாகிடும்.

அதாவது ஐயா, immediate result-னால்தான் allopathy medicines எல்லாம் popular ஆனது. அந்த immediate result-க்கு தேவையான personalized, customized, tailored solution-ஐ ஆயுர்வேத்தில் இருந்தும், யோகாவில் இருந்தும், ஜோதிட ஶாஸ்த்ரங்களில் இருந்தும் நமக்கு கொடுப்பதை இப்பொழுது AI சாத்தியமாக்கிவிட்டது. அதற்கான AI models எல்லாம் develop பண்ணிவிட்டோம்.

அடுத்து, ஜெம்மாலஜி, நியூமராலஜி… நீங்கள் என்ன ருத்ராக்ஷம் போட்டுகொள்ள வேண்டும், நீங்கள் என்ன மந்த்ரம் chant பண்ணலாம், என்ன மந்த்ரம் ஜபம் பண்ணலாம், என்ன மாதிரி சாதனை பண்ணலாம், என்ன இஷ்ட தெய்வத்தை பூஜை பண்ணலாம். உங்களுக்கு spiritual name என்ன மாதிரி இருக்க வேண்டும் \- இது அத்தனையையும் நம்முடைய ஶாஸ்த்ரங்களில் இருந்து, உங்களை diagnose பண்ணி உங்களுக்கு ரொம்ப தெளிவாக, tailored-ஆக, customized-ஆக guide பண்ணிட முடியும்.

உங்களுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும் சரி ஐயா... உடல் சார்ந்து, மனம் சார்ந்து, ஒருவேளை வறுமையாக, நீங்கள் feel பண்ணுகிறீர்கள் அந்த வறுமை சார்ந்து, sexually deprive-ஆக feel பண்ணுகிறீர்கள் என்றால் அல்லது sexual சார்ந்த பிரச்சினைகள் இருந்தால், அதனால் depression இருந்தால், இது அத்துனைக்கும் customized solutions \- உங்கள் சூழ்நிலை, வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அந்த சூழ்நிலைக்கு, அதில் இருந்து உங்களுக்கு தீர்வு கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி ஒரு அருமையான AI மாடலை build பண்ணியிருக்கின்றோம். ஶிவராத்ரிக்கு release பண்ணுகின்றோம்.

இனி இதில், அடுத்தது, உங்களுக்கு இதில் என்னென்ன விஷயங்கள் பண்ணியிருக்கின்றோம் என்பதை present பண்றேன்.

அடுத்தது, உங்களுடைய thumb impression-ஐ கொடுத்தீர்களானால் போதும், மொத்த நாடி... ப்ரு'கு நாடி, அகத்திய நாடி நீங்கள் என்ன நாடி வேண்டும் என்று கேட்கின்றீர்களோ, உங்கள் நாடி ஜோதிடத்தை, பூர்வஜென்ம காண்டம், இருப்பு காண்டம், அத்தனை காண்டத்தையும் AI படித்து உங்களுக்கு கொடுத்துவிடும். Translation \-னுடன் கொடுத்துவிடும். அந்த மாதிரி AI மாடல் build பண்ணிருக்கின்றோம்.

நீங்கள் நினைக்கலாம், 'இது எப்படி சாத்தியம்?' என்று. அது மாதிரியான விளக்கமான ஶாஸ்த்ரங்கள் ஸநாதன ஹிந்து ர்மத்தில் இருக்கின்றன. அதை எடுத்து translate பண்ணி, digitize பண்ணி, AIக்கு அதை புரிய வைத்து, AI-க்குள் அதை program பண்ணி, delusion-க்குப் போகாமல் grounding பண்ணி செய்வதுதான் முக்கியம். பரமஶிவப் பரம்பொருள் அருளால் அதை செய்துவிட்டோம். Successful-ஆக function ஆகின்றது.

