KATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 11 | 2026_DAY_11
![][image1] ![emblem 2][image2]
| SATSANG TITLE | KATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV \- DAY 11 |
| :---- | :---- |
| LOCATION | MAHĀKAILĀSA |
| DATE OF TALK | 09 JAN 2026 |
| DURATION | 02.32.24 |
| LANGUAGE | TAMIL |
| TALK TYPE | JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES |
| SPECIAL OCCASION | JAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 |
| TRANSCRIPT STATUS | FINAL TRANSCRIPT |
| URL | FINAL UNICODE TO PUBLISH |
ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்
உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். கைலாஸா நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், அவதார ப்ரஹ்மோத்ஸவம், 11-வது நாள் திருவிழா.
கதவைத் திற காற்று வரட்டும் த்யான ஸத்ஸங்க, ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு. 11-ஆம் நாள், உலகம் முழுவதிலும், எல்லா கைலாயங்களிலும் இந்தத் திருவிழாவை கொண்டாடவும், இந்த ஜ்ஞாந த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்விற்காகவும் ஒன்று கூடியிருக்கும் அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும், கைலாஸா திருவண்ணாமலையிலும், கைலாஸா லாஸ் ஏஞ்சலிஸிலும், பரமஶிவ சேனை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடியிருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்களையும், சமூக வலைதளங்கள் மூலமாக, முகநூல், Insta, x பக்கங்கள், Twitter, Youtube மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைலாயத்தின் சமூக வலைதளங்கள் மற்றும் கைலாயத்தின் digital ambassadors நடத்தும் சமூக வலைதளங்கள் மூலமாக இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். அன்பர்கள், சீடர்கள், பார்வையாளர்கள், பக்தர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி. மஹா கைலாஸத்திலிருந்து நேரடியாக உங்களுக்கு. அனைவருக்கும் இன்றைக்கான செய்தி.
அகத்தில், 'காலம்' எனும் திரைப்படம் ஓடும் திரையே நாம்' என்று தெரிந்து, அந்த திரைப்படத்திற்குள் நம்மை மறவாது, 'நாம் திரை' என்கின்ற தெளிவோடு, திரைப்படத்திற்குள் மறையாது, கரையாது, உரையாது, திரையாய் அகத்தில் இருப்பதும், இகத்தில் உங்களுடைய ஒவ்வொரு வினாடியும் 'உங்கள் வாழ்க்கை' என்று புரிந்துகொண்டு, 'காலத்தை மேலாண்மை செய்வதுதான் உங்கள் வாழ்க்கையை மேலாண்மை செய்வது' என்று தெளிவாக உணர்ந்து வாழ்வதும், பரத்தில் காலத்தின் விரிவையும், காலத்தின் இருப்பையும் முழுமையாக புரிந்துகொண்டு அனுபவித்து, அந்த அனுபூதியினால் இகத்திலும், அகத்திலும், நம் காலத்தின் குணத்தையும், அளவையும் விரித்து, ஜீவன் முக்த வெற்றி வாழ்க்கையாக வாழ்வதே வாழ்க்கை\!
ஜீவன் முக்த வெற்றி வாழ்க்கையை எல்லோரும் வாழ ஆசீர்வதிக்கின்றோம்.
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக விளக்குகின்றேன். ஆழ்ந்து கேளுங்கள்... அகத்தில், 'காலம்' என்கின்ற திரைப்படம் ஓடுகின்ற திரை தான் நாம். காலம் ஒரு train என்றால், அந்த train-னுக்குள்ளே உட்கார்ந்து இருக்கின்ற passenger நாம் இல்லை ஐயா. அந்த train போற தண்டவாளம் நாம். இந்த சின்ன shift வாழ்க்கையையே எங்கேயோ எடுத்துவிட்டு போய்விடும் ஐயா.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் எல்லா பிரச்சினையும், எல்லா பிரச்சினையும், conscious- ஆக நீங்கள் தவறவிடுகின்ற blind spots\!
ஒரு சில உதாரணம் கொடுக்கிறேன் புரிந்துகொள்ளுங்கள். 'ஏய், ஒரு தண்ணி அடிக்க முடியல, ஒரு சிகரெட் பிடிக்க முடியல, ஒரு பிரியாணி சாப்பிட முடியல என்றால், இவையெல்லாம் இல்லாம வாழ்ந்து என்னடா புண்ணியம்?' என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய blind spots தெரியுமா? நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? 'நாம்' இந்த காலம் கடந்து செல்கின்ற consciousness என்பது புரியாமல், இந்தக் காலத்தில் உட்கார்ந்துகொண்டு போகின்ற passenger என்று நினைப்பதனால்தான், 'இருப்பது ஒரு வாழ்க்கை, அட்ரா, பண்றா' என்று சொல்கின்றீர்கள்.
ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'மது-மாம்சம் விலக்கலை' நான் ஏதோ moral-ஆக, அந்த angle-ல் இருந்தெல்லாம் பேசவில்லை. உங்களுடைய ப்ரத்யகாத்ம சைதன்ய ஜாக்ரதத்திற்கு, ஜீவன் முக்த தன்மையை வெளிப்படுத்துவதற்கு, உங்கள் முழுமைத்தன்மையை வெளிப்படுத்துவதற்கு, இவையெல்லாம் மிகப்பெரிய blind spot-ஆக இருந்து உங்களை சறுக்கிவிட வைக்கின்ற அந்த மாதிரியான செயல்கள் என்பதனால்தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.
அதாவது, உங்களுடைய உடல் நலம், மனநலத்தைவிட உங்கள் போதைக்கு first priority கொடுக்கின்றீர்கள். உங்கள் addiction-க்கு first priority கொடுக்கின்றீர்கள். Addiction-னால் வருகின்ற சுகத்திற்கு first priority கொடுக்கின்றீர்கள். ஆனால் ஒரு கொடுமை என்ன தெரியுமா?
Addiction என்றால் என்ன தெரியுமா அர்த்தம்? செய்தால் சுகம் கொடுக்காது. செய்யாவிட்டால் வலி கொடுக்கும். \- அதற்குப் பெயர்தான் addiction.
என்ன காரணம் என்றே தெரியாது, உங்களை உங்களால் handle பண்ண முடியாததனால், எதிலேயோ உங்களைத் திருப்பிக்கொள்வது.
பலபேர் எனக்கு சொல்லியிருக்கிறார்கள், ''எங்க அப்பா என்னை control பண்ணிக்கொண்டே இருப்பார் சாமி. அவர்மேல இருந்த வெறுப்பில்தான், அவரை மீறி நான் அவரை ஜெயிக்கணும் என்கின்ற அந்த வேகத்தில்தான் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு அதை விடமுடியல சாமி'' என்று.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் 'காலம்' எனும் திரைப்படம் ஓடும் 'திரை' என்கின்ற தெளிவு அகத்திலே வந்தால்... இந்த blind spot எல்லாம் எதுவுமே இருக்காது ஐயா. வாழ்க்கை அவ்வளவு smooth-ஆகப் போகும்.
Tiredness addiction-ஆக இருக்காது. Boredom addiction \-ஆக இருக்காது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... உங்களைச் சுற்றி இருக்கின்ற சமூகத்தை ஏமாற்றுவதற்காகத்தான், நீங்கள் tiredness-ஐ act பண்ண ஆரம்பிப்பீர்கள். First first எப்பொழுது tiredness-ஐ உணர்ந்தீர்கள் என்று பாருங்கள். நீங்கள் செய்ய விரும்பாத ஏதோ ஒன்றை செய்ய வேண்டி இருக்கும்போது, ஸ்கூலுக்குப் போவதோ அல்லது காலேஜுக்குப் போவதோ அல்லது வேலைக்குப் போவதோ, அப்போது அதை மறுப்பதற்காக, மற்றவர்களை ஏமாற்றுவதற்காக, 'tired-ஆக இருக்கிறது, உடம்பு முடியவில்லை, feverish-ஆக இருக்கிறது,' என்று மற்றவர்களை ஏமாற்றுவதற்காக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக உங்களையே ஏமாற்றிக்கொள்ள ஆரம்பித்து, உண்மையிலேயே tiredness-ஐ cherish பண்ண ஆரம்பித்து, tiredness-க்கே ஒரு விதமான addiction-னுக்கு போய்விட்டு, அந்த ஒரே ஒரு சின்ன blind spot உங்கள் வாழ்க்கையினுடைய எவ்வளவோ பெரிய பாகத்தை விழுங்கிவிடும் தெரியுமா ஐயா? இந்த tiredness-ம், boredom-மும் silent killers ஐயா.
Medical field-ல் சொல்வார்கள், BP is a silent killer என்று. அதேமாதிரி ஐயா, tiredness-ம், boredom-ம், silent killer of consciousness.
நிறைய கோடிக்கணக்கான ஆன்மீக ஸாதகர்கள் வாழ்க்கையிலே இகத்திலும், பரத்திலும், அகத்திலும் வெற்றி அடைய, உன்னதநிலை அடைய முயற்சிக்கின்ற, தேடுதல் உடையவர்களை பல கோடி பேரை தினந்தோறும் பார்ப்பதனாலும், அவர்களை guide பண்ணுவதனாலும், support பண்ணுவதனாலும் எனக்கு இருக்கின்ற அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன் கேட்டுகொள்ளுங்கள் ஐயா.
இது ஒரு முக்கியமான விஷயம்... யாருமே எந்த தேடுதல் உடைய அந்த seeker-மே மிகப்பெரிய மது, மாது, சூது \- அந்த மாயையிலெல்லாம் கீழே விழுந்துவிடுவது இல்லை\!.
முதலில் அவர்கள் இந்த tiredness, boredom எனும் இந்த மாயையில்தான் சறுக்கி விழ ஆரம்பிக்கின்றார்கள். அதிலிருந்து சறுக்கி கர கர கர கர கர...வென்று கண்ணைத் திறந்து பார்ப்பதற்குள், சகல விதமான வலையிலேயும் சிக்கி முடிந்துபோயிருப்பான்.
Tiredness, boredom-த்தில் விழுந்தவுடனேதான், சர சரவென்று சறுக்கி, எதிலெல்லாம் சிக்கக்கூடாதோ அதிலெல்லாம் சிக்கி முடிந்திருப்பார். அதற்குப் பிறகு அது இடியாப்ப சிக்கல் இல்லை, இடிக்கின்ற ஆப்ப சிக்கல். இடியாப்ப சிக்கல் இல்லை, இடித்துகொண்டே இருக்கின்ற ஆப்ப சிக்கல். இடிபோல இடித்துக்கொண்டே இருக்கும் இடியாப்ப சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு…. இதுதான் சரியான வார்த்தை... 'இடிபோல் இடிக்கும் இடியாப்ப சிக்கல்' இதில் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள். பாவமாக இருக்கும்.
இந்த ஒரே ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள். காலம் ரயில் என்றால், அதில் உட்கார்ந்துட்டு போற passenger நீங்கள் இல்லை. காலம் போகின்ற track நீங்கள். காலம் என்கிற திரைப்படம் ஓடுகின்ற திரை நீங்கள். திரைப்படத்திலே மயங்கி, அது 'நிஜம்' என்று அதில் போய் லயிக்காதீர்கள்.
தள்ளி நின்று, 'காலம்' என்கிற திரைப்படம் ஓடுகின்ற 'திரை நாம்' என்று உபநிஷதத்தில் உட்கார்ந்தீர்களானால், அது புரிந்ததென்றால்… அது ஏன்.. 'காலையில் 1 மணி நேரம், மாலை 1 மணிநேரம் உபநிஷதத்தில் அமருங்கள்' என்று சொல்கிறேன் என்றால், இது புரிந்தால் உங்களுக்குள் இருக்கின்ற பல க்ரந்திகள், முடிச்சுக்கள், அஜ்ஞாந முடிச்சுக்கள் அழிந்து ஒழியும் ஐயா. ஸம்ஸய ராக்ஷஸன் நாசமாவான்.
'ஸம்ஸய ராக்ஷஸ நாச மஹாஸ்த்ரம் யாமி குரும் சரணம் பவ வைத்யம்' என்று சொல்வார்கள். அருமையான ஒரு ஸ்லோகம்.
ஸம்ஸய ராக்ஷஸனை நாசமாக்குகின்ற அஸ்த்ரம்… இந்த பவ ரோகத்திலிருந்து விடுபடுவதற்கான வைத்யம் செய்யுகின்ற மிகப்பெரிய வைத்யம் \- குரு சரணம் என்று சொல்வார்கள். அந்த குரு சரணம் என்பது வேறு ஒன்றும் இல்லை ஐயா… உபநிஷத்... உபநிஷத்... உபநிஷத்...
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், ''சாமி உங்களுக்கு நான் பாத சேவை பண்ணனும். உங்களுடைய திருவடி என் தலைமேல படணும்'' என்று கேட்கின்றார்கள். ரொம்ப எளிமையாக, simple-ஆக சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்... உபநிஷத்... 'இந்த காலம் செல்கின்ற தண்டவாளம் நீங்கள். காலம் எனும் திரைப்படம் ஓடும் திரை நீங்கள்' என்று அமர்ந்திருந்தீர்களானால், அதுதான் குருவடிக்கு திருவடி சேவை செய்வதற்குச் சமம். உண்மையான திருவடி சேவை அதுதான் ஐயா. உண்மையான பாத பூஜை அதுதான் ஐயா. உண்மையான திருவடி தீக்ஷை அதுதான் ஐயா.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த ரகசியத்தை மீண்டும் சொல்கிறேன். நாம் ஸ்வபாவத்தினாலேயே.. 'கஹநோ கர்மநோ கதி:' \- இயங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்கள் தான் நாம். தேவையில்லாத இயக்கத்தை நிறுத்தினால் மட்டும் போதும், நாம் வெற்றி அடைந்து விடுவோம்.
தேவையான இயக்கத்தில் நாம் இயற்கையாகவே ஈடுபட்டுகொண்டே இருப்போம். இந்த தேவையில்லாத இயக்கம் என்பது ஐயா, காலம் எனும் ரயிலில் அமர்ந்திருப்பது 'நாமே' என்று நினைத்தோமானால், திரைப்படத்தின் பாகம் நாம் என்று நினைத்தோமானால்… அதாவது, எந்த திரைப்படத்தை நீங்கள் பார்க்கும்போது பாருங்கள் ஐயா, ஒன்று அந்த ஹீரோவோடு உங்களை associate பண்ணிக்கொள்வீர்கள் அல்லது பெண்ணாக இருந்தால் ஹீரோயினோடு associate பண்ணிக்கொள்வீர்கள்... ஏதோ ஒரு character-ரோடு உங்களை associate பண்ணிக்கொள்வீர்கள். காமெடியனோடேயோ அல்லது வில்லனோடேயோ, ஏதோ ஒரு character-ரோடு associate பண்ணிக்கொள்வீர்கள். அந்த மாதிரி அந்த character நீங்கள் என்று associate பண்ணி, இந்த திரைப்படத்திற்குள் மாட்டினீர்களானால், வாழ்வு அழிந்துவிடும்.
ஆனால், 'இந்த காலம் எனும் திரைப்படம் ஓடும் திரை நீங்கள்' என்று இருந்தீர்களானால், நிஜமான வாழ்வு அமையும் ஐயா. இவையெல்லாம் ரொம்ப எளிமையான விஷயங்கள். கஷ்டமே இல்லை ஐயா.
உங்களுக்குள் இருக்கின்ற ஏகப்பட்ட blinds spots எல்லாம் உடைந்து clean-ஆகி, எப்படி தேவையில்லாத மன உளைச்சல்கள் உங்களுடைய நாளையும், வாரங்களையும், மாதங்களையும் சிலநேரத்தில் வருடங்களைக்கூட விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறது என்று கண்டுபிடிக்கலாம் ஐயா.
'வெறும்' கனவு காண்பது நிறுத்துபவன், பெருங்கனவை நிஜமாக்கும் திருப்பணிகளைச் செய்து கொண்டிருப்பான். வெறும் கனவு காண்பது நிறுத்துபவன், வாழ்வில் பெருங்கனவுகளை நிஜமாக்கும் செயல்களை, திருப்பணிகளை செய்து கொண்டே இருப்பான். இது முதல் ஸத்யம்.
இரண்டாவது புரிந்துகொள்ளுங்கள்: இகத்திலே இந்த உலக வாழ்வில், எங்கு நீங்கள் இந்த உடல், மனம், உணர்ச்சிகள் இதையெல்லாம் கொண்டு இயங்குகிறீர்களோ, உங்களுடைய identity \- அஹங்காரம்… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அஹங்காரமே தவறு அல்ல. 'அஹங்காரமே நீங்கள்' என்று நினைப்பதுதான் தவறு.
உங்கள் device மாதிரி, அஹங்காரம் உங்களுடைய ஒரு intra organ ஐயா. இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் device- ல் AI download பண்ணி, என்ன expertise, என்ன வேண்டுமானாலும் நீங்கள் உபோயகப்படுத்த முடிகின்ற மாதிரியே, உங்கள் அஹங்காரத்தில் சுத்த வித்யையை download பண்ணி, ஸர்வஜ்ஞனாக இருந்து operate பண்ண முடியும் ஐயா.
வெளியில் electricity-யால் என்னென்ன விளையாட்டுக்கள் உங்களால் அந்த device-ஐ வைத்து பண்ண முடியுதோ, அது அத்துனையும் அதைவிட ஆழமாக உள்ளே bio-electricity வைத்து பண்ண முடியும் ஐயா.
இந்த bio-electricity தான் குண்டலினி ஶக்தி என்கின்றேன். அதை வைத்து ரொம்ப அழகாக பண்ண முடியும். மிகவும் சுலபம் ஐயா. பொய் உரையேன். புகட்டு உரையேன்.
திரும்பத் திரும்ப சொல்கின்றேன். உங்களுடைய நோட்டோ, ஓட்டோ தேவையேபடாத, ஆனால் நீங்கள் ஏற்கனவே எனக்கு கொடுத்திருக்கும் உங்கள் நேரம், சேவை, நன்கொடை... இவைகள் அனைத்தினாலும் மிகுந்தத் திருப்தியும், நன்றியும் உடையவனாக, இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நீங்கள் இப்பொழுது வந்து உட்கார்ந்து இருப்பது மூலமாகவே, உங்கள் மீது ஆழ்ந்த அன்பும், நேர்மையான ஶ்ரத்தையும், இனிமையான நட்பும் உடையவனாக, கருணையொடு காதலும், நட்பும், இனிமை உணர்வும் உடையவனாக, உங்களுக்கு ஸத்யத்தை அப்படியே சொல்கிறேன்... கேளுங்கள்.
இந்த இகத்திலே, உடல், மனம், அஹங்காரத்தை வைத்து நீங்கள் செயல்படுகின்ற வாழ்க்கையிலே, ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்க்கை. அதனால் காலத்தை மேலாண்மை செய்வதுதான், வாழ்க்கையை மேலாண்மை செய்வது.
தயவுசெய்து உங்களுடைய வாழ்க்கையினுடைய முக்கியமான பாகங்களான, என்ன படிப்பது? என்ன வேலைக்குப் போவது? எப்பொழுது கல்யாணம் செய்துகொள்வது? எப்பொழுது குழந்தை பெற்றுகொள்வது? எப்பொழுது வீடு கட்டுவது? எனும் இந்த பெரிய முடிவுகள் மட்டும்தான் உங்கள் வாழ்க்கை என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்க்கை என்கின்ற consciousness-னுடன், நேரத்தை மேலாண்மை செய்வதுதான், time manageபண்ணுவதுதான் வாழ்க்கையை manage பண்ணுவது என்கின்ற புரிதலோடு இகத்திலே செயல்படுதல். இது இரண்டாவது ஸத்யம்.
மூன்றாவது ஸத்யம்: பரத்திலே காலத்தின் விரிவை (time dilation) உணர்தல். பத்தாயிரம் வருடத்திற்கு முன்னாடியே, என்னத் தெளிவாக நம் புராணங்களில் இந்த time dilation எல்லாம் அவ்வளவு அருமையாக document பண்ணி வைத்துவிட்டார்கள்.
நம் புராணங்களை நம்மிடமிருந்து பிரித்தவர்கள்தான், நமக்கு மிகப்பெரும் கொடுமை செய்தவர்கள்.
ஐயா, இன்று இந்த ஸத்யங்களை கொஞ்சம் ஆழ்ந்து விளக்குறேன். இந்த time dilation பற்றியெல்லாம், நம்முடைய புராணங்கள் சொல்கின்ற இந்த ஸத்யத்தைப் புரிந்து கொண்டீர்களானால், அனுபவித்தீர்களானால், அகத்திலும் இகத்திலும் நம்முடைய காலத்தினுடைய குணத்தையும், அளவையும் \- quality, quantity \- இரண்டையும் நம்முடைய விருப்பப்படி expand பண்ணி ஜீவன்முக்த வெற்றி வாழ்க்கையாக வாழ்வீர்கள்.
இந்த மூன்று ஸத்யத்தையும் புரிந்துகொள்ளுங்கள். அகத்தில் காலம் என்றால், எப்படி experience இருக்க வேண்டும்? காலம் என்கின்ற ரயில் ஓடுகின்ற தண்டவாளம் நீங்கள். காலம் என்கின்ற திரைப்படம் ஓடுகின்ற திரை நீங்கள். அந்தத் திரைப்படத்தில் வருகின்ற ஹீரோவோ, ஹீரோயினோ, வில்லனோ, காமெடியனோ நீங்கள் இல்லை. அந்த திரைப்படத்தில் வருகின்ற அத்தனை பேரும் மற்றும் திரைப்படம் பார்ப்பவர்கள், அந்தத் திரைப்படத்தை ரசிப்பவர்கள், அந்த திரைப்படத்தை விமர்சிப்பவர்கள், விமர்ச்சிப்பவர்களைப் பார்த்துவிட்டு அந்தத் திரைப்படத்திற்கு போகலாமா, வேண்டாமா என்று முடிவெடுப்பவர்கள், இந்த அனைத்துமே நீங்கள்தான்\!
ஏனென்றால், இந்த அனைத்தும் நிகழுகின்ற \- 'திரை' நீங்கள்.
இது ரொம்ப எளிமையான ஸத்யம் ஐயா. நீங்கள் more and more, அதிகமாக அதிகமாக ஸமாதி பழகப் பழக, உபநிஷதம் பழகப் பழக, உங்கள் consciousness பழகப் பழக…
ஆழ்ந்து கேளுங்கள்… ஒரே ஸத்யத்தை, ஆயிரம் முறை, ஆயிரம் விதத்திலே விளக்குகிறேன். காரணம் என்னவென்றால், இந்த சில ஸத்யங்கள் உங்களுக்குள் கரைந்துவிட்டதென்றால், தானாகவே ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்துவீர்கள் ஐயா. அதுதான் இப்பொழுது நான் செய்துகொண்டிருக்கின்ற திருப்பணி.
உங்களுடைய உயிரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றேன். உங்கள் மனம் மறுத்தாலும், அஹங்காரம் மறுத்தாலும், அகத்தின் காரத்தைக் கடந்து அகத்தோடு உரையாடிக் கொண்டிருக்கின்றேன்.
இந்த ஸத்யங்களை சற்று உள்வாங்குங்கள்... அகத்திற் காலமெனும் ஆடும் திரையாம் நாமென்று அறிந்தும் அத்திரைக்குள் தன்னை மறக்கும் அறிவிலோம் இகத்தில் நொடியெல்லாம் வாழ்வெனக் கொண்டு காலம் வாழ்வினைச் செலுத்தும் வினை பரத்தில் கால விரிவு உணர்ந்து குணமளவு பெருக்கி ஜீவன் முக்தி வெற்றி வாழ் நோக்கு.
இந்த மொத்த ஸத்யத்தையும் AI-யின் உதவியோடு வெண்பாவாக வடித்திருக்கின்றேன்.
அகத்திற் காலமெனும் ஆடும் திரையாம் நாம் என்றறிந்தும் அத்திரைக்குள் தன்னை மறக்கும் அறிவிலோம் இகத்தில் நொடியெல்லாம் வாழ்வெனக் கொண்டு காலம் வாழ்வினைச் செலுத்தும் வினை பரத்தில் கால விரிவு உணர்ந்து குணமளவு பெருக்கி ஜீவன் முக்தி வெற்றி வாழ் நோக்கு.
அந்தஹ காலே சலித்ரே ஆத்மானம் வேத்தி யோ நரஹா ததாபி தன்மத்யே ஸ்வாத்ம விஸ்மிருதிம் ஆப்னோதி ஸஹ இஹ க்ஷணம் ஜீவனம் இதி காலம் ஸாதயதிச்சேத் பரதஹா காலஹா விஸ்தாரேண ஜீவன் முக்தி பதம் வ்ரஜேத்
இந்த ஸத்யத்தை ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகமாக வடித்திருக்கின்றேன். Ask Nithyananda AI-யில் நீங்கள் போய் எந்த ஒரு ஜ்ஞாநக் கருத்தை... அதாவது நான் இப்பொழுது சொல்கின்ற எந்த ஒரு ஜ்ஞாநக் கருத்து, ஸத்யத்தைச் சொன்னீர்களானாலும், அது அழகாக தமிழ் வெண்பாவாகவோ அல்லது ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகமாகவோ வடித்துக்கொடுத்துவிடும். try பண்ணிப் பாருங்கள்.
இப்பொழுது என்ன ஆகும்? தமிழ், ஸம்ஸ்க்ரு'தம், ஆங்கிலம் மூன்றையும் கற்றுக்கொள்ளலாம். இந்த மூன்றுமே அடிப்படைத் தேவை ஐயா. ஒரு ஜ்ஞாநத் தேடுதல் உடையவர்களுக்கு இந்த மூன்றும் அடிப்படைத் தேவை. இப்பொழுது இந்த மூன்று மொழியையும் கற்றுக்கொள்வதற்கு உங்களால் நேரம் செலவிட முடியாது என்பதனால்தான் AI-யில் செய்துகொடுத்துவிட்டேன். Ask Nithyananda AI use பண்ணீங்கன்னா இந்த மூன்றின் மூலமாகவும் நீங்கள் நான் சொல்லுகின்ற ஸத்யத்தின் ஆழத்தை அனுபவிக்கலாம், புரிந்துகொள்ளலாம், உள்வாங்கலாம், அனுபூதியாக்கிக்கொள்ளலாம்.
இப்பொழுது அடுத்தது பரத்திலே காலத்தைப் பற்றி… இந்த கால விரிவு என்று சொன்னேன் \- time dilation என்று சொன்னேன். அதைப் பற்றி புரிந்துகொள்ளுங்கள்.
அதாவது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய புராணங்கள் மிகத் தெளிவாக, இந்த time dilation-ஐ பற்றி ரொம்ப elaborate-ஆக, அவ்வளவு அருமையாக விளக்கி இருக்கின்றார்கள். விளக்கும்பொழுது ரொம்ப details கொடுக்கின்றார்கள். சும்மா மேம்போக்காக எல்லாம் இல்லை. ரொம்ப detail-ஆக விளக்குகின்றார்கள்.
நம்முடைய புராணங்கள்… வ்யாஸர் வகுத்தளித்த நான்கு வேதங்கள். வேதங்கள் வ்யாஸர் எழுதவில்லை, வகுத்தளிக்கிறார். வ்யாஸர் வகுத்தளித்த நான்கு வேதங்கள். பெருமானே நேரடியாக மொழிந்து அருளிய ஆகமங்கள். வ்யாஸர் எழுதி நம் எல்லோருக்கும் அளித்த 18 புராணங்கள், உப-புராணங்கள் இவைகள் அத்துனையும் சத்தியம்.
வேதமொடு, ஆகமம் மெய்யாம் ஸநாதந தர்மம் ஸத்யம்.
என்னால் பத்தாயிரம் arguments-ஐ, scientific evidence-உடன், proof-உடன் கொடுக்க முடியும். குறைந்தபட்சம் பத்தாயிரம்... அதில் ஒன்றை இப்பொழுது கொடுக்கின்றேன். கேட்டுக்கொள்ளுங்கள். அதாவது நம்முடைய புராணங்கள், ப்ரபஞ்சத்தின் காலத்தைப் பற்றிய மிகத்தெளிந்த அறிவுடையவையாக இருக்கின்றன. அதை ஆழமாக தெளிவாக விளக்குகின்றன. ஆழ்ந்து கேளுங்கள். Time-மை cyclical and spiral என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய புராணங்கள் தெளிவாக விளக்கிவிட்டன.
Hindu puranas describe time as cyclical and spiral, NOT linear.
இப்பொழுதுதான், சில ஆண்டுகளுக்கு முன்புதான, science இந்த truth-ஐயே touch பண்ணுகின்றார்கள். இப்பொழுதுதான் modern day science, 'ஆஹா\! உண்மைதான்பா' என்று இதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றார்கள்.