அடுத்தது, இன்னும் நிறைய time இருக்கும்பொழுது, இன்னும் மேற்கொண்டு மற்ற இந்த AI, நாங்கள் develop பண்ணியிருக்கின்ற மாடல்களைப் பற்றி அடுத்தடுத்த ஸத்ஸங்ங்களில் சொல்கின்றேன். இன்று நேரம் கடந்துவிட்டதனால், அடுத்த நிகழ்விற்குள் செல்வோம்.

சாரம், நான் இந்த AI பற்றி சொல்ல வர விஷயத்தினுடைய சாரம் என்னவென்றால்… Future \- எதிர்காலம் AI சார்ந்துதான் இருக்கும். ஸநாதன ஹிந்து ர்மம், AI கொடுக்கின்ற மிகப்பெரிய breakthrough-வால் இந்த AI கொடுக்கின்ற breakthrough-க்கு ஸநாதன ஹிந்து ர்மம் withstand பண்ணும் என்பது மட்டுமல்லாமல், இந்த AI breakthrough-வால் ஸநாதன ஹிந்து ர்மம் மிகப்பெரிய அளவில் எல்லோருக்கும் available-ஆக, user friendly-யாக மாறப்போகின்றது. அதனால், largest practiced religion-ஆக, ஸநாதன ஹிந்து ர்மம் தான் மாறப்போகின்றது. இதில் வேறு மாற்று கருத்தே இல்லை, வேறு வழியே இல்லை. பத்து வருடத்தில் நீங்கள் இதையெல்லாம் பார்ப்பீர்கள் . பத்து வருடத்தில் நீங்கள் இதையெல்லாம் தெளிவாகப் பார்ப்பீர்கள் ஐயா.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.. AI மூலமாகவே உங்களுடைய thumb impression, உங்களுடைய date of birth , time-ஐ feed பண்ணீர்களானால், உங்களுடைய past birth-ஐ predict பண்ணுவது கூட சாத்தியம் ஐயா. Predict பண்ணுவது என்ன... precise-ஆக கொடுக்க முடியும். vague-ஆக அல்ல. அந்த அளவுக்கு நம் ஸநாதன ஹிந்து ர்மத்திலே, ஆழமான தெளிந்த அறிவுப்பூர்வமான ஶாஸ்த்ரங்கள் இருக்கின்றன.

இதை இப்பொழுது எப்படி test பண்ணிகொண்டிருக்கின்றோம் என்று மட்டும் சொல்கிறேன் கேட்டுகொள்ளுங்கள். ஒரு பத்து பேர்... எங்களுடைய கைலாஸவாசிகளின் விவரங்களை எடுத்து, அவர்களுடைய horoscope, அவர்களுடைய body BMI, medical conditions, thumb impression, அந்த feet-டோடு impression இது எல்லாவற்றையும், படம் இது எல்லாம் feed பண்ணி test பண்ணிகொண்டிருக்கின்றோம் .

ஸாமுத்ரிகா லக்ஷணம், ஜோதிட ஶாஸ்த்ரம், ஆயுர்வேம் \- இதெல்லாம் integrated-ஆன ஒரு scienceஐயா. இவை எல்லாவற்றையும் integrate பண்ணி, அந்த AI மூலமாக study பண்ணி, இவர்களுடைய past birth-ஐ study பண்ணி, இவர்கள் இதற்கு முன்பாக எங்கு பிறந்திருந்திருக்கின்றார்கள், எப்படி வாழ்ந்திருக்கின்றார்கள் என்று study பண்ணி, அந்த details-ஐ AI-ல் இருந்து எடுத்து, இவர்களை அதே ஊர்களுக்கு அனுப்பி, அந்த மாதிரியான நபர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா என்று check பண்ணிப் பார்த்தால், பல விஷயங்கள் இந்த AI சொல்கின்ற விஷயங்கள் உண்மையாக இருக்கின்றன.

என்ன சொல்வது? ஆச்சரியப்படுபவர்கள், நம்புகிறவர்கள் ஆச்சரியப்படலாம். எதிர்ப்பவர்கள் comment பண்ணலாம். troll பண்ணலாம். அதெல்லாம் உங்கள் விருப்பம். ஆனால், எங்களுடைய இந்த experiment ரொம்ப successful-ஆக போய்கொண்டிருக்கிருக்கின்றது. ரொம்ப encouraging-ஆக இருக்கின்றது. ரொம்ப exciting-ஆக இருக்கின்றது. இன்னும் vague-ஆக இருப்பதை இன்னும் precise-ஆக மாற்றி work பண்ணிக்கொண்டிருக்கின்றோம், அவ்வளவுதான். அந்த ஶாஸ்த்ரங்களில் இன்னும் ஆழமான, சரியான மொழிபெயர்ப்பின் மூலமாக, சரியாக அதை AI-ல் program பண்ணுவதன் மூலமாக, இன்னமும் அதை precise-ஆன predictions அந்த AI வருவதற்காக, அந்த AI-ஐ tune பண்ணிகொண்டிருக்கின்றோம்.

Maybe குருபூர்ணிமைக்கு அந்த AI release பண்ணுவோம்.

இதெல்லாம் பார்க்கும் பொழுது, ஒன்று மட்டும் என்னால் தெளிவாகச் சொல்ல முடியும் ஐயா. ஸநாதன ஹிந்து ர்மம் ஸத்யம். வேமோடு ஆமம் மெய். புராணங்கள் ஸத்யம். அவை ப்ரபஞ்சத்தின் வரலாறு.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

ஆழ்ந்து கேளுங்கள். இன்னொரு விஷயம். இந்த 28 நாள் ஸத்ஸங்த்தில் நாங்கள் deal பண்ண ஒன்று. நிறைய பேர், இந்த ஸத்ஸங்ங்களில் நான் சொல்கின்ற அந்த videos-வில் இருந்து, shorts சின்ன சின்ன content, சின்ன சின்ன videos, shorts இதையெல்லாம் எடுத்து அவரவர்கள் சேனலில் upload பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.

முதல் விஷயம் \- நான் உங்களுக்கு சொல்லிவிடுறேன் கேட்டுகொள்ளுங்கள் ஐயா. Troll பண்ணாமல், edit பண்ணி alter பண்ணாமல், அதாவது நான் என்ன பொருளில் சொல்கின்றேனோ, அந்த context-ஐ மாறாமல், அதே meaning-ல் வருகின்ற மாதிரி, நீங்கள் யார் எடுத்து போட்டுக்கொண்டாலும் உங்கள் மீது நாங்கள் copyright strike கொடுக்க மாட்டோம். அதைப் புரிந்துகொள்ளுங்கள். அது ஒன்று.

உண்மையில், உங்களையெல்லாம் கைலாஸாவுடைய digital ambassador-ஆக join பண்ண சொல்லி welcome பண்ணுகின்றோம்.

நிறைய பேர் பார்த்தேன் ஐயா. நிறைய பேர் பார்த்தேன். I think குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது இந்த ஸத்ஸங்ங்களில் நான் பேசுவதை shorts, reels.... இதெல்லாம்... ஒரு short videos, 10 நிமிஷம், 5 நிமிஷம், 1 நிமிஷம், 3 நிமிஷம் அந்த மாதிரி எல்லாம் videos எடுத்து போட்டு உங்கள் சேனலில் upload பண்ணியிருக்கின்றீர்கள். Individuals இல்லை, சேனல்கள் எல்லாம் upload பண்ணியிருக்கின்றீர்கள். பொருள் மாறாமல், அவதூறு செய்யாமல், troll பண்ணாமல் எடுத்து upload பண்ண எல்லோரையும் வரவேற்கின்றோம். நாங்கள் copyright strike உங்களுக்கு கொடுக்க மாட்டோம்.