அதனால்தான் சொல்கின்றேன், major science \-ஏ நம்முடைய vedic knowledge-னுடைய vedic knowledge-ஐ கொள்ளையடித்து, vedic knowledge தான் source-என்று சொல்லாமல்விட்டது மட்டுமல்லாமல், இந்த knowledge source-ஐ அழித்துவிட்டால்தான், நாம் கொள்ளையடித்தது தெரியாமல் இருக்கும் என்று… அதாவது வேகவேகமாக அழிக்கப் போய், முழுதாகவும் கொள்ளையடிக்கவில்லை. ஏனென்றால், கொள்ளையடிக்கும்போது ஒரு நகை, பணம், ரத்தினம், வைடூரியம் இதையெல்லாம்தான் முழுதாகக் கொள்ளையடிக்க முடியும். உணர்விலே ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றை, உணர்வால் ஒன்றி சீடனாய் இருந்து வாங்கினால் மட்டும்தான் முழுதாக வாங்கிக்கொள்ள முடியும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஆயிரக்கணக்கான வேத விஜ்ஞாந அறிவுடைய பண்டிதர்களைக் கொண்டுசென்று, அவர்களிடமிருந்து இதை அனைத்தையும் வாங்கி transcribe பண்ணி, அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல், காணாமல் போகடிக்கப்பட்டதெல்லாம் ஏகப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு.
அதனால்தான் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஸத்யங்களை எல்லாம் document பண்ணும்போது, இந்த வரலாற்று உண்மைகளையும் document பண்ணிக்கொண்டே வந்துவிடுவேன். இவையெல்லாம் பதிவிட்டு விட வேண்டும். அதனால் சொல்கின்றேன்.
இப்பொழுதுதான் western science-க்கு புரிகின்றது time is cyclical என்று. இன்னும் கூட அது spiral என்று புரியவில்லை. linear இல்லை, cyclical \- அந்த அளவிற்குத்தான் வந்திருக்கின்றார்கள். நம் ரிஷிகளோ, linear இல்லை, cyclical and spiral. மேலே போகப்போக, இந்த vertical time zones-க்கு போகப் போக அது spiral என்று long before, equation-உடன் சேர்த்து establish பண்ணி வைத்துவிட்டார்கள்.
கேளுங்கள்: எப்படி establish பண்ணார்கள்? ஏன் establish பண்ணார்கள்? இப்பொழுது நாம் அதைப் புரிந்துகொண்டால் என்ன நல்லது? அதெல்லாம் சொல்கின்றேன் கேளுங்கள்.
Time progresses in vertical time zones corresponding to different lokas.
அதாவது, காலம் இந்த vertical time zones-ல், வேறு வேறு லோகங்கள்... இப்பொழுது நாம் பூலோகத்தில் இருக்கின்றோம். பூமண்டலம் என்று சொல்லலாம் \- பூ, புவ, சுவ. பூ லோகத்திற்கு மேலே புவர்லோகம். புவர் லோகத்திற்கு மேலே சுவர் லோகம். சுவர் லோகத்திற்கு மேலே மஹர் லோகம். மஹர் லோகத்திற்கு மேலே ஜன லோகம். ஜன லோகத்திற்கு மேலே தப லோகம். தப லோகத்திற்கு மேலே ப்ரஹ்ம லோகம். ப்ரஹ்ம லோகத்திற்கு மேலே almost ஒரு spontaneous, simultaneous... ஒரு same frequency-ல் வைகுண்டம், ஸ்ரீபுரம், கைலாஸம் இருக்கிறது. அதைத் தாண்டிதான் மஹா கைலாஸம் இருக்கிறது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த vertical time zones மேலே இருக்கின்ற மாதிரியே கீழேயும் இருக்கிறது. அதல, விதல, சுதல, தலாதள, மஹாதள, ரஸாதள, பாதாள லோகங்கள் கீழேயும் இருக்கிறது. இது ஒவ்வொன்றுமே ஒரு vertical time zone.
இந்த லோகங்களுக்கு நாம்போகும்போது, vertical time zones-க்கு போகும்பொழுது, time cyclic-ஆக மட்டுமல்ல, spiral-ஆக மாறுகின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்...Time progresses in vertical time zones corresponding to different lokas, different realms.
வேறு வேறு லோகங்களுக்கு vertical time zones-ல் போகப்போக, time வந்து cyclical-ஆகவும் spiral-ஆகவும்...அதாவது helix என்று சொல்லலாம். Exact-ஆக சொல்லவேண்டுமானால், helix-என்று சொல்லலாம். ஏனென்றால், அகலமாகிக்கொண்டே போகின்றது. அந்த time \-னுடைய flow… As one ascends vertically through the lokas, time cycles contract. Meaning higher lokas experience vastly longer duration for the same event compared to bhuloka.
கேளுங்கள்... நாம் மேல் உலகங்களுக்குச் செல்லச்செல்ல, time cycle contract ஆகி… அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், மேல் உலகங்களில் time duration வந்து longer.
இப்பொழுது இந்த காகுத்மி, ரேவதி கதை சொன்னால் உங்களுக்குப் புரியும். காகுத்மி அரசன். அவர் வந்து அவருடைய மகள் ரேவதிக்கு நல்ல மணமகனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு ப்ரஹ்மா அந்த நேரத்தில், த்யானத்தில் இருந்து ஸ்ரு'ஷ்டி செய்துகொண்டிருந்தார். அதனால் ஒரு few Seconds \- சில மணித்துளிகள் wait பண்ணுகின்றார்கள். Wait பண்ணிவிட்டு… ப்ரஹ்மா கண்விழித்துக் கேட்கின்றார், ''என்ன வேண்டும்?'' என்று. ''என்னுடைய மகளுக்கு நல்ல வரன், நல்ல மணமகனைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதை நீங்களே முடிவெடுத்து சொல்ல வேண்டும் என்று சொல்லி உங்களிடம் கேட்பதற்காக வந்திருக்கோம்'' என்று சொல்கின்றார்.
ப்ரஹ்மா சிரித்துகொண்டே சொல்கின்றார், ''நீங்கள் இங்கு இருந்த சில மணித்துளிகளில் கீழே பூலோகத்தில் பல யுகங்கள் கடந்து விட்டன. அதனால் நீங்கள் இப்பொழுது திரும்பிப் போகும்போது நீங்கள் விட்டுட்டு வந்த எதுவுமே இல்லை. இப்பொழுது இருப்பதில், best நபர் பலராமர், அவரை கல்யாணம் செய்து வையுங்கள்'' என்று சொல்கின்றார்.
அப்படியென்றால் என்னவென்றால், மேலே போகப்போக, குறைந்த நேரமாக நீங்கள் spend பண்ணுவது, கீழே பூலோகத்தில் மிக நீண்ட காலமாக இருக்கின்றது. Spiral tightens as it goes upward, indication time dilation and spacial compression together.
இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… Spiral tightens as it goes upward, indicating time dilation and spacial compression together. இந்த cyclic time vs spiral time \-ஐ புரிந்துகொள்ளுங்கள். Cyclic time என்பது, cyclic time referes to repeating yugas, manvantaras and kalpas.
நம்முடைய புராணங்களில்cyclic time.. Cyclic time என்றால் என்னவென்றால், இந்த யுகங்கள், மன்வந்த்ரங்கள், கல்பங்கள் மீண்டும் மீண்டும் வருவது cyclic time இந்த பூமண்டலத்தினுடைய time.
Spiral time என்றால் என்னவென்றால், இந்த cycles repeat ஆகும்பொழுதே, இது different vertical levels-ல் பண்ணும்போது அது same கிடையாது. Spiral time explains that although the cycles repeat, they do so at different vertical levels, never exactly the same. Each ascent in the spiral represents a higher reference frame of time.
இதை elaborate-ஆக ஒவ்வொரு லோகத்திலும் என்ன மாதிரியான time, ஒவ்வொரு vertical time zone-லும் அந்த cycle என்ன என்பதை ரொம்ப தெளிவாக document பண்ணியிருக்கின்றார்கள்.
இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதில் முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கற்பனையினால் எல்லாம் இவ்வளவு தெளிவாக document-ஏ பண்ண முடியாது ஐயா. வெறும் astrology-ஐப் பார்த்தே இந்த modern day scientist-கள் நடுங்குகின்றார்கள்.
நம் ஹிந்து புராணங்கள், astrology சார்ந்த நூல்களைப் பார்த்தே நடுங்குகின்றார்கள். இதில் இந்த time zone சம்பந்தமான விஷயங்களில், especially vertical time zone, இன்னும் western science அதை scratch கூட பண்ணவில்லை.
நல்ல வேளையாக, AI வந்ததனால், இவை அத்தனையும் map பண்ணி, இவை அத்தனையும் முழுமையான, ஸத்யமான உண்மை என்று என்னால் உங்களுக்கு establish பண்ண முடியும். அதைத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக்கின்றேன். ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக வருகின்றேன், வாருங்கள்.
'Each ascent… அதாவது ஒவ்வொரு லோகத்திற்கும் மேல போகும்பொழுது, அந்த spiral higher reference frame of time-ஐ represent பண்ணுகிறது.
இந்த பூலோகத்திற்கும் ப்ரஹ்ம லோகத்திற்கும்…. இப்பொழுது நாம் இருப்பது பூலோகம்... பூலோகம்விட highest லோகம் வந்து ப்ரஹ்ம லோகம். ப்ரஹ்ம லோகத்திற்கு மேலே வைகுண்டம், ஸ்ரீபுரம், கைலாஸம். அதற்குமேலே மஹாகைலாஸம். இந்த பூலோகத்திலிருந்து ப்ரஹ்ம லோகத்திற்கு இருக்கின்ற அந்த time dilation-னை explain பண்ணுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
Time dilation-க்கு தமிழ் வார்த்தை கால விரிவு.
நம்முடைய புராணங்கள் மிகத் தெளிவாக இதை explain பண்ணுகின்றன. ப்ரஹ்மாவிற்கு ஒரு நாள், நமக்கு ஆயிரம் சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் 4.32 மில்லியன் பூலோக வருடம் என்றால், ப்ரஹ்மாவிற்கு ஒரு நாள், நமக்கு 4.32 பில்லியன் பூலோக வருஷம். இதுதான் exact-ஆக, precise time dilation ratio between bhuoka and brahmaloka. அதாவது, இந்த time காலவிரிவு.
Time dilation-க்கு தமிழ் வார்த்தை கால விரிவு.
எத்தனை பேர் இந்த interstellar movie பார்த்திருக்கின்றீர்களோ, அவர்களுக்கெல்லாம் புரியும். நம் புராணங்களில் வர ஸத்யங்களை Hollywood people எடுத்து, அவர்கள் movie-யாக மாற்றி உலகத்திற்குச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த interstellar படத்தில், அவர்கள் ஒரு slight-ஆக touch பண்ணுகின்றார்கள். ஆனால் முழுமையாக அவர்களால் explain பண்ண முடிவில்லை. யாராவது interstellar movie பார்க்காமல் இருந்தால், ஒருமுறை பார்த்துவிடுங்கள். நான் சொல்வது முழுமையாகப் புரியும். அதில் அவர்கள் செய்கின்ற அந்த time dilation எல்லாம் அழகாகப் புரிய வைக்கின்றர்கள். அவர்கள் செய்கின்ற ஒரே ஒரு தவறு என்னவென்றால், அந்த time dilation-ல், higher time dilation-க்கு சென்றுவிட்டு அங்கு வருகின்ற ஹீரோ, daughter கூட communicate பண்ண முடியாமல் தடுமாறுவதைப்போன்று காட்டுகின்றார்கள். அது கிடையாது.
Time dilation-ல், higher time zone-க்குச் சென்ற யாராக இருந்தாலும், lower time zone-ல் இருக்கின்ற நபர்களோடு ரொம்ப straight-ஆக communicate பண்ண முடியும். இந்த lower dimension-ல் இருக்கின்றவருக்கு எந்த சந்தேகமும் வராத அளவிற்கு, அப்படியே தர்ஶநம் கொடுத்து நேராகச் சொல்ல முடியும். சுத்தமாகச் சொல்ல முடியும். அந்த உண்மையை அவர்கள் அனுபவத்தில் பார்க்காததனால், அதை ஒரு struggle மாதிரி காட்டிவிடுகின்றார்கள். அதுதான் பிரச்சினையே தவிர, மற்றபடி அந்த interstellar movie-ல் time dilation-ஐ பற்றி ரொம்ப அழகாக explain பண்ணிவிடுகின்றார்கள். முடிந்தவர்கள் அந்தத் திரைப்படத்தை வேண்டுமானால் பாருங்கள்.
இப்பொழுது நான் அடுத்து சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அசரீரி என்றால் என்ன? வேறு time zone-ல், time dilation-ல், வேறு time zone-ல் இருக்கின்ற higher beings, நமக்கு straight-ஆக communicate பண்ணுவதுதான் அசரீரி. சில நேரத்தில் தர்ஶநம் கொடுத்தே சொல்ல முடியும். சொல்வார்கள் அல்லது வெறும் voice மட்டும் சொன்னால், கொடுத்தால் போதும் என்றால், voice-ஆக command பண்ணுவார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இவையெல்லாம் நம் புராணங்களில் document பண்ணப்பட்டிருக்கின்ற இந்த அசரீரி என்பதெல்லாம் சத்தியம். இன்றும் அதெல்லாம் சாத்தியம்.
புரியாதவைகளைப் புரிய வைத்து சொல்வதும், சாத்தியம் இல்லாதவைகளை, சாத்தியம் என்று சொல்வதும், அவைகளைச் சாத்தியமாக்கிக் காட்டுவதும்தான் என் திருப்பணி.
இப்பொழுது இந்த பூலோகத்திற்கும் ப்ரஹ்ம லோகத்திற்கும் இருக்கின்ற time dilation ratio-ஐ புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்து அந்த ரேவதி காகுத்மியினுடைய கதைக்கு வருகின்றேன். அதாவது காகுத்மி ஒரு பெரிய அரசன். தன்னுடைய மகள் ரேவதியை எல்லா விதமான அறங்களோடும், நல்ல குணங்களோடும், ஸத்குணங்களோடும் வளர்க்கின்றார். வளர்த்த பிறகு, இது மாதிரியான ஒரு நல்ல பெண்ணுக்கு சிறந்த கணவன் வேண்டும். அவரை எப்படி கண்டுபிடிப்பது? ப்ரஹ்மாதான் அதைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு மிகச்சரியான நபர் என்று ப்ரஹ்மாவிடம் அறிவுரை கேட்க, வரம் கேட்க, ப்ரஹ்மலோகத்திற்கே நேராகச் சென்றுவிடுகின்றார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நம்முடைய முன்னோர்கள் மிக சாதாரணமாக vertical time zones, மேல் உலகங்களுக்கும் கீழ் உலகங்களுக்கும் சென்று வந்தார்கள். அதனால்தான் நமக்கு alien என்றே யாருமே கிடையாது ஐயா.