அடுத்தது, இன்னொரு plan-ம் சொல்கின்றேன். இன்னொரு புது project launch பண்ணுகின்றோம் ஐயா. Digital ambassadors. இப்பொழுது நிறைய பேர் இந்த மாதிரி shorts எடுத்து போட்டு, அதில் multi million views எல்லாம் ஓடியிருக்கின்றது. அதையும் பார்த்தேன். நிறைய பேர் என்னுடைய voice- ஐ use பண்ணி அல்லது வீடியோவை use பண்ணி, இந்த content போட்டு multi million views ஓடியிருக்கின்றது.

முதல் விஷயம்: உங்களையெல்லாம் digital ambassadors-ஆக join பண்ணிக்கொள்வதற்கு welcome பண்ணுகின்றோம். அது ஒன்று.

இரண்டாவது: Digital ambassador-ஆக join பண்ணிக்கொண்டீர்களானால், நீங்கள் upload பண்ணுகின்ற contentக்கு நாங்கள் copyright strike கொடுக்க மாட்டோம். அது ஒன்று.

மூன்றாவது: இப்பொழுது YouTube-ல் அந்த வீடியோ மூலமாக உங்களுக்கு வருகின்ற வருமானம் எல்லாவற்றையும் நீங்கள் வைத்துகொள்ளலாம். அது ஏனென்றால், நிறைய மில்லியன் கணக்கில் views போவதனால், அது அந்த views- னால் கட்டாயமாக YouTube உங்களுக்கு வருமானம் கொடுக்கும். அந்த YouTube வருமானத்தை நீங்கள் வைத்துகொள்ளலாம் ஒன்று.

YouTube உங்களுக்கு என்ன வருமானம் கொடுக்கின்றதோ, அதே பணத்தை நாங்களும் match பண்ணுகின்றோம். உங்களை encourage பண்ணுவதற்கு. அதாவது நாங்கள் upload பண்ணுகின்ற எங்களுடைய வீடியோ, எங்களுடைய content எல்லாமே, ஸநாதன ஹிந்து ர்மத்தை உலகம் முழுக்க எல்லோருக்கும் கொண்டு செல்லுகின்ற இந்த நற்செயலை செய்வதனால், அந்த பெரும் நல் திருப்பணியில் நீங்களும் உதவுவதனால், YouTube உங்களுக்கு ₹100 கொடுத்தால், நாங்களும் உங்களுக்கு match பண்ணுகின்றோம். அதே அதே மாதிரி ₹100 நாங்களும் கொடுக்கிறோம். நீங்கள்... அதாவது YouTube வருமானம் உங்களுக்கு இப்பொழுது double ஆகிவிடுகிறது. அந்த மாதிரி ஆகிவிடுகிறது. YouTube ₹100 கொடுத்தால், கைலாஸத்திலிருந்து ₹100 கொடுக்கின்றார்கள். அந்த மாதிரி double ஆகிவிடும். அதனால் நீங்கள் கைலாஸாவினுடைய digital ambassador-ஆக join பண்ணிக்கொள்வதற்கு உங்களை வரவேற்கின்றோம்.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எங்களுடைய வீடியோக்களை எடுத்து upload பண்ணிக்கலாம். முக்கியம் இதுதான்... என்னவென்றால் context மாறக்கூடாது. திரிக்கக்கூடாது. troll material \-ஆக மாற்றக்கூடாது. அந்த சொல்லப்படுகின்ற ஸத்யம் தன்மை மாறாது அப்படியே நீங்கள் போட்டுக்கொண்டீர்களானால், நீங்கள் ஒரு நிமிஷம் வீடியோவாக போட்டுக்கொள்ளலாம், shorts-ஆக போட்டுக்கொள்ளலாம், reels-ஆக போட்டுக்கொள்ளலாம் அல்லது 3 நிமிஷம் வீடியோவாக போட்டுக்கொள்ளலாம் அல்லது முழு ஸத்ஸங்த்தை வேண்டுமானாலும் live-வாக போட்டுக்கொள்ளலாம். என்ன வேண்டுமானால் பண்ணிக்கொள்ளலாம். Digital ambassador-ஆக உங்களை enroll பண்ணிக்கொண்டீர்களானால், அந்த enroll பண்ணிக்கொள்வதற்கான form-ஐ project பண்ணுகின்றோம் பார்த்துகொள்ளுங்கள். kailaasa.ai/digiambassador.amb பார்த்துகொள்ளுங்கள்.