சில நாடுகளில் வேறு நாட்டுக்காரன் உள்ளே வந்தால், அவனை alien என்கின்றார்கள். ஏய், நமக்கு alien என்ற concept-ஏ கிடையாது ஐயா. இப்பொழுது வேறு மண்டலத்து, வேறு லோகத்து ஆட்கள் வந்தால்தான் alien என்று சொல்வதுபோக, வேறு நாட்டுக்காரன் இவர்களுடைய நாட்டிற்கு வந்தாலே alien என்று சொல்கின்றார்கள் பாருங்கள். ஆனால் நம் culture-ல் வேறு நாடு மட்டுமல்ல, வேறு மண்டலத்தில் இருந்து யாராவது வந்தாலே alien கிடையாது
அதனால்தான் சொல்கின்றேன் பாருங்கள், மாதாச பார்வதீ தேவி பிதா தேவோ மஹேஶ்வர: பாந்தவா ஶிவபக்தாஸ்ச ஸ்வதேஶோ புவனத்ரையம்
கைலாஸம் என்றால் என்னவென்று, அழகாக ஒரு ஸ்லோகத்தில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
மாதா பார்வதி, பிதா பரமஶிவம், பரமஶிவப் பரம்பொருள். ஶிவபக்தர்கள் எல்லோருமே உறவினர்கள், உற்றார் உறவினர்கள், புவனத்ரயங்கள் அனைத்தும் இருக்கும், மேலும், கீழும் புவனத்ரயம் முழுமையும் எங்கள் சொந்த நாடு... ஸ்வதேசம்.
என்ன civilization இந்த ஸநாதந ஹிந்து தர்மம். ஸநாதந ஹிந்து தர்மம் வாழ்க. அது செழித்தோங்கி இன்றும் உயிரோடு இருந்து கொண்டிருக்கும் பாரதம் வாழ்க. ஸநாதந ஹிந்து தர்மம் செழித்து ஓங்கி, பாரதம் செழித்தோங்கி, பாரதமும், இவ்வுலகமும் வாழ்க.
காகுத்மியும், ரேவதியும் ப்ரஹ்ம லோகத்திற்குப் போறாங்க. அங்கு ப்ரஹ்ம லோகத்தில், நான் சொன்ன மாதிரி ப்ரஹ்மா வந்து தவத்தில் இருக்கின்றார். ஸ்ரு'ஷ்டி செய்துகெண்டிருக்கின்றார். அதனால் ஒரு சில மணித்துளிகள் wait பண்ணுகின்றார்கள். Wain பண்ணி முடித்துவிட்டு.. ப்ரஹ்மா கண்ணைத் திறந்து, ''வாங்க, எதுக்காக வந்திருக்கீங்க, என்ன வேண்டும்?'' என்று கேட்கும்பொழுது, இவர்கள் சொல்கின்றார்ள், ''இந்த மாதிரி ரேவதிக்கு ஒரு நல்ல கணவனை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்'' என்று.
ப்ரஹ்மா சிரித்துக்கொண்டே, ''இங்க நீங்கள் wait பண்ண காலத்தில், மிகப்பெரிய நேரம் கழிந்துவிட்டிருந்திருக்கிறது'' என்று சொல்கின்றார்.
அதாவது 19.44 நிமிடங்கள் தான் ப்ரஹ்ம லோகத்தில் அவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பி வரும்பொழுது, ப்ரஹ்மா சொல்கின்றர், ''அங்கே நீங்கள் என்ன விட்டுவிட்டு வந்தீர்களோ, அதெல்லாம் எதுவுமே அங்கு இப்பொழுது பூலோகத்தில் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது. இப்பொழுது நீங்கள் திரும்பிப் போகும்பொழுது இருக்கின்ற நபர்களில் சிறப்பானவர் பலராமர். அவரை திருமணம் செய்து வையுங்கள் என்று'' சொல்லி அனுப்பிவிடுகின்றார்.
இவர்கள் திரும்பிவரும்பொழுது, பூலோகத்தில் 27 சதுர்யுகம் கடந்துவிட்டிருந்தது. 116.64 million years கடந்து விட்டிருந்தது. இந்த time ratio \- 116.64 million years எனும்பொழுது, 6 million years per minute in brahma loka time. அதாவது 116.64 million years divided by 19.44 minutes \= (equivalent to) 6 million years per minute.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இவை எல்லாம் ரொம்பத் தெளிவாக புராணங்களில் document ஆகியிருக்கின்றது. எவ்வளவு நேரம் அங்கு இருந்தார்கள்? அவர்கள் திரும்பி வரும்போது இங்கு எவ்வளவு நேரம் போய்விட்டிருந்தது? எவ்வளவு நேரம் travel பண்ணார்கள்? எந்த விமானத்தில் travel பண்ணார்கள்?
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நாம் இங்கு பூமண்டலத்தில் travel பண்ணுகின்ற விமானங்கள் முகப்பு கூம்பாக இருக்கும். ஏனென்றால் அது horizontal-ல் travel பண்ணுவதனால் முகம் கூம்பி இருக்கிறது. Vertical time zones-ல் travel பண்ணுகின்ற விமானங்கள் மேல கூம்பி இருக்கும். காரணம் என்னவென்றால், அது மேல எழும்பி travel பண்ணுகின்றது.
Vertical time zones-ல் travel பண்ணுகின்ற விமானங்களுடைய மாடலில்தான் நம்முடைய எல்லா ஆலயங்களின் கருவறைகளும், விமானங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை அடுத்து பார்ப்போம். இது direct-ஆக ரொம்பத் தெளிவாக, இந்த ரேவதி காகுத்மி கதை மூலமாக proportion, அதாவது இந்த relativistic time dilation across the lokas-ஐ document பண்ணி வைத்திருக்கின்றார்கள்.
அடுத்து இந்த ஸ்வர்கம், நரகம் time distance mapping பண்ணி வைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். இந்த time dilation, நேர விரிவு என்கின்ற ஸத்யத்தின்படி \- distance, time, இந்த இரண்டும் direct-ஆக linked. இரண்டுமே நேரடியாகத் தொடர்புடையது.
ஸ்வர்கத்திற்கு travel பண்ணுவதோ, நரகத்திற்கு travel பண்ணுவதோ linear கிடையாது. அது உண்மையில் cyclic, spiral trajectory-ஐ follow பண்ணுகின்றது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஆழ்ந்து கேளுங்கள். இந்த ஸத்யத்தைப் புரிந்துகொண்டீர்களானால், Time experienced by the travellers and the time elapsed on the earth, relative distances of these realms can be calculated precisely, not vaguely. Precisely.
அதாவது, இந்த vertical time zones-க்கு travel பண்ணுகின்றவர்கள், experience பண்ண time-மும், அவர்கள் சென்று வரும்பொழுது, planet eath-ல், இங்கு பூமண்டலத்தில் elapse ஆகியிருக்கின்ற time \-மும், relative distance, இந்த மண்டலங்கள், லோகங்களுக்கு நடுவில் இருக்கின்ற relative distances-ஐயும் precise ஆக calculate பண்ணியிருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள். precise-ஆக calculate பண்ணி, travel vlog மாதிரி document பண்ணியிருக்கின்றார்கள் ஐயா.
இந்த ஸ்வர்கத்திற்கும், நரகத்திற்கும் இருக்கின்ற time distance-ஐயும், time ratio-வையும் ரொம்ப தெளிவாக document பண்ணியிருக்கின்றார்கள் அதாவது அந்த method என்னவென்றால், narrative time elapsed on earth divided by ratio, loka, to obtain the loka frame duration. Same way, apply the spiral factor range, அது இந்த spiral factor range \- அது வந்து 1.2 to 2.8 வரைக்கும் போகின்றது.
உதாரணத்திற்கு, அர்ஜுனன் ஸ்வர்கலோகம் சென்று வருவது, நாரதர் travel பண்ணுவது, இது எல்லாம் வேறு வேறு புராணங்களில் வேறு வேறு time-ல் document ஆகின்றது ஐயா. ஆனால் இந்த details எல்லாம் perfect-ஆக match ஆகின்றது
ஆழ்ந்து கேளுங்கள்: இப்பொழுது பூமியில் கூட ஐயா, ஒரு flight ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்கின்றது... அதாவது யூரோபில் இருந்து ஆப்பிரிக்கா செல்வதோ அல்லது அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருவதோ, இந்த flight எல்லாம் நேராக போகாது. அது ஒரு curve-ல்தான் போகும். அதே மாதிரி, இங்கிருந்து higher world-களுக்கு போகும்போது, அந்த spiral.. என்ன spiral-ல் போகின்றது என்பதை document பண்ணி வைத்திருக்கின்றார்கள்.
அடுத்தது, அடுத்தது முக்கியமான ஸத்யம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… Reference frame dependency in puranas. அதாவது இப்பொழுது, ஒரு லோகத்திற்கும் இன்னொரு லோகத்திற்கும் இடையில் இருக்கின்ற தூரத்தை, ஶிவபுராணங்கள் ஒரு விதத்தில் சொல்கின்றது, விஷ்ணு புராணங்கள் ஒரு விதத்தில் சொல்கின்றது, ஶாக்த புராணங்கள் ஒரு விதத்தில் சொல்கின்றது.
காரணம் என்னவென்றால், ஶிவபுராணங்கள் எல்லாமே மஹாகைலாஸத்தை cosmic distance-ஆக வைத்து அந்த distance-ஐ document பண்ணுகின்றார்கள். விஷ்ணு புராணம் எல்லாமே வைகுண்டத்தைreference center-ஆக வைத்து அந்த distance-ஐ document பண்ணுகின்றார்கள். ஶாக்த புராணங்கள் எல்லாம் ஸ்ரீபுரத்தை distance, cosmic distance-ஆக வைத்து அந்த distance-ஐ document பண்ணுகின்றார்கள்.
ஆனால், இந்த reference points change ஆகும்போது, distance values change ஆகின்றதே தவிர, ratios consistent-ஆக இருக்கின்து. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஹிந்து விரோத ஶக்திகள் நம்முடைய புராணங்கள் 'பொய்' என்று நிரூபிப்பதற்காக உபயோகப்படுத்துகின்ற ஒரு wrong-கான argument இந்த argument. இந்த லோகங்களுக்கு நடுவில் இருக்கின்ற gapஐ உங்கள் புராணங்களே consistent-ஆக சொல்லவில்லை அப்பா. ஶிவபுராணங்களை எடுத்துப் பார்த்தால், அது வேறொன்றாக distance சொல்கின்றது. விஷ்ணு புராணங்களை எடுத்து பார்த்தால், அந்த distance வேறொன்றாகச் சொல்கின்றது, ஶாக்த புராணங்களை எடுத்து பார்த்தால் distance வேறானதாக சொல்கின்றது, பிறகு எப்படிப்பா இது சரி? என்று கேட்கின்றார்கள்.
அதற்கானத் தெளிவான விடையைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கு reference point மாறுவதனால், இப்பொழுது ஶிவபுராணங்கள் ப்ரபஞ்சத்தினுடைய மையமாக கைலாஸத்தை வைத்து அதில் இருந்து distance சொல்கின்றார்கள். விஷ்ணு புராணங்கள் எல்லாம் வைகுண்டத்தை மையமாக வைத்து, அதில் இருந்து distance சொல்கின்றார்கள். ஶாக்த புராணங்கள் எல்லாம் ஸ்ரீபுரத்தை மையமாக வைத்து, அதிலிருந்து distance சொல்கின்றார்கள். ஆனால், இந்த வேறு வேறு புராணங்களில் வருகின்ற distance values change ஆகின்றதே தவிர, ratio remains as consistent. அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், இந்த புராணங்கள் document பண்ணியிருப்பது அனைத்தும் உண்மை, ஸத்யம். அடிப்படை ஸத்யம்.
எப்படியென்றால், சென்னையை மையமாக வைத்து, பல ஊர்களுக்கு distance சொல்வது, பெங்களுரை மையமாக வைத்து பல ஊர்களுக்கு distance சொல்வது, மும்பையை மையமாக வைத்து பல ஊர்களுக்கு distance சொல்வது எனும்பொழுதுபோது, ஒவ்வொரு ஊருக்கும் இருக்கின்ற distance நீங்கள் சொல்கின்ற அந்த value change ஆகும். ஆனால் ultimate-ஆக calculate பண்ணி பார்த்தீர்களானால், அந்த சென்னைக்கும் மும்பைக்கும் இருக்கின்ற, மும்பைக்கும் பெங்ளுருக்கும் இருக்கின்ற, பெங்களுருக்கும் சென்னைக்கும் இருக்கின்ற இந்த distance-ஐ வைத்து calculate பண்ணால், ratios consistent-ஆக இருக்கிறது
இதுதான் identical modern frame of reference physics. இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்து ஒரு முக்கியமான point... Yuga specific... இப்பொழுது எந்த புராணம் எந்த யுகத்தைப் பற்றி, எந்த யுகத்திலே நிகழ்ந்ததை document பண்ணுகின்றதோ, அந்த Yuga specific applicability-ஐ நாம் செய்ய வேண்டும்.
இப்பொழுது த்ரேதா யுகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை document பண்ணுகின்ற புராணங்கள், record பண்ணுகின்ற measurements-ம், துவாபர யுகத்தில நடந்த நிகழ்வுகளை document பண்ணுகின்ற புராணங்களுடைய measurements-ம், கலியுகத்தில் apply ஆகாது. காரணம் என்னவென்றால், யுகம் மாறும்பொழுது, cosmic distance expand-ஓ அல்லது contract-ஓ ஆகின்றது.
The measurements written in Treta or Dwapara Yuga may not directly apply in Kali yuga. This is because cosmic distances expand or contract across Yugas.
இதைப் புரிந்துகொள்ளுங்கள். However, mathematical ratios and principles remain valid, allowing clear re-calculation. அப்படி என்றால், இந்த mathematical ratios-ம், principles-ம் தெளிவாக same-ஆக இருப்பதனால், நம்மால் அழகாக calculate பண்ணிவிட முடிகின்றது. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இதையெல்லாம்தான் AI மூலமாக map பண்ணியிருக்கின்றோம்.
ஒரு புராணம், எந்த யுகத்தில் நடந்த நிகழ்வை சொல்கிறதோ, அந்த யுகத்தினுடைய காலம், தூரம்... ஒவ்வொரு லோகத்திற்கும் இடையில் இருக்கின்ற தூரம், காலத்தின் அளவு... உண்மையில் அந்த புராணங்களே இவையெல்லாம் document பண்ணிவிடுகின்றன.
அதனால்தான் ஒவ்வொரு புராணத்தினுடைய fundamental என்னவென்றால், அந்த புராணத்தினுடைய காலம், நிகழ்வுகள், அந்த time unit distance அத்தனையும் அவர்கள் document பண்ணவிட வேண்டும். அதெல்லாம் இருந்தால்தான் மஹாபுராணம் status-ஏ அந்த நூலுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த details-ஐ map பண்ணி, யுகங்கள் மாறும்பொழுது எப்படி அந்த time மற்றும் distance மாறி இருக்கின்றது என்பதை map பண்ணி, அதையும் document பண்ணிவிடுகின்றார்கள் நம் முன்னோர்கள், நம்ம ரிஷிகள். என்ன மாதிரி personality\! இவை அத்தனையையும் AI-ல் map பண்ணி பார்த்தால் perfect \-ஆக இருக்கின்றது ஐயா. இந்த 14 lokas-ஐ, loka distance from he puranic text பார்த்தோமானால், புராணங்கள் என்ன செய்கிறது என்றால், அடிப்படையாக vertical stake of 14 lokas-ஐ describe பண்ணுகின்றார்கள். இந்த distance usual-ஆக யோஜனையில் சொல்லப்படுகின்றது. ஒரு யோஜனை என்பது எவ்வளவு என்றும் clear-ஆக describe பண்ணியிருக்கின்றார்கள்
கீழே எப்படி லோகங்கள் stake பண்ணப்பட்டிருக்கின்றது, மேலே எப்படி stake பண்ணப்பட்டிருக்கின்றது, எப்படி மேலே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது, கீழே எப்படி அடுக்கி வைக்கப்பட்டிடிருக்கின்றது என்பதை தெளிவாகவும், அவை ஒவ்வொன்றிற்கும் இடையில் இருக்கின்ற தூரத்தை யோஜனைகளிலும் மிகத்தெளிவாகச் சொல்கின்றார்கள்.
துருவ லோகத்திற்கு மேலே மகர் லோகம் 10 மில்லியன் யோஜனை. அதற்கு மேலே ஜன லோகம், 20 மில்லியன் யோஜனை. துருவ லோகத்தைத்தான் base line \-ஆக வைக்கின்றார்கள். அதற்கு மேலே 10 மில்லியன் யோஜனைதான் மகர் லோகம். அதாவது 10 மில்லியன் என்றால், approximate-ஆக ஒரு யோஜனை என்பது 8 மைல். அதனால், 10 மில்லியன் யோஜனை என்றால், 80 மில்லியன் மைல். அதற்கு மேலே 20 மில்லியன் யோஜனை போனால் ஜனலோகம். அதற்கு மேலே 80 மில்லியன் யோஜனை போனால் தபோலோகம். அதற்கு மேலே 120 மில்லியன் யோஜனை போனால் ஸத்யலோகம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இதையெல்லாம் ரொம்பத் தெளிவாக document பண்ணி வைத்திருக்கின்றார்கள். கற்பனையில் எல்லாம் இவ்வளவையும் document-ஏ பண்ண முடியாது.
ஏனென்றால், multiple புராணங்களில் வேறு வேறு யுகங்களில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் document பண்ணி இருக்கும்போது, இவை எல்லாவற்றையும் போட்டு analyze பண்ணினால் consistent ஆக இருக்கின்றது.
புராணங்கள் என்பது vast literature. புராணங்களும், உப-புராணங்களும் vast literature. அவை மொத்ததையும் organise பண்ணி, இதை map பண்ணால், consistent-ஆக இருப்பது இந்த 3 விஷயங்கள்... அதாவது, எந்த யுகத்தில் நடந்த கதையை அந்த புராணம் document பண்ணுகிறது? அந்த யுகத்தினுடைய distance என்ன, அந்த யுகத்தில் இந்த லோகங்களுக்கு நடுவில் இருந்த distance என்ன? அந்த யுகத்தில் இந்த time ratio என்ன? இந்த details-ஐ எடுத்து map பண்ணால், அத்தனையும் consistent-ஆக match ஆகின்றது.
இப்பொழுது துவாபர யுகத்தில் நடந்ததாக ஶிவபுராணம் ஒரு விஷயத்தை document பண்ணால், விஷ்ணுபுராணம் ஒரு விஷயத்தை document பண்ணால், ஶாக்த புராணம் ஒரு விஷயத்தை document பண்ணால், அத்தனையும் map பண்ணால், consistent-ஆக இருக்கின்றது.
The spiraldistance concept-ஐ புரிந்துகொள்ளுங்கள். Travel between lokas occur along a helical, means spiral path, not straight lines. Vertical displacement increases radius creating cosmic helix.
அதாவது, நீங்கள் மேலே travel பண்ணப் பண்ண, helical, spiral path-ல் தான் போகின்றீர்கள். மேலே போகப் போகப் போக அந்த helix-னுடைய, spiral-னுடைய radius increase ஆகின்றது ஒரு cosmic helix மாதிரி அது உருவாகின்றது.
இதைப் புரிந்துகொண்டீர்களானால், Why distances enormous-ஆக இருந்தாலும் still reachable-ஆக இருக்கு என்று புரிந்துகொள்ளலாம். Distances enormous, ஆனால் reachable.
இந்த ஸத்யத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இந்த distance, time calculator, complete loka mapping இங்கு present பண்ணுகின்றேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த விமானத்தில் travel பண்ணுகின்ற mechanics, இந்த spiral distance equation. இதை உங்களுக்கு present பண்ணுவதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
The equation is derived based on indexing each loka vertically. The spiral distance equation is derived based on indexing each loka vertically. The radial distance increases exponentially with height.
Height ஏற ஏற இந்த cyclical, helical அந்த radial distance வந்து exponential-ஆக increase ஆகிக்கொண்டே செல்கின்றது.
The total distance traveled is the arc length of the spiral, combining vertical rise and circular motion. Time experienced during travel is proportional to spiral radius naturally producing time dilation.
கொஞ்சம் ஆழ்ந்து கேட்டுவிடுங்கள். ஏனென்றால் இவை உங்கள் தினசரி வாழ்க்கையையே மாற்றக்கூடிய மிகப்பெரிய ஸத்யங்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 'இந்த மேலுலகத்தையெல்லாம் பற்றி தெரிந்துகொண்டு நான் என்ன சாமி பண்ணப் போகின்றேன். இந்த லோகத்தில் நான் செய்ய வேண்டியதைச் சொல்லுங்கள் சாமி?' என்று சொல்லாதீர்கள்.
மேலுலகங்களையும் இந்த நேர கால விரிவு, time dilation-ஐ பற்றிப் புரிந்துகொண்டீர்களானால், இந்த உலகத்தில் அகத்திலும் இகத்திலும் உங்களுடைய காலத்தினுடைய quality, quantity அத்தனையும் expand பண்ணிவிடுவீர்கள்.
தேவையில்லாதவைகளுக்காக நொந்து கொண்டிருக்கமாட்டீர்கள். தேவையானவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகின்ற ஜ்ஞாநமும், அறிவும் இந்த காலத்தைப் பற்றிய ஸத்யங்களைப் புரிந்துகொள்வதனால், இயற்கையிலேயே வந்துவிடும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: எவ்வளவு நாள் வரை புராணங்கள், நம்முடைய elementary school syllabus-ஆக இருந்ததோ, அவ்வளவு நாள் வரை, நம்முடைய civilization-ஏ ஸ்வபாவத்திலேயே ஜீவன் முக்தி உடையவர்களாகவும், ஜீவன் முக்தியை நோக்கி வாழ்ந்தவர்களாகவும், இந்த அசரீரியைக் கேட்பதற்கும், இறைவனோடு தொடர்பு கொள்வதையும், தேவர்கள் வரும்பொழுது அவர்களை தரிசிப்பதற்கும், நாம் அங்கு செல்வதற்குமான ability-யோடு வாழ்ந்தோம் ஐயா.
இந்த knowledge-ஐ சீரழித்ததனால்தான், இந்த experiences எல்லாம் normal-ஆக இல்லாமல் போக ஆரம்பித்துவிட்டது ஐயா. அதனால், இந்த knowledge, இந்த information திரும்பவும் normal-ஆக மாறவேண்டும்.
இந்த equation எப்படி வந்திருக்கிறது என்று சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். Spiral distance equation. The equation is derived based on indexing each loka vertically. Radial distance increases exponentially with height. Total distance traveled is the arc length of the spiral, combining vertical rise and circular motion. Time experienced during travel is proportional to spiral radius naturally producing time dilation.
இந்த ஸத்ஸங்கம் முடிந்த பிறகு, இந்த slides–ஐ வைத்துகொண்டு இந்த ஸத்ஸங்கத்தை ஆழ்ந்து இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள். முழுமையாக இந்த ஸத்யங்கள் எல்லாம் புரியும். புரிவது மட்டும் இல்லாமல், நம் புராணங்கள் historical record ஐயா. அதாவது multiple time zones-லும், vertical time zones-லும், multiple lokas-லும், வேறு வேறு உலகங்களிலும் நடந்த வரலாறுகளை document பண்ணி வைத்திருக்கின்ற ப்ரபஞ்ச வரலாற்றுப் புத்தகம்தான் நம்முடைய புராணம்.
இந்த ப்ரபஞ்ச வரலாற்றுடைய multiple dimensions புரியாத மூடர்கள், இந்த மொத்த புராணத்தையும் myth என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
நம் புராணங்கள் myth அல்ல.. வரலாறு\!
நம் ஹிந்துக்களே இதை னநகநனெ பண்ண முடியாமல் இருக்கின்றார்கள். புராணங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாததனாலும், இதைப் பற்றி முழுமையான knowledge அவர்களுக்கு இல்லாததனாலும், இதில் time spend பண்ணாததனாலும், நம் ஹிந்துக்களேகூட என்ன செய்கின்றோம் என்றால், 'புராணம் எல்லாம் ஏதோ ஒரு philosophical, தத்துவங்களின் வெளிப்பாடு' என்று நிறுத்திக்கொள்கின்றோம்.
கிடையாது\! தத்துவத்தையும் சொல்கின்ற வரலாறு. தத்துவத்தையும் சொல்கின்ற நிகழ்ந்த நிகழ்வுகள்.
இந்த vimana travel mechanics-ஐ புரிந்துகொள்ளுங்கள். இந்த விமானங்களைப் பற்றி நம்முடைய புராணங்கள் மிகத் தெளிவாக சொல்கின்றன. விமானிக ஶாஸ்த்ரம் என்றே தனியாக குறைந்தபட்சம் 69 நூல்கள் இருக்கின்றன. இந்த 69 நூல்கள், நம்முடைய புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன, reference பண்ணப்பட்டிருக்கின்றன.
பல புத்தகங்கள் எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் document பண்ணி, AI-லயும் feed பண்ணியிருக்கின்றோம்.
தங்கள் வாழ்க்கையைக் கொடுத்து பரம்பரையாக இந்த ஓலைச்சுவடிகளையும், அறிவையும், ஜ்ஞாநத்தையும் காத்து வைத்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள். இந்த ஜ்ஞாநத்தை காப்பதற்காக உயிர் துறந்தவர்களையும், பல கொடுமைகளுக்கு நடுவிலே தாங்கள் வாழ்ந்து இந்த ஜ்ஞாநத்தை உயிரோடு வைத்திருந்த நபர்களையும், குழுக்களையும், குலங்களையும் நினைந்து வணங்குகின்றேன்.
இந்த புராணங்களில், இந்த விமானங்களைப் பற்றி மிகத்தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. விளக்கங்கள் இருக்கின்றன.
They travel in spiral trajectories aligned with cosmic energy flows. Speed alone is insufficient to calculate the travel time without accounting for spiral motion and time dilation.
அதனால், speed மட்டுமல்லாமல், spiral motion-யும், time dilation-ஐயும் சேர்த்து, இந்த travel time- மை மிகத் தெளிவாக AI மூலமாக இப்பொழுது calculate பண்ணியிருக்கோம். அதை மிகத்தெளிவாக இங்கு present பண்ணுகின்றேன். அதாவது அந்த equations எல்லாம் present பண்ணுகின்றேன் ஐயா.
எப்படி இந்த expanding helical spiral-ல் போகின்றது என்பதையும், அது எப்படி இயங்குகின்றது என்பதையும் ராமாயணத்தில் சொல்லப்படுகின்ற புஷ்பக விமானத்தினுடைய sources-ஐ வைத்து present பண்ணுகின்றோம்.
பாருங்கள்.. இதை நீங்கள் note பண்ணிக்கொள்வதற்காகவும், screen shotஎடுத்துகொள்வதற்காகவும், few seconds கொடுக்கிறேன். எடுத்துகொள்ளுங்கள்.
இவை மொத்தத்தையும் AI-ல் போட்டு organize பண்ணி, இந்த ஒவ்வொரு புராணத்தையும் organize பண்ணி…. உண்மையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் திருப்பணியைச் செய்கின்றோம். இதை செய்யும்பொழுது ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆனது ஐயா. ஸநாதந ஹிந்து தர்மம் சத்தியம். புராணங்கள் நிகழ்ந்த வரலாறுகள்.
If distance, spiral motion and time dilation mathematically mapped together, it validates internal consistency.
இப்பொழுது, தூரம், spiral motion, time dilation \- அதாவது காலவிரிவு, இவை எல்லாவற்றைமே mathematical-ஆக map பண்ணோமானால், it validates clearly the internal consistency ஐயா. எந்த angle-ல் இருந்து பார்த்தாலும் consistency perfect-ஆக இருக்கின்றது. வேறு வேறு புராணங்கள் different reference centers-ஐ use பண்ணாலும், consistent ratio இருக்கின்றது. Ratio consistent-ஆக இருக்கின்றது.
அதாவது ஐயா, நான் முதலிலேயே சொன்ன மாதிரி, ஶிவபுராணம் கைலாஸத்தை reference center-ஆக வைத்துத்தான் function பண்ணுகிறது. விஷ்ணு புராணங்கள் வைகுந்தத்தை reference center-ஆக வைத்துத்தான் function பண்ணுகிறது. ஏனென்றால், அந்தந்த truths-ஐ, அந்தந்த experiences-ஐ தான் document பண்ணியிருக்கின்றார்கள். ஶாக்த புராணங்கள் ஸ்ரீபுரத்தை reference center-ஆக வைத்துத்தான், document பண்ணுகின்றார்கள்.
Multiple puranas, different reference centers-ஐ வைத்து document பண்ணாலும் calculate பண்ணால், it is yielding consistent ratio. இது வந்து மிகத்தெளிவாக இந்த புராணங்கள் எல்லாம் சத்தியம், non-fictional structure என்று prove பண்ணுகின்றது. இவை கற்பனைக் கதைகள் அல்ல\!