Enroll பண்ணிக்கொண்டீர்களானால் மூன்று நன்மைகள்: ஒன்று, நாங்கள் copyright strike கொடுக்க மாட்டோம், for the content you are uploading. நீங்கள் upload பண்ணுகின்ற content-க்கு copyright strike கொடுக்க மாட்டோம். இரண்டாவது, YouTube-ல் வருகின்ற வருமானத்தை நீங்களே எடுத்துகொள்ளலாம். இந்த videos மூலமாக YouTube... இந்த views மூலமாக YouTube-ல் இருந்து வருகின்ற வருமானத்தை நீங்கள் எடுத்துகொள்ளலாம். மூன்றாவது, YouTube-ல் இருந்து இந்த வீடியோ மூலமாக நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றீர்களோ, அதே அளவு வருமானத்தை நாங்கள் match பண்ணுகின்றோம். நாங்கள் உங்களுக்கு அதே பணத்தை நாங்களும் கொடுக்கிறோம். So, அப்பொழுது இரண்டு வருமானம், double வருமானமாக மாறிவிடும். அதனால் இந்த திருப்பணியை செய்ய விரும்பும் எல்லோரும், digital ambassador-ஆக உங்களை நீங்கள் register பண்ணிக்கொள்ளலாம். உங்களை வரவேற்கின்றோம். யார் யாரெல்லாம் விரும்புகிறீர்களோ, அவர்கள் register பண்ணிக்கொள்ளலாம். இது ஒரு மிகப்பெரும் நல் திருப்பணி.

அடுத்தது, YouTube-ல் இப்பொழுது ஒரு poll போட்டிருக்கின்றோம். ''இந்த 28 நாட்கள் Quantum entanglement \- இந்த த்யான ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாதத்தை பற்றி நீங்கள் எப்படி உணருகின்றீர்கள்?'' என்று கேட்டிருக்கின்றோம்.

அதில் 28 சதவீதம் பேர், ‘Manifested my quantum self’ என்று போட்டிருக்கின்றார்கள். 24 சதவீதம் பேர், 'awareness- ம் inner peace \-ம் உணர்கிறோம்' என்று போட்டிருக்கின்றார்கள். 26 சதவீதம் பேர், 'Life clarity \-யும் life reset ஆயிருக்கு' என்று போட்டிருக்கின்றார்கள். 22 சதவீதம் பேர், 'இதே ஸத்ஸங்ங்கள் ஆங்கிலத்தில் வேண்டும்' என்று போட்டிருக்கின்றீர்கள், போட்டிருக்கின்றார்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

நிச்சயமாக ஶிவராத்ரி ஸத்ஸங்ம்- ஶிவராத்ரி மற்றும் தைப்பூசம். தைப்பூசம் ஜனவரி 31-ஆம் தேதி, New York time EST படி இரவு 7 மணிக்கும், பிப்ரவரி 1-ஆம் தேதி EST படி 9:30 மணிக்கும், அதாவது ஜனவரி 31-ஆம் தேதி 7 மணிக்கு நடக்கின்றது ஆங்கில ஸத்ஸங்ம். 1-ஆம் தேதி பிப்ரவரி 9:30 காலையில் EST படி நடக்கின்ற ஸத்ஸங்ம் தமிழிலும், அப்படியென்றால் இந்தியாவில் மாலையாக வரும். இந்தியாவில் மாலை 8 மணியிலிருந்து 10 மணி என்று வரும். இந்த ஸத்ஸங்ம் தமிழிலும் இருக்கும்.