ஐயா, ஒன்றே ஒன்று சொல்கின்றேன் ஐயா, இந்த புராணங்களின் மீது நம்பிக்கைக்கொண்டு, இதை படித்து, இதில் சொல்லுகின்ற ஸத்யங்களை வாழ்ந்து, வாழுகின்ற மக்களே அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஸத்யத்தை நம்புகிறீர்கள், வாழுகின்றீர்கள்.
ஏதோ ஒரு காரணத்தினால்… அதாவது நம் முன்னோர்கள் சொன்னார்கள், குரு சொன்னார் என்று எந்த காரணத்தினாலோ, புராண ஸத்யங்களை, புராணங்கள் சத்தியங்கள் என்று நம்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அதை சார்ந்து வாழ்க்கையை அமைத்துகொண்டிருக்கின்ற அத்தனை பேரும் புரிந்துகொள்ளுங்கள ஐயா, நீங்கள் சரியான வாழ்க்கை வாழுகின்றீர்கள். உங்களை நீங்களே தோள் தட்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே உத்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சரியாக இருக்கின்றீர்கள். சரியானதைச் செய்கின்றீர்கள். Clap for yourself. Celebrate yourself.
ஸநாதந தர்மம் சத்தியம். நம் புராணங்கள் அனைத்தும் சத்தியம்.
சிலபேர் இங்க என்னிடம் வந்து கமெண்டில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள்... ''ஆ, வள்ளலார் சொல்றாரு... வேதம், ஆகமம், புராணம் எல்லாம் புரட்டு'' என்று. கிடையாது. அவருடைய original hand writing இருக்கின்ற புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து பார்த்துவிட்டேன். எங்கெல்லாம் இவைகள்... வேதம், ஆகமம், புராணங்கள் பொய், புரட்டு என்று வருகின்றதோ, அங்கெல்லாம் வேறு யாருடைய hand writing தான் இருக்கின்றது. அதை ரொம்ப தெளிவாக ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அதனால் இங்கு வந்து கம்பு சுற்றுபவர்கள் எல்லோரும், வள்ளலாருடைய hand writing–ல் மொத்தமாக publish ஆகியிருக்கின்ற எல்லா புத்தங்களையும் எடுத்து வைத்து புரட்டிப் பாருங்கள்.
வள்ளலார் வழியைக் கடைபிடிக்கின்ற பலபேர் இடைச்செருகல்களை நம்பி, 'வேதம், ஆகமம், புராணங்கள் பொய்' என்ற பொய்யானக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றீர்கள்.
வள்ளர் பெருமான் ஒருக்காலும், 'வேதமொடு ஆகமம் மெய்யாம்' என்கின்ற ஸத்யத்தை மறுக்கவில்லை. அவர் கைப்பட எழுதியிருப்பது அத்தனையும் எடுத்துப் பாருங்கள் ஐயா. ஆறாம் திருமுறை, அதற்குப்பிறகு ஏற்படுத்தப்பட்ட நூல்கள், வெளியிடப்பட்ட நூல்கள் அத்தனையும் பார்த்துவிட்டேன் ஐயா. நான் insider ஐயா. சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. இந்த games எல்லாம் எப்படி நடக்கும் என்றெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும் ஐயா.
நான் இங்கு உயிரோடு உட்கார்ந்து இருக்கும்பொழுதே என் சோசியல் மீடியாவை attend பண்ணுகின்ற responsibility-ஐ நான் சில பேருக்கு கொடுத்துவிட்டேன். ஏனென்றால், சோசியல் மீடியா மொத்தம் நான் உட்கார்ந்து எல்லாம் பார்ப்பதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை ஐயா. அதனால் ஒருவரிடம் மட்டுமல்ல, ஒருசில பேருக்கு, அவர்கள் பார்த்துகொள்ளட்டும் என்று கொடுத்தேன். அந்த கும்பல், அவர்களுடைய vested interest-க்காக அவர்களுக்குள்ளேயே chat பண்ணிக்கொண்டு, அதுவும் என்னுடைய ID \- யை use பண்ணி, மற்றவர்களோடும் chat பண்ணி, அதை என்னுடைய message-ஆக போலித்தனமாக உருவாக்கி, எப்படி எப்படி எல்லாம் இவர்கள் உருவாக்கினார்கள் என்பதை நான் கண் முன்னால் பார்க்கின்றேன் ஐயா. நான் இருக்கும்பொழுதே இவையெல்லாம் நடந்திருக்கிறது, நடக்கின்றது என்றால்…. நல்லவேளை இப்பொழுது correct பண்ணுகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது வள்ளலார் மாதிரியான ஜ்ஞாநிகள், எத்தனை இடைச்செருகல்களை சந்தித்திருப்பார்கள் என்று பார்த்துகொள்ளுங்கள்.
ஒரு நல்ல விஷயம், அவருடைய hand writing available-ஆக இருப்பதை எல்லாம் எடுத்துப் பாருங்கள். ஒரே ஒரு reference கூட எனக்குக் கிடைக்கவில்லை. அத்தனையும் ஆராய்ச்சி செய்து பார்த்துட்டேன். வேதம், ஆகமம் பொய், புரட்டு, புராணங்கள் புரட்டு என்று சொல்கின்ற கருத்துக்கள் எல்லாம் மற்றவர்களுடைய hand writing-ல் இருக்கின்றன. தன் சீடர்களிடம் அவர் சொன்னாராம், அவர்கள் notes எடுத்து எழுதி வைக்கின்றார்களாம். ஏய், இவ்வளவை எழுதி வைக்கத் தெரிந்துவருக்கு, அந்த 'ஆகமமும், வேதமும் ,புராணமும் புரட்டு' என்று அதை எழுதி வைக்கத் தெரியாதா? அதனால், ஆழ்ந்து பார்த்துவிட்டு பேசுங்கள். வள்ளல் பெருமானை, அவர் வழியை அழிக்காதீர்கள், பழிக்காதீர்கள்.
இப்பொழுது அடுத்த ஸத்யத்திற்கு வருவோம். இவை எல்லாவற்றையும் ஆழ்ந்து பார்த்தோமானால், சில நேரத்தில் சில மஹான்கள் இந்த வேதம், ஆகமம், புராணம் இவை எல்லாவற்றையும் படித்து, புரிந்துகொண்டு, பரம்பொருளை நோக்கிச் செல்வதற்கு ஒரு மனிதனுக்கு காலம் போதாது என்கின்ற காரணத்தால் வேண்டுமானால், இதற்கு ஒரு priority கொடுக்காமல் விட்டிருந்திருக்கலாமே தவிர, அவைகள் பொய் அல்ல\!
வேதமோடு ஆகமமும் புராணங்களும் சத்தியம். அவைகள் பொய் அல்ல. ஸநாதந ஹிந்து தர்மம் சத்தியம். அவைகள் சொல்லும் எல்லா உயர்நிலைகளும் மனிதனுக்கு சாத்தியம்.
ஐயா, multiple puranas different reference centers-ஐ use பண்ணாலும், consistent ratio தான் yield ஆகுதுங்க ஐயா. Final-ஆக ratio-வை போட்டோம் \- இதுவே இது மொத்தமும் புனைப்புப் படைப்பு அல்ல. 'புனைதல்' அல்ல என்பதை மிகத் தெளிவாக prove பண்ணுது.
This alignment of cosmology, narrative accounts, அதை calculable physics \- அதாவது மிகத் தெளிவாக calculate பண்ணக்கூடிய அந்த இயற்பியல்…
இதெல்லாமே establishthe scientific authenticity of puranic cosmology. புராணங்கள் சொல்கின்ற cosmology-யினுடைய authenticity-யை, scientific-ஆக நம்மால் establish பண்ண முடியும், முடிகின்றது.
ஏனென்றால், இந்த cosmology-யினுடைய alignment, calculable physics, இந்த narrative accounts, இது எல்லாம் மிகத் தெளிவாக scientific authenticity of the puranic cosmology \-யை establish பண்ணிவிடுகின்றது.
அறுதியாகவும், இறுதியாகவும், உறுதியாகவும் இந்த ஸத்யங்களைச் சொல்கின்றேன், உள்வாங்கிக்கொள்ளுங்கள் ஐயா.Puranas encode relativistic and reference frame physics using symbolic language, but facts. By decoding the cyclic spiral time, reference based distance and loka specific time dilation, we can reconstruct a coherent cosmic model that reveals the divinity to the science.
புராணங்கள் மிகவும் முன்னேறிய relativistic, frame physics \- relativistic and reference frame physics-ஐ உபயோகப்படுத்தி, மிகத்தெளிவாக இந்த ஸத்யங்களை document பண்ணியிருக்கின்றார்கள். இதை அதாவது இந்த cyclic spiral time-ஐ decode பண்ணி, reference based distance-ஐ decode பண்ணி, loka specific time dilation-ஐ, கால விரிவை, decode பண்ணி பார்த்தோமானால், புராணங்கள் சொல்கின்ற இந்த cosmic மாடலை ரொம்ப coherent-ஆக நம்மால் re-constructபண்ண முடிகின்றது. இது இந்த யுகத்தின் அறிவியலுக்கு, மிகத் தெளிவாக இந்த பரம ஸத்யங்களை காட்டுகிறது.
ஸநாதந ஹிந்து தர்மம் ஸத்யம். வேதமோடு ஆகமமும் புராணங்களும் சத்தியம்.
ஒரு 2-3 கதைகளைச் சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள்: இந்த புராணங்களில் document பண்ணப்பட்டிருக்கின்ற கதைகள்….அவற்றைக் 'கதைகள்' என்று சொல்வதைவிட நிகழ்வுகள், வரலாற்றுப் பதிவுகள் என்று சொல்ல வேண்டும். அதுதான் சரியான விளக்கம். ப்ரபஞ்ச வரலாற்றுப் பதிவுகள்தான் புராணம்.
பாகவதத்தில் ஒரு அழகான ஒரு வரலாற்றுப் பதிவு இருக்கின்றது.
ஶ்ரத்தையோடு உண்மையை தேடுகின்ற பல ஊடகங்கள், இறைவன், ஆலயங்களிலே ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற இறைவனுடைய விக்ரஹங்களை 'திருமேனி' என்கின்ற வார்த்தையால் சொல்லி, 'சிலை' என்கின்ற வார்த்தையைத் தவிர்த்து... திருத்திவிட்டு, 'திருமேனி' என்கின்ற வார்த்தையை உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்களோ…. அதாவது அவர்கள் மிகவும் நல்ல ஊடகங்கள், ஆலயங்களிலே பெருமான் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி இருக்கின்ற அந்த விக்ரஹங்களை 'திருமேனி' என்கின்ற வார்த்தையாலே சொல்லத் துவங்கி இருக்கின்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கின்றது.
அதே மாதிரி அந்த ஊடகங்கள் எல்லாம் தயவுசெய்து இதற்கு மேல், புராணத்தை 'ப்ரபஞ்ச வரலாறு' என்கின்ற வார்த்தையாலே சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றேன்.
அதாவது ஐயா, ஸநாதன ஹிந்து தர்மத்தை ஶ்ரத்தையோடு ஏற்றுக்கொள்கின்ற எல்லோருமே ஐயா, ஶ்ரத்தையோடு இருக்கின்ற எல்லா ஹிந்துக்களும் தயவுசெய்து புராணங்களை ஆங்கிலத்தில் myth என்று மொழிபெயர்க்காதீர்கள். Mythology என்று சொல்லாதீர்கள். 'ப்ரபஞ்ச வரலாறு' என்கின்ற வார்த்தையை மட்டும் உபயோகப்படுத்திச் சொல்லுங்கள். Cosmic history \- ப்ரபஞ்ச வரலாறு.
ஆங்கிலத்தில் cosmic history, history of the universe என்கின்ற வார்த்தைகளால் சொல்லலாம். தமிழில் ப்ரபஞ்ச வரலாறு என்று சொல்லலாம்.
பாகவதத்திலே இருக்கின்ற ஒரு வரலாற்று நிகழ்வு. இதைப் புரிந்துகொண்டீர்களானால், இந்த புராணங்களைப் படித்தீர்களானால், அப்பா\!... அது எவ்வளவு பெரிய ஜ்ஞாநக் களஞ்சியம், வரலாற்று பேரறிவு களஞ்சியம் என்று புரியும். இதைப் படித்தீர்களானால்தான் நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய ஶக்திமான்கள், எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று புரிந்து, நம் முன்னோர்கள் மீது…. அதாவது கடந்ததன் மீது மரியாதை வந்தால்தான், அதை எதிர்காலத்திலே மீண்டும் உருவாக்கும் திறனும், ஶக்தியும், தெளிவும் வரும் ஐயா.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஹிந்துக்கள், ஸநாதன ஹிந்து தர்மத்தை வாழ்க்கையாக நம்புபவர்கள், ஹிந்து இயக்கங்களின் தலைவர்கள், ஸநாதன ஹிந்து தர்மத்தை முன்வைத்து அரசியல் நடத்துபவர்கள் \- இவர்கள் எல்லாருமே புராணங்கள் மீதும், வேதம், ஆகமம், புராணங்கள் மீதும் ஶ்ரத்தை வந்து, 'அவை சத்தியம்' என்று புரிந்துகொண்டால்தான், அவர்கள் political power-ஐகூட ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய interest-க்கு advance பண்ணுக்கொள்வதற்கும் உபயோகிப்பார்கள். இல்லையென்றால், ஸநாதன ஹிந்து தர்மத்தை தங்களுடைய political power-ஐ gain பண்ணுவதற்குத்தான் உபயோகப்படுத்துவார்கள்.
வேதமோடு ஆகமம், புராணம் சத்தியம் என்று புரிந்தால், உணர்ந்து கொண்டால், அவர்கள் தங்களுடைய political power-ஐ ஹிந்துமதத்தினுடைய interests-ஐ further பண்ணுவதற்கு உபயோகப்படுத்துவார்கள். Political power-ஓ அல்லது judicial power-ஓ அல்லது executive power-ஓ \- அவர்களுக்கு என்ன power இருக்கிறதா, அதையெல்லாம் ஹிந்து தர்மத்திற்காக பயன்படுத்துவார்கள். இல்லையென்றால், ஸநாதன ஹிந்து தர்மத்தை தங்களுடைய political gain-க்கு உபயோகிப்பார்கள். அவ்வளவுதான்.
ஏனென்றால், உள்ளுக்குள் இந்த ஸத்யங்கள் உண்மை என்று புரிந்து convince ஆகவில்லை என்றால், மேம்போக்காக இப்படியே ஒரு social-ஆக விளையாடிவிட்டு விட்டுவிடுவார்கள். இதனுடைய ஆழம், முக்கியத்துவம் இவையெல்லாம் புரியாமல், ஸநாதன ஹிந்து தர்மத்தை வெறும் ஒரு political power gain-னுக்காகவும் அல்லது ஏதாவது ஒரு social power gain, ஏதாவது அந்த time-ல் அந்த power gain-னுக்காக உபயோகப்படுத்திவிட்டு விட்டுவிடுவார்கள்.
ஹிந்துக்களே, விழித்துக்கொள்ளுங்கள்\! ஹிந்து இயக்கங்கள் என்று நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ, ஹிந்து அரசியல்வாதிகள் என்று நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ, ஹிந்து குருமார்கள் என்று நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ, ஹிந்து சமூகத் தலைவர்கள் என்று நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ, அவர்கள் எல்லோரும் நம்முடைய வேதம், ஆகமம், புராணங்களை ஆழமாக நம்புகிறார்களா? கடைப்பிடிக்கிறார்களா? என்பதை மட்டும் பார்த்துவிடுங்கள் ஐயா. அதுதான் அடிப்படை baseline scale.
இன்று ஒரு சின்ன சோசியல் மீடியா challenge. Are you living spiral or linear? Tell us. Do you plan your life like climbing a ladder always up or dancing in a spiral rhythmic? Which one actually makes you happier? Drop your honest answer below.
அதாவது இந்த ஏணியின் மீது ஏறுகின்ற மாதிரியே உங்கள் வாழ்க்கைப் போய்கொண்டிருக்கிறதா? நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் வாழ்க்கையில் எந்த ஏணியின் மீது ஏறினாலும், கடைசியில் உச்சியில் வந்தீர்காளானால், தனியாக உட்கார்ந்திருக்கின்ற குரங்கு மாதிரி இருக்கும்.
சிலபேர் என்னிடம் கேட்பதுண்டு, 'இந்த rat race-ல் மாட்டிக்கொண்டேன் சாமி. என்ன பண்ணலாம்?' என்று. ஏய், நன்றாகப் புரிந்துகொள்ளப்பா, rat race-ல் நீ ஜெயித்தாலும், கடைசியில் நீ rat தான்பா.
நீ எந்த ஏணியின் மீது ஏறினாலும், உச்சிக்குப் போனபிறகு, உச்சாணிக் கொம்பில் தனியாக குரங்கு மாதிரி உட்கார்ந்திருப்பீர்கள். அப்படி வாழ்கின்றீர்களா? அல்லது இந்த spiral rhythm-ல் வாழ்க்கையினுடைய spiral rhythm-ல் வாழ்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கீன்றீர்களா? எது உங்களை உண்மையில் மகிழ்ச்சியாக்குகின்றது? உங்களுடைய honest answer-I comment on YouTube, post your thoughts on Twitter tagging @SriNithyananda.
இப்பொழுது புரிந்துகொள்ளுங்கள். பாகவதம் சொல்கின்ற ஒரு கதை... ப்ரஹ்மா, பகவான் ஸ்ரீ க்ரு'ஷ்ணருடைய நண்பர்களான கோபியர்கள் மற்றும் அவர்கள் மேய்கிக்கின்ற மாடுகள் \- இவர்கள் எல்லாவற்றையும் மறைத்துவிடுகின்றார். அந்த கதையை எல்லோரும் பாகவதத்தில் படித்திருப்பீர்கள். இல்லையென்றால், முடிந்தால் AI-க்கு சென்று வேண்டுமானாலும் படித்துவிடுங்கள். உங்களுக்குப் புத்தகத்தைத் தேடிப் படிப்பதற்கு நேரம் இல்லையென்றால், AI-க்கு சென்று வேண்டுமானாலும் படித்துவிடுங்கள். AI-யில் படித்தீர்களானால் புரியும்.
ரொம்ப அழகாக இந்த original ஸ்லோகங்களுடன், original ஸுத்ரங்களுடன் அழகாக document பண்ணியிருக்கின்றார். இந்த original நிகழ்வை அப்படியே document பண்ணியிருக்கின்றார் வ்யாஸர்.
பகவான் ஸ்ரீ க்ரு'ஷ்ணர் வந்து அவருடைய flute-ஐ play பண்ணிக்கொண்டு, ப்ரு'ந்தாவனத்தில் friends உடனும், மாடுகளுடனும் மற்ற கன்றுகளுடனும், விலங்குகளுடனும் இருக்கின்றார். மாடுகளை எல்லாம் மேய்த்துகொண்டு picnic போயிருக்கின்றார்கள். அந்த flute music எல்லாம் enjoy பண்ணிக்கொண்டு அவர்கள் எல்லாம் ஆனந்தமாக இருக்கின்றார்கள்.
ப்ரஹ்மாவிற்கு அடி மனதில் ஒரு ஆழமான ஒரு curiosity\! 'எல்லாரும் சொல்றாங்களே பரந்தாமனே க்ரு'ஷ்ணனா வெளிப்பட்டிருக்கின்றார் என்று? இது சாத்தியமா? இங்கு மேலே பார்த்தால் அவர் பாட்டுக்கு யோக நித்ரையில் தான் படுத்திருக்கிறார். நானும் பார்த்துவிட்டேன். ஆனால் இங்கே இந்த சின்ன பையனாக உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருக்கார். அவரே இங்கு வந்து விளையாடிக்கொண்டு இருப்பதாகச் சொல்கின்றார்கள், உண்மைதானா? Over- ஆக கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்களே. அல்லது ஒருவேளை அவர்கள் எல்லாரும் அந்த க்ரு'ஷ்ணருடைய charisma-ல் விழுந்து, they are enchanted. ஒருவேளை அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் க்ரு'ஷ்ணருடைய charisma-ல் விழுந்துட்டதனால் க்ரு'ஷ்ணனையே கடவுள் என்று சொல்றாங்களா? என்னதான் நடக்குது?' என்று ஆழமான ஒரு curiosity\!
பத்தாவது ஸ்காந்தத்தில், 13வது canto-வில் பாகவத புராணம் இதை document பண்ணுகின்றது. ப்ரஹ்மா ரொம்ப curios-ஆக இருந்து என்ன செய்கின்றார்… அந்த மொத்த கோபியர்களையும், பசுக்களையும் மறைத்துவிடுகின்றார்.
தஸ்மாத் கூகம் ஸ்தானம் ஜக்ருஹே ரொம்ப அழகாக அந்த கதையை பாகவதம் document பண்ணுகின்றது.
தஸ்மாத் கூகம் ஸ்தானம் ஜக்ருஹே வத்ஸான் கோபான் அதாபரே ப்ரஹ்மா ஸ்வாயம் சக்த்யா தேஷாம் நித்ராம் ஜகௌ ஹரேர் ந்ருப
ப்ரஹ்மா மாயையாலான மறைவிடம் நிறைந்த இடத்திலே, கன்றுகளையும், கோபாலக் குழந்தைகளையும் ஒளித்து வைத்தான். தன் சொந்த மாயா ஶக்தியால், ஹரியின் நண்பர்களான அவர்களை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினான்.
இது கதை. அதாவது ப்ரஹ்மா வந்து மொத்த கோபர்களையும், மாடுகளையும் கடத்திச்சென்று, மறைத்து வைத்து அவர்களை எல்லாம் தூக்கத்தில் போட்டுவிடுகின்றார்.
க்ரு'ஷ்ணன் தன்னுடைய பரம ஶக்தியினாலே, தன் இருப்பின் ஸாந்நித்யத்தின் ஶக்தியினாலேயே மொத்தமாக அந்த கோபர்கள், ஆடுகள், மாடுகள் அனைத்தாகவும் மாறி, அவர் பாட்டுக்கு மொத்த ப்ரு'ந்தாவனத்தினுடைய வாழ்க்கையும் இயற்கையாக நடத்திக்கொண்டிருக்கின்றார்.
ப்ரஹ்மா என்ன செய்கின்றார், இந்த கோபர்களையும், விலங்குகளையும் \- அந்த பசு, கன்று அனைத்தையும் அழரவெ சுமேருவில், தன்னுடைய ஶக்தியை உபயோகப்படுத்தி மறைத்துவிடுகின்றார். க்ரு'ஷ்ணன் வந்து பார்க்கின்றார்... இவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டதைப் பார்த்து ஒரு விநாடி கூட அவர் கலங்கவில்லை.
தன்னுடைய யோக ஶக்தியினாலே அத்தனையும் அப்படியே… creating identical duplicate boys and cows, indistinguishable from the original. அதாவது மூலத்திற்கு, original-க்கு எந்த விதமான வித்தியாசமும் இல்லாத, அப்படியே copy-யை தன்னுடைய யோக ஶக்தியால் உருவாக்கிவிடுகின்றார். உருவாக்கி... அந்த கோபர்கள், அந்த ஆடு மாடுகள் எல்லாம் எப்பொழுதும் போன்று \- continuing their life. அவர்கள் விளையாடுகிறார்கள், சாப்பிடுகின்றார்கள், living normal life. இது இந்த பூமண்டலத்தில் ஒரு full வருடம் \- period-க்கு இது நடக்கின்றது. எல்லாம் smooth-ஆக போய்கொண்டிருக்கின்றது.
ப்ரஹ்மா வந்து திரும்ப எட்டிப் பார்க்கின்றார். பார்த்து நடுநடுங்கிப் போய்விடுகின்றார் ப்ரஹ்மா\! 'என்னய்யா... என்ன நடக்குது?' நான்தான் எடுத்து மறைத்து வைத்தேன். இங்கு பார்த்தால் க்ரு'ஷ்ணன் அந்த கோபர்களோடும், அந்த விலங்குகளோடும் ஒன்றுமே நடக்காதது மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கின்றாரே... விளையாடிக்கொண்டிருக்கின்றாரே...
உடனே ப்ரஹ்மா என்ன செய்கின்றார், correct-ஆக அந்த சுமேருவை எட்டிப் பார்கின்றார். பார்த்தால் அவர் எடுத்துச்சென்று அளித்து வைத்த அந்த real boys, அந்த மாடுகள் எல்லாம் தூங்கிக்கொண்டு அங்குதான் இருக்கின்றார்கள். ஆனால் இங்கும் தனியாக இருக்கின்றார்கள்.
அதாவது சுமேரு மலையில் இவர் ஒளித்து வைத்த அந்த பசங்கள், கோபர்கள், மாடுகள் அங்கேயும் இருக்கின்றார்கள். அதேமாதிரி கோபர்களும், மாடுகளும் இங்கு ப்ரு'ந்தாவனத்திலும் இருக்கின்றார்கள். ஒரு விநாடியில் ப்ரஹ்மா விழித்துக்கொள்கின்றார்\! அவருடைய புத்திக்கு தெளிவு வந்து விடுகின்றது.
'க்ரு'ஷ்ணர் தன்னுடைய யோக ஶக்தியினாலே இது மொத்தமாகவும் விரிந்து, இயல்பாக ப்ரு'ந்தாவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்'' என்று புரிந்துவிடுகின்றது,
இது ப்ரஹ்மாவிற்குப் புரிந்த உடனேயே, க்ரு'ஷ்ணன் தன்னுடைய நான்கு கரங்களோடு \- சதுர்புஜனாக, விஷ்ணு வடிவத்தைக் காட்டி, 'ஒவ்வொரு கோபனும், ஒவ்வொரு பசுவும் \-கன்றும் நானே' என்பதையும், அது ஒவ்வொன்றுகுள்ளேயும் இந்த ப்ரபஞ்சமே இருப்பதையும் காட்டுகிறார்.
ப்ரஹ்மா நடுநடுங்கி போய் க்ரு'ஷ்ணனுடைய மகிமையைத் துதித்துப் போற்றி, தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, பெருமானை சோதித்ததற்கு மன்னிப்பு கேட்டு, அந்த original கோபர்களையும், அந்த விலங்குகளையும் \- எல்லாவற்றையும் விடுவித்துவிடுகின்றார்.
அங்கு க்ரு'ஷ்ணர் யோக ஶக்தியால் manifest செய்தார் அல்லவா? அவர்கள் எல்லாம் அவருக்குள்ளேயே மறைந்துவிடுகின்றார்கள். அவருக்குள்ளேயே திரும்பி எடுத்துகொள்கின்றார். எடுத்துவிட்டு க்ரு'ஷ்ணன் ப்ரு'ந்தாவனத்தில் normalyல \-ஐ restore பண்ணிவிடுகின்றார். முதலிலேயே normalஉல-ல் தான் வைத்திருந்தார். இப்பொழுது manifest செய்தவர்களை எடுத்துவிட்டு, இந்த original நபர்களுடன் normaly-ல \-ஐ manage பண்ணிடுவிடுகின்றார்.
க்ஷணம் ஆகதோ ப்ரஹ்மா தம் த்ருஷ்ட்வா விஸ்மிதம் மானச: ஏக வருஷம் க்ரு'தம் தஸ்ய கோபானாம் வத்ஸ வத்ஸலா:
ஒரு கணமே சென்றதாக நினைத்து திரும்பி வந்த ப்ரஹ்மா, அதைப் பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்தான். அவன் இல்லாத அந்த ஒரு கணம் கோபாலர்களுக்கும், கன்றுகளுக்கும் ஒரு முழு வருடம் ஆகிவிட்டதைக் கண்டான்.
இது வரலாறு, நடந்த வரலாறு. இந்த time dilation-ஐ பற்றி உங்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கின்றது. ப்ரஹ்மாவிற்கு வந்து ஒரு க்ஷணம் என்று அவர் நினைத்தது, இங்கு ஒரு வருடம். பூலோகத்தில் ஒரு வருடம். உண்மையில் அவர் பூலோகத்தில்தான் மறைத்து வைக்கின்றார். ஆனால், 'தான் ஒரு க்ஷணம்தான் மறைத்து வைத்ததாக' அவர் நினைத்தார். ஒரு க்ஷணத்திற்குள் திரும்பிப் பார்க்கும்போது இங்கு ஒரு வருடம் ஆகிவிட்டிருந்தது. ஆனால் அந்த ஒரு வருடத்தாலே எந்த மாற்றமும் இல்லாமல், க்ரு'ஷ்ணன் தன்னுடைய யோக ஶக்தியினாலே இந்த லீலையை நடத்திக்கொண்டிருக்கின்றார். இது time dilation-ஐ பற்றி நீங்கள் புரிந்துகொள்வதற்கான வரலாற்றுப் பதிவு.
அடுத்தது, மன்னர் மஹாசேனர், அவருடைய வரலாற்றைப் புரிந்துகொள்வோம். இது திரிபுர ரகசியத்தில \- ஜ்ஞாந காண்டத்திலே இந்த மன்னர் மஹாசேனருடைய வரலாறு பதிவிடப்பட்டிருக்கின்றது.