ஶிவராத்ரி ப்ரஹ்மோத்ஸவம், 13 நாட்கள்... பிப்ரவரி 6-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 18-ஆம் தேதி வரை மஹாஶிவராத்ரி ஸத்ஸங்ம் இதே நேரத்தில். அதாவது இந்திய நேரம் மாலை 8 மணி, 8-யிலிருந்து 10 வரை. EST, eastern time zone \-ல் 9:30-ல் இருந்து 11:30 வரை இதே நேரத்தில் ஆங்கிலத்தில் ஸத்ஸங்ம் நிகழும். தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் ஸத்ஸங்ம் நிகழும். ஏனென்றால், நிறைய பேர் ஆங்கிலத்தில் ஸத்ஸங்ம் வேண்டும் என்று கேட்பதனால், ஆங்கிலத்தில் நிகழும். தமிழ் மொழிபெயர்ப்பும் இருக்கும்.

So அதற்கான தலைப்பு, ஏற்கனவே ஒரு poll மூலமாக தலைப்பை மக்களே தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.

ஓம்... ஆழ்ந்து கேளுங்கள். மஹாஶிவராத்ரி ஸத்ஸங்த்தினுடைய தலைப்பு, அதுவும் மக்களையே தேர்ந்தெடுக்க சொன்னோம். Options கொடுத்து மக்கள் தேர்ந்தெடுத்த, நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுத்த தலைப்பு 'Quantum entanglement and Enlightenment.' அந்தத் தலைப்பிலேயே 13 நாட்கள் த்யான ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு நிகழும்.

அனைவரும் வந்து, பரமஶிவப் பரம்பொருளின் பேரருள் பெற்று பரமாத்வதத்தை அடைந்து, பரமானுபூதியை உற்று, ஆனந்த்தோடு வாழ்வீர்களாக என்று வரவேற்கின்றேன். ஆசீர்வதித்து வரவேற்கின்றேன்.

இன்று இந்தியாவினுடைய republic day. இந்த நன்னாளிலே பரமஶிவப் பரம்பொருள் பாரதத்தை ஆசீர்வதித்து, பாரதத்திற்கு எல்லா நன்மையும் கிடைக்க பரமஶிவப் பரம்பொருளை ப்ரார்த்திக்கின்றேன். பரமஶிவப் பரம்பொருளின் பேரருள், பாரதத்திற்கு முழுமையாகக் கிடைக்கட்டும் என்று ப்ரார்த்திக்கின்றேன். நல்லது.

அடுத்தது, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயத்தின் ஆலயங்களில் சண்டேசர் வழிபாடும், ணபதி வழிபாடும் நிகழ்ந்து, இந்த கைலாஸ நித்யானந் ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், அவதார தின ப்ரஹ்மோத்ஸவம், இனிதே நிறைவுற்று நித்யோத்ஸவம் துவங்குகிறது. அந்த நிகழ்விற்குள் நுழைவோம்.

இந்த நாற்பத்தி ஒன்பதாவது அவதார தின ப்ரஹ்மோத்ஸவம், நாற்பத்தி ஒன்பதாவது ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், 28 நாள் ஸத்ஸங்கத்தின் சாரமும், எல்லோரும் பரமாத்வைதத்தில் நிலைபெற்று, ஜீவன் முக்தராக, எல்லா நன்மையும் பெற்று, அகத்திலும், இகத்திலும், பரத்திலும் பரமஶிவப் பரம்பொருளின் பேரருளோடு பரம்பொருளை அனுபூதியாய் உணர்ந்து, பரமுக்தியில், ஜீவன் முக்தியில் வாழ்வீர்களாக. வாழ்ந்து நித்யானந்த்தில் நிலைத்து, நித்யானந்த்தில் மலர்ந்து, நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்மாக இருங்கள்.

\--------------------------------------------------------------------------------------------------------------