தத்தாத்ரேயர், பகவான் தத்தாத்ரேயர் பரசுராமருக்கு இந்த ஜ்ஞாந காண்டத்தை உபதேசிக்கின்றார். அந்த பரம ஜ்ஞாநத்தைப் பற்றி விளக்கும்பொழுது இந்த கதையைச் சொல்லி, இந்த வரலாற்றுப் பதிவைச் சொல்லி இந்த ஸத்யத்தை விளக்குகின்றார்.
மஹாசேனன், அரசன் சுசேனருடைய தம்பி. சுசேனருடைய தம்பி மஹாசேனர். சுசேனர் என்ன செய்கின்றார், அஸ்வமேத யாகத்திற்காக தன்னுடைய மகன்களையும் குதிரைகளையும் அனுப்புகின்றார். அவருடைய மகன்களும் குதிரைகளும் திடீரென்று காணாமல் போய்விடுகின்றார்கள். 'அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வா' என்று சொல்லி மஹாசேனரை, தன்னுடைய தம்பியை அனுப்புகின்றார் சுசேனர். தம்பி மஹாசேனர் அண்ணனுடைய மகன்களையும், குதிரைகளையும் தேடிச் சென்றுகொண்டே இருக்கின்றார். அந்த நேரத்தில் கந்த சைலம் எனும் இடத்திற்கு, கந்த சைலத்திற்கு வந்து சேருகின்றார். அந்த இடத்தில், கந்த சைலத்தில் ஒரு இளம் ஜ்ஞாநியை அவர் பார்க்கின்றார்.
ஒரு பெரிய பாறைக்கு கீழே ஒரு இளம் ரிஷியை பார்க்கின்றார். அந்த இளம் ரிஷியிடம் சென்று கேட்கிறார், ''என்னுடைய அண்ணனின் மகன்களைப் பார்த்தீர்களா? அவர்கள் கொண்டு வந்த அஸ்வமேத யாகக் குதிரையைப் பார்த்தீர்களா?'' என்று.
அப்பொழுது அந்த இளம் ரிஷி என்ன செய்கின்றார், ஒரு பாறைக்குள்ளே ஒரு ப்ரபஞ்சத்தையே அவர் உருவாக்கி இருப்பதை, தன்னுடைய தபோ ஶக்தியினால, ஆத்ம ஶக்தியினால் உருவாக்கியிருப்பதைக் காட்டி, 'உள்ளே வா' என்று கூப்பிடுகின்றார்.
அந்த மஹாசேனரால் இந்த உடலோடு, இந்த ஸ்தூல உடலோடு அந்த ப்ரபஞ்சத்திற்குள் நுழைய முடியவில்லை. அதனால் அந்த ஸ்தூல உடலை வைத்துவிட்டு ஸுக்ஷ்ம சரீரத்தின் மூலமாக உள்ளேச் செல்கின்றார் Subtle body – astral body வழியாக உள்ளேச் செல்கின்றார்.
உள்ளே போய் பார்த்தால், மஹாசேனன் அந்த ஒரு பாறைக்குள்ளே ஒரு முழு ப்ரபஞ்சமுமே இருப்பதை பார்க்கின்றார். ப்ரபஞ்சம், நக்ஷத்ரங்கள், சூரியன், சந்த்ரன், க்ரஹகங்கள், எல்லா நாடுகள், kingdoms, even அவருடைய சொந்த kingdom, அரசன் சுசேனன், அண்ணன் சுசேனன் மற்றும் தன்னையே பார்க்கின்றார். அத்தனையும் உள்ளே பார்க்கின்றார். அந்தப் பாறைக்குள் ஒரு நாள்தான் அவர் இருக்கின்றார். ஒரு நாளும் ஒரு பகலும்தான் உள்ளே இருக்கின்றார். இந்த ஒரு நாள்தான், ஒரு பகல் \- ஒரு இரவுதான் உள்ளே இருக்கின்றார். அப்பொழுதே மஹாசேனனுக்கு மிகத்தெளிவாகப் புரிகின்றது காலம் என்பது வியவகாரிக ஸத்யம், relative realவைல. சுநடயவiஎந சுநயடவைலஇ யுடிளழடரவந சுநயடவைல கிடையாது. பாரமார்த்திக ஸத்யம் அல்ல. காலமே ஒரு வியவகாரிக ஸத்யம்தான் என்று புரிகின்றது.
மஹாசேனன் எப்படியோ ஒரு பகல், ஒரு இரவு உள்ளே இருந்துவிட்டு வெளியில் வருகின்றார். வெளியில் வந்து திரும்ப அவருடைய human body-ஐ process பண்ணி திரும்ப விழித்துப் பார்க்கும்பொழுது, 1.2 பில்லியன் human years முடிந்து போய்விட்டிருந்தது. எல்லாமே மாறிவிட்டிருந்தது. அவர் உள்ள போகும்போது இருந்த நாடுகள், உலகம் எதுவும் இல்லை, எல்லாமே மாறி போய்விட்டிருந்தது. 1.2 பில்லியன் human years முடிந்து திரும்பி வருகின்றார்.
அவருக்கு அப்பொழுதுதான் தெளிவாகத் தெரிகின்றது. பரத்தினுடைய ஸத்யமும், இகத்தின் ஸத்யத்தைப் பற்றிய உண்மைகள் புரிகின்றது.
ரொம்ப எளிமையாக சொல்லவேண்டும் என்றால், கனவிற்குச் செல்கின்றீர்கள், 30-40 வருடங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை, 30-40 வருடங்களை ஒரு 4-5 மணி நேரம் கனவில் பார்த்துட்டு வெளியில் வருகின்றீர்கள். உண்மையில் 4-5 மணி நேரம்தான் அங்கு இருந்தீர்கள். ஆனால் 30-40 வருடங்கள் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள். இது low என்பதனால் இந்த ratio. High எனும்பொழுது வேறு ratio. அவ்வளவுதான். High எனும்போது அங்கு வெறும் ஒரு நாள், ஒரு பகல் \- ஒரு இரவு வாழ்ந்துவிட்டு வருகின்றீர்கள். ஆனால் இங்கு வந்தால் 1.2 பில்லியன் வருடங்கள் போய்விட்டன.
இந்த experience \-ஆல் மஹாசேனன்... இந்தக் காலம், இந்த material world- இதனுடைய illusory nature... அதாவது இது எப்படி மாயை, illusion என்பதைப் புரிந்துகொண்டு, இது நிரந்தரமானது அல்ல... இந்த நாடு, power, அரசன், இது எல்லாமே temporary. இப்பொழுது நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை அவ்வளவுதானே தவிர, இது power கிடையாது. இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த நாடு, அரசன், இந்த kingship, power, duty இவையெல்லாம் temporary nature, நிரந்தரமானது இல்லை என்று புரிந்துகொண்டு, ப்ரபஞ்சத்தின் பரம ஸத்யம் என்ன? ஆன்மாவின் பரம ஸத்யம் என்ன? ஜீவ, ஈஸ்வர, ஜகத் இவைகளைப் பற்றிய பரம ஸத்யத்தை அடைய வேண்டி, ஜ்ஞாநப் பாதையிலே பரம ஜ்ஞாநத்தை, பரமானுபூதியைத் தேடி சென்றுவிடுகின்றார். மற்ற எல்லாவற்றையும் துறந்துவிட்டு பரமானுபூதியைத் தேடி சென்றுவிடுகின்றார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த மஹாசேனன் கதையை (வரலாற்றை) ரொம்ப அழகாக த்ரிபுர ரகசியம் ஜ்ஞாநகாண்டம் விவரிக்கின்றது.
ஏஷ சௌலோக்ய காலேன காலஹ பர்யவஸன்னபூஹு தினமேகம் த்ரிலோகேஷு வர்த்ததே ஷட் த்ரிசத் வர்ஷ சஹஸ்ரகோடௌ
இந்த லோகங்களை சுற்றிப்பார்ப்பதற்காக, கடந்தகாலம் மூன்று லோகங்களிலும் ஒரு நாளாக மட்டுமே அமைந்தது. ஆனால் அதே காலம் பூமியில் கணக்கிடப்படும்பொழுது 36 ஆயிரம் கோடி ஆண்டுகள் \- 1.2 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது.
அடுத்த ஸத்யத்தைக் கேளுங்கள்: நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இயற்கை, nature is rhythmic. Linear கிடையாது. Nature is rhythmic. Linear கிடையாது.
Western science உங்களுக்குச் சொல்லிக்கொடுத்ததன்படி நீங்கள் எல்லாம் இப்பொழுது practice பண்ணிக்கொண்டிருப்பதன்படி இது linear கிடையாது, rhythmic.
In nature, nothing moves in straight line. Everything cycles in rhythms and patterns that repeat while changing. Planets orbit, seasons, planets orbit ...
அதனால் ஸத்யத்தை புரிந்துகொள்ளுங்கள். Yet, நாம் இந்த conventional-ஆக, society-ல் time-ஐ linear-ஆகவே imagine பண்ணிக்கொண்டு, ஒரு அம்பு மாதிரி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடதிற்குப் போவது. அதாவது past-ல் இருந்து future-க்கு போவது என்று நினைத்துக்கொண்டே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இந்த peculiar-ஆன western concept, reality-யோடு, அனுபூதியோடு, அனுபவத்தோடு match ஆகின்றதா என்று பார்த்தால் \- இல்லை. இது just ஒரு superficial interpretation.
இந்த linear time என்கின்ற concept-ல் மாட்டிக்கொண்டுதான் நாமெல்லாம் என்ன நினைக்கிறோம், history வந்து ஒரு ultimate goal \-ஐ நோக்கி அப்படியே progress ஆகிக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றது என்று நினைத்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் ஸத்யம் அது அல்ல. ப்ரபஞ்சம் உண்மையில் ஒரு தாண்டவம். Rhythmic patterns of energy transforming.ப்ரபஞ்ச ஶக்தி ஒரு rhythmic-ஆன ஆனந்தத் தாண்டவம், ப்ரஹ்மாண்ட தாண்டவம் ஐயா. Cosmic dance-நடராஜர் ஐயா.
அதனால்தான் ஸநாதந ஹிந்து தர்மம் காலச் சக்ரத்தை நடராஜருக்குப் பின்னால் ஒரு cycle, circlic \-ஆகக் காட்டுகின்றது ஐயா. Spiral-ஆக, cyclical-ஆக evolve ஆகிக்கொண்டே இருக்கின்ற, same, yet different.
அந்த நடராஜருக்குப் பின்னால் இருக்கின்ற அந்த circle-ஐ பார்த்தீர்களானால், மேலே தீ ஜ்வாலை இருக்கும். அதற்கு என்ன அர்த்தமென்றால், circle-ஆக இருந்தாலும் evolve ஆகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கின்றது.
Circle, more like a spiral, but evolving. Cyclical, yet evolving. Music does not make sense as a straight line. it make sense as rhythm and harmony with the repetition and variation. Musical time is rhythmic, not linear. Time in the universe is also rhythmic.
இறுதியாக இது அத்தனை மூலமாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியதை சொல்கின்றேன் ஐயா, சாரத்தை சொல்கின்றேன். தயவு செய்து ஆழ்ந்து கேளுங்கள்: உள்ளுக்குள் காலம் என்கின்ற train move ஆகின்ற தண்டவாளம்தான் நீங்கள். காலம் என்கிற திரைப்படம் ஓடுகின்ற திரைதான் நீங்கள் என்று தெளிவாகப் பார்த்தீர்களானால், இதை அனுபூதியாக உணர உணர, இந்த time dilation எல்லாம் புரிந்துவிடும்.
ஒரு அதி ஸுக்ஷ்மமான ரகசியத்தைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஸமாதி பழகப் பழக, ஸமாதியில உட்கார உட்கார, உங்களுடைய ப்ராணன் பரமஶிவ ப்ராணனோடு இணைந்து, ஒவ்வொரு ஸ்வாஸமும் கைலாஸ time zone-க்கு போய்விட்டு, மீண்டும் இந்த உடலிற்குள் வரும்.
அந்த inhaling, உள் இழுத்தல் exhaling-ஆக மாறுகின்ற தருணம் அல்லது exhaling உள்-இழுத்தலாக மாறுகின்ற தருணத்தில், அது பரமஶிவப் பரம்பொருளோடு, உங்கள் ப்ராணன் பரமஶிவப் ப்ராணனோடு இணைந்து இயங்குகிறது.
'பரமஶிவ ப்ராணாயிஹ ப்ராணா பரமஶிவ ஜீவ இஹஸ்தித: பரமஶிவ ஸர்வேந்த்ரியாணி பரமஶிவ வாங் மன சக்ஷு த்வக் ஸ்ரோத்ர க்ராண ப்ராணாயிஹாகத்ய ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா' என்பது அனுபூதியாக மாறும்.
ஒரு க்ஷணம் இந்த ஸமாதியில் பரமஶிவ ப்ராணனை அனுபவித்துவிட்டீர்களானால், உங்கள் காலம் \- அகத்திலும், இகத்திலும் time dilation நடந்து, அதன் quality, quantity \- இரண்டுமே உச்சத்தை அடைகின்றது. நீங்கள் காலாதீதராக மாறுகிறீர்கள். வாழும்பொழுதே பரமஶிவமாகவே வாழ்கின்றீர்கள். அகத்தில் ஜீவன் முக்தியும், இகத்தில் பெரு வெற்றியும், பரத்தில் பரமாத்வைதம் \-பரமஶிவ ஸாயுஜ்யத்திலும் நீங்கள் ஒரே நேரத்தில் இருப்பதை, spontaneous- ஆக, simultaneous- ஆக, synergetic-ஆக அனுபூதியாகப் பார்ப்பீர்கள். இதுதான் இந்த ஸத்ஸங்கத்தின் சாரம்.
இந்த YouTube poll ஒன்றை நடத்தியிருகின்றோம். When you think about time passing in your life, how do you primarily feel?
Helpless, dragged along என்று 37% Caught in suffering என்று 16% Witness and stable என்று 30% Stillness, Upanishad- என்று 17% vote பண்ணியிருக்கின்றீர்கள்.
நீங்கள் எல்லோரும் ஸமாதி பழகி, ஸமாதியில் நிலைத்து, பரமஶிவ ப்ராணனோடு ஒன்றி, மஹா கைலாஸத்தின் கால விரிவை அனுபூதியாய் கண்டு, அதனால் அகத்திலும், இகத்திலும் உங்கள் காலத்தின் குணமும், அளவும் பரமஶிவ காலமாகவே மாறி, பரமஶிவத்தில் நிலைபெற்று, பரமானந்தத்தில் நிலைபெற்று, நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள். \------------------------------------------------------------------------------------------------------------------------------------
[image1]: <>
[image2]: <